திங்கள், 29 மே, 2017

திங்கக்கிழமை 170529 :: ஒடியல் கூழ் - அதிரா ரெஸிப்பி


யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ்
ம்மா வாங்கோ!! ஐயா வாங்கோ!! அண்ணா வாங்கோ!!  
அக்கா வாங்கோ!!தம்பி வாங்கோ!!. வெரி சோரி:) தங்கை இங்கு எனக்கு யாருமில்லை.. நான் தான் தங்கை:)[அதாரது முறைக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்போ அதுவா முக்கியம்:)]  அதிரா வீட்டில் கூழாம்..   குடிக்கலாம் வாங்கோ. 

லங்கையில், குறிப்பா வடபகுதியில்தான் பனை மரங்கள் அதிகம், அதனால வட பகுதியில்தான் இந்த ஒடியல் கூழ் பேமஸ். பனங்கிழங்கை பச்சையாகக் காயப்போட்டு, அரைத்து மாவாக்கி எடுப்பதுதான் “ஒடியல் மா” என அழைக்கப்படுகிறது.

னங்கிழங்கை, அவித்துக் காயப்போட்டால் அது புளுக்கொடியல் ஆகிறது, புளுக்கொடியல் மாவும் கடைகளில் கிடைக்கும், அது பின்னேரங்களில் சீனி தேங்காய்ப்பூச் சேர்த்து குழைத்து  உருண்டைகளாக்கி, ஒரு பிளேன் ரீ உடன் சாப்பிட, என்ன சுசி:) தெரியுமோ.

ரி ,,, கனக்க அலட்டாமல் விசயத்துக்கு வாறேன்:)..

டியல்மா இலங்கைத் தமிழ்க் கடைகள் எங்கும் கிடைக்கும் . புது மாவாகப் பார்த்து வாங்க வேணும், பழைய மாவெனில், கூழ் தடிப்பிருக்காது, நிறமும் ஒருவிதக் கறுப்பாகிடும்(நம்மட அஞ்சுவைப்போல).

தேவையானவை:

[இங்கின இடையில் ஒரு அவசரக்குறிப்பு: இம்முறை கூழ் செய்தபோது நேக்கு.. பலாக்கொட்டையும், முருங்கி இலையும் வீட்டில் இருக்கவில்லை.. அதனால அவை இரண்டும் மிஸ்ஸிங் படத்தில்:).. அதுக்காக என் கிட்னியை ஊஸ் பண்ணி என்ன பண்ணினேன் என்பதை கீழே சொல்றேனே.. பொறுமை பிளீஸ்ஸ்.. அவசரப்படக்குடா சொல்லிட்டேன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. பொறுமையா சொல்லித்தருவேன் அதிரா:)].

ஒடியல் மா -7, 8 மேசைக்கரண்டிகள்.
பயத்தங்காய் - 200 கிராம்
பலாக்கொட்டை - 200 கிராம்
மரவள்ளிக்கிழங்கு - 200 கிராம்
முருங்கி:) இலை..- இரு கைப்பிடி.
வெங்காயம், செத்தல் மிளகாய் தேவைக்கு[இதுபற்றி விளக்கமா கீழே சொல்கிறேன்], மிளகு ஒரு பத்து.
புளி - கொஞ்சம் பெரிய தேசிக்காய் அளவு உருண்டை தேவைப்படும்[விதை நீக்கியது], மற்றும் உப்பு.
பொதுவாக இதுக்கு குத்தரிதான் பாவிப்போம், வெள்ளை அரிசி பாவிப்பதில்லை, ஒரு உள்ளங்கை அளவு அரிசி போதும்.
[இங்கு நான் சொன்ன அளவை, கூழ் க்கு வைத்துக் கொண்டு, மேலதிகமாக உங்கள் விருப்பத்துக்கு, பலாக்கொட்டை + மரவள்ளிக் கிழங்கு எடுத்து வையுங்கோ பொரிக்க]

செய்முறை:
முதலில், ஒடியல் மாவை அளந்து எடுத்து, ஒரு டிஸ் இல் போட்டு, மாவின் மேலே நிற்கத்தக்கதாக, தண்ணி விட்டு ஊறவிடுங்கள். ஒரு மணித்தியாலம் ஊறினால் போதும்.
செத்தல் மிளகாயை உங்கள் உறைப்புக்கேற்ப..6-10 . அதனோடு, மிளகையும் சேர்த்து தண்ணியில் ஊறவிடுங்கோ.[மிளகு கட்டாயமில்லை].
புளியை சுடுநீரில் ஊற விடுங்கோ.
யத்தங்காய் முழுவதையும் கறிக்கு வெட்டுவதுபோல வெட்டி வையுங்கோ.
லாக்கொட்டைகளை நான்காக வெட்டி எடுங்கோ,
முருங்கி இலைகளைத் துப்பரவாக்கி எடுத்துக் கொள்ளவும்.
ரவள்ளிக் குட்டிக் குட்டி மொத்தத் துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.[இல்லை எனில் அவிக்கும்போது முற்றிலும் கரைந்து விடும்].

ப்போ ஊறிய மாவின் மேலே கறுப்பாக தண்ணி மிதந்திருக்கும்.. அது மாவில் உள்ள கயர். அதனை மெதுவாக ஆட்டாமல் அசைக்காமல் வடித்து ஊற்றி விடுங்கோ வெளியே. 
வடிக்க முன்
திகம் ஒட்ட வடித்தால். நமக்கே தெரியாமல் மாவும் சேர்ந்து போய் விடும் ஜாக்க்க்க்ர்ர்தை:). இப்படி வடிக்காது விட்டால் கூழ் கொஞ்சம் கசப்பு சுவையாக இருக்க வாய்ப்பிருக்கு.. அதனால்தான் இப்படி.
வடித்த பின்
சிலபேர், 2, 3 தடவைகள் இப்படி தண்ணி விட்டு விட்டு, ஊறவிட்டு வடிப்பார்கள்.. தேவையில்லை அப்படி, கயர்த்தன்மை உடம்புக்கு நல்லது என்பது என் கருத்து.
========================================================================
சே..சே..சே... எவ்ளோ நேரம்தான் Dish உடன் காத்திருக்கிறதாம் 
கூழ் குடிக்க கர்ர்ர்ர்ர்:)
========================================================================
ரிசியை கொஞ்ச நேரம் முன், கழுவி ஊற வைத்திடுங்கோ.  பின்பு, அரிசி, பலாக்கொட்டை, பயிற்றங்காய், மரவள்ளிக்கிழங்கு அனைத்தையும் சேர்த்து தண்ணி விட்டு, உப்பும் சேர்த்து அவிய விடோணும்.

விந்து வந்ததும், செத்தல் மிளகாய் + மிளகை அப்படியே மிக்ஸியில் அரைத்து எடுத்து, இதனுள் ஊத்தவும்.

பின்னர் பிளி கரைத்து விடவும்... அனைத்தும் நன்றாகக் கொதித்து வந்ததும், இந்த மாவை, தண்ணியில் கரைத்து கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் [நெருப்பைக் குறைத்து வைத்துக் கொண்டே] கலக்கவும்.

ப்பவும் கேற்றிலில் கொதி தண்ணி ரெடியாக வைத்திருங்கோ, சில நேரம் கட்டியாகப் பார்க்கும், அந்நேரம் கொதி தண்ணி சேர்த்து கூழ் பதத்துக்கு எடுக்கவும்.

கொதித்ததும் முருங்கி இலை:) சேர்த்து இறக்கவும்.[என்னிடம் முருங்கி இலை இல்லாததால், நான் ஸ்பினாஜ் கீரையில் கொஞ்சம் குட்டியாக அரிந்து சேர்த்தேன்]

டையில், உங்கள் விருப்பத்துக்கு.. குட்டியாக பலாக்கொட்டை, மரவள்ளிக் கிழங்கை வெட்டிப் பொரித்தெடுக்கவும். நல்ல சைனிஸ் செத்தல் வட்ட வட்ட மிளகாய்(உருண்டை) கிடைக்கிறதெல்லோ... அதிலும் எடுத்து, வெங்காயமும் வெட்டி பொரித்து எடுத்து வைக்கவும்.
பொரித்த அனைத்தையும் ஒன்றாகக் கலந்தாலும் ஓகே அல்லது, ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப டிஸ் இல் கூழை எடுத்து, இவற்றைப் போட்டும் குடிக்கலாம்.[இது சைவக் கூழ் என்பதால், நிட்சயம் இவற்றைப் பொரித்துச் சேர்த்தால்தான் சுவையாக இருக்கும்].
======================================================================
வ்வ்வ்வ் பொயிண்டுக்கு வந்தாச்சு... ஹையோ இந்தத் துவக்கைப் பார்த்து ஏன் இப்பூடிப் பயந்து ஓடுறீங்க.. இது உங்களை மிரட்ட அல்ல, உங்களை மிரட்டுவேனோ:).. இங்கு வரும் நீங்க எல்லாம் வோட் போட்டு மகுடம் சூட வச்சிடுவீங்க என, எனக்குத் தெரியும், ஆனாலும் இந்த ஹன் ஐ எடுத்துப்போய் மிரட்டி:), உங்கள் நட்புக்களையும் கூட்டியாந்து வோட் பண்ண வச்சிடுங்கோ:)..

முக்கியமா, பகவான் ஜீ இடம்தான் தமனா நட்பு நண்பர்கள் அதிகம் இருக்கிறார்கள்... நான் வாடகை எல்லாம் கேய்க்க மாட்டேன்:), நீங்க தாராளமா எடுத்துப்போய்க் காட்டி,  அவர்கள் எல்லோரையும் மிரட்டிக் கூட்டி வந்து வோட் போட வச்சிடுங்கோ:) கனக்க ஆசைப்பட மாட்டேன் ஒரு 15 போதும்..:) ஹா ஹா ஹா அதாரது உறுமுறது..:) வோட் நேக்கு.. மகுடம் சகோ ஸ்ரீராமுக்கு.[நன்றி ஸ்ரீராம்.. இதனை வெளியிடுவதற்கு]

தங்கூ தங்கூ.. இது சூட்டவிருக்கும் மகுடத்துக்குச் சொன்னேனாக்கும்:)
____()____()____()____()____()____()____( நன்றி)____()____()____()____()____()____




[ அதிரா.   உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் பனங்கிழங்கு பக்கமே போகமாட்டேன்.  நீங்கள் சொல்லியிருப்பதைப் படத்தில் பார்த்து ரசிக்கிறேன்!    ஹேமா ரெஸிப்பி போடுகிறேனே...  எனக்கு ஒருசிறு பகுதி சுவைக்க வந்துவிடும்!  இனி நெல்லை, உங்களிடம், அஞ்சுவிடம் எல்லாமும் மாதிரிக்குக் கேட்கப்போகிறேன்.  :))  புத்தக விமர்சனத்துக்கு புத்தகக் காபி அனுப்புவது போல!!  - ஸ்ரீராம் ]


நன்றி அதிரா...  எனக்கு வேலையே இல்லை.  நீங்கள்  கொடுத்தபடியே "கோப்பி பேஸ்ட்"  பண்ணிட்டேன்! -   ஸ்ரீராம் 






தமிழ்மணத்தில் வாக்களிக்க லிங்க்






130 கருத்துகள்:

  1. சுவையான கஞ்சி! கூழாக இருக்கும் போல. கேழ்வரகு மாவில் இப்படிச் செய்து பார்க்கலாம் என நினைக்கிறேன். இங்கெ பனங்கிழங்கு மாவுக்கு எங்கே போறது? பனை மரங்களே காண முடியறதில்லை! :(

    பதிலளிநீக்கு
  2. மனுசாள் சாப்பிடுறா மாதிரி இது நாள் வரை இங்கே ரிசிப்பி போட்டாங்கோ இப்ப என்னாடான்னா மாட்டுக்கு சாப்பிடுறா மாதிரி ரிசிப்பி சொல்லுறாங்கோ ஹீஹீ

    பதிலளிநீக்கு


  3. புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது மாதிரி இந்த மதுரைத்தமிழன் பட்டினி கிடந்து சாவானே தவிர இந்த கூழ் மட்டுமல்ல எந்த கூழையும் சாப்பிடமாட்டான்

    பதிலளிநீக்கு
  4. கூழ் செய்முறையைப் படிச்சாச்சு. த ம 2. சின்ன வயதில் வீட்டுக்குத் தெரியாமல் பனங்கிழங்கு, பனம்பழம் சாப்பிட்டிருக்கிறேன். சமீபத்தில் பனங்கிழங்கு சாப்பிட்டபோது சின்னவயது ருசி இல்லை. பனங்கிழங்குக்குப் பதில், அரிசி அல்லது கேப்பை மாவும் சரியா வரும்.

    குத்தரி (சுந்தரி எங்க இங்க வந்தான்னு பார்த்தேன். கைக்குத்தல் அரிசி) . பிளி- புளி, துவக்கு- துப்பாக்கி, ஹன்-Gun, தங்கூ- Thank You. அவ்வளவுதானா இல்லை விட்டுப்போச்சா?

    அது இல்லை, அதுக்குப் பதிலா இதைச் சேர்த்தேன்லாம் எழுதியிருக்கீங்களே. ஒடியல் (பனங்கிழங்கு) மாவாவது இருந்ததா இல்லை அதுக்குப் பதில் வேற ஏதாவது போட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  5. அதிரா,கூழைக் குடிங்க கூலா இருங்க ,இன்னைக்கு மகுடம் உங்களுக்கே :)

    பதிலளிநீக்கு
  6. பனங்கிழங்கும், தேங்காய்சில்லும் இணைத்து விரும்பி சாப்பிட்டு இருக்கிறேன்

    இது புதுமையாக இருக்கிறதே....

    பதிலளிநீக்கு
  7. நெல்லைப் பக்கம் பனங்கிழங்கு கிடைக்கும் காலத்தில் நிறைய வாங்கி மஞ்ச்ள் பொடி சேர்த்து வேக வைத்து காயபோட்டு காய்ந்தவுடன் பொடி செய்வார்கள் . (இட்லி பொடி)
    கூழ் கேள்வி பட்டதில்லை. படங்களுடன் செய்முறை அருமை. ரமாலான் நோன்பு ஆரம்பித்து விட்டது இனி நோன்பு கஞ்சி, நோன்பு கூழ் சமையல் குறிப்புகள் வரும்.
    ஓட்டு போட்டு விட்டேன் அதிரா.

    //ஹேமா ரெஸிப்பி போடுகிறேனே...  எனக்கு ஒருசிறு பகுதி சுவைக்க வந்துவிடும்!  இனி நெல்லை, உங்களிடம், அஞ்சுவிடம் எல்லாமும் மாதிரிக்குக் கேட்கப்போகிறேன்.  :))  புத்தக விமர்சனத்துக்கு புத்தகக் காபி அனுப்புவது போல!!  - ஸ்ரீராம் ]//

    எப்படி அனுப்ப போகிறீர்கள் கூழ் அதிரா?

    பதிலளிநீக்கு
  8. இன்ட்ரஸ்டிங்! கேழ்வரகு மாவில் செய்து பார்க்கிறேன்... தாங்க்ஸ்!

    பதிலளிநீக்கு
  9. ஆஆ ஓடியல் கூழ்... பனங்கிழங்கு கூழ்...அதிரா....நான் சின்ன வயதில் இலங்கையில் இருந்தப்ப...யாழ் லிருந்து தாத்தாவின் நண்பர் ஒருவர் குடும்பம் வருவார்கள். அவர்கள் சமைத்துக் கொடுத்துச் சாப்பிட்டதுண்டு...அப்புறம் சாப்பிட்டதில்லை...இங்கு மாவு கிடைக்குமா தெரியலை. அரிசி மாவு...அல்லது
    மர வள்ளிக்கிழங்கு மாவில் செய்து பார்க்கலாம்....சூப்பர் ரெசிப்பி...அதிரா....

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அது சரி அதிரா நீங்கதான் இங்க சின்ன பிள்ளையா....இல்லை இல்லை.....அனு இருக்காங்க.....கீதா இருக்காங்க...ஏஞ்சல் இருக்காங்க....மதுரை இருக்காங்க...கீதாக்கா இருக்காக....ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அது சரி அதிரா நீங்கதான் இங்க சின்ன பிள்ளையா....இல்லை இல்லை.....அனு இருக்காங்க.....கீதா இருக்காங்க...ஏஞ்சல் இருக்காங்க....மதுரை இருக்காங்க...கீதாக்கா இருக்காக....ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  12. பூசார்.... அழகு....பாப்பா அழகு.....

    கீதா

    பதிலளிநீக்கு
  13. பனங்கிழங்கு ..இங்கு எப்போதேனும் கிடைக்கிறது....கிடைக்கும் போது.. வாங்கிவிடுவேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. போனால் போகிறது என்று மிகவும் கஷ்டப்பட்டு, பல்லைக்கடித்துக்கொண்டு, வோட் போட்டு விட்டேன். அதற்கான அத்தாட்சியையும் இதோ இங்கு இணைத்துவிட்டேன்.

    thamizmanam

    இடுகைத்தலைப்பு:
    திங்கக்கிழமை 170529 :: ஒடியல் கூழ் - அதிரா ரெஸிப்பி

    உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!

    பதிலளிநீக்கு
  16. மற்றபடி தலையோடு கால் இங்கு சொல்லியுள்ளது ஏதும் எனக்கு வெளங்கிக்கிட ஏலலை. (இது எங்கட முருகு பாஷையாக்கும்)

    பதிலளிநீக்கு
  17. காட்டியுள்ள பத்து படங்களும் அருமை. ’டாப்’பில் காட்டியுள்ள முதல் படம் மிகவும் ’டாப்’பாக உள்ளது. அஞ்சாவது படத்தில் வாலை ஆட்டும் பூனையின் வாலைப் பிடித்து நறுக்கிவிடலாமா எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  18. அஞ்சாவது பத்தியின் கடைசியில் உள்ள கருப்படித்த எழுத்துக்கள் மட்டும் என் கண்களுக்குப் பளிச்சென்று தெரிகின்றன. பூனைக்கு மொத்தத்தில் இன்று போதாத காலம்தான். பிஷ்ஷின் கைகளால் மோட்சம் கிடைக்க உள்ளது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. இதைப்படித்ததும் எனக்கோர் கதை ஞாபகத்திற்கு வருகிறது. அதை எப்படி இங்கு எடுத்துச் சொல்வது என யோசித்து வருகிறேன். முடிந்தால் சொல்லவும் செய்வேன். ஜாக்கிரதை !

    ’அவர்கள் உண்மைகள்’ மட்டுமே இங்கு என்னைப்போலவே உண்மையைப் பேசியுள்ளார்.

    மீதி பேர்களெல்லாம், நமக்கேன் வம்பு என நினைத்து, ஏதோ ஒரு பயத்தில் பூசி மொழுகி கமெண்ட்ஸ் கொடுத்துள்ளனர்.

    //நன்றி அதிரா... எனக்கு வேலையே இல்லை. நீங்கள் கொடுத்தபடியே "கோப்பி பேஸ்ட்" பண்ணிட்டேன்! - ஸ்ரீராம் //

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! நல்ல மனிதரான வெளியீட்டாளரும் ஏதோ ஒரு பயத்தில் அப்படியே “கோப்பி பேஸ்ட்” பண்ணி விட்டதாக ஒத்துக்கொண்டுள்ளார். :)

    மொத்தத்தில் எல்லோருக்கும் உள்ளூர ஒரு பயம் உள்ளது. அதுவே இந்த ரெஸிப்பி கொடுத்துள்ளவரின் வெற்றியாகும்.

    பதிலளிநீக்கு
  20. நான் போட்டுள்ள கமெண்ட்ஸ்களுக்காக கடைசியில் காட்டியுள்ள பூனை தன் துப்பாக்கியால் என்னை சுட்டுவிடப்போகிறது என்பது எனக்கும் நன்றாகத் தெரியும்.

    அதனால் என்ன?

    ‘ஆறிலும் சாவு .... நூறிலும் சாவு’ எனச் சொல்லுவார்கள்.

    அதனால் என் மனதில் பட்ட நிறை குறை எல்லாவற்றையும் வெள்ளந்தியாக இங்கு சொல்லிவிட்டேன்.

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! பகிர்வுக்கு நன்றிகள்.

    நெல்லைத்தமிழன் அவர்களால் மட்டுமே பேரும் புகழும் பெற்ற இந்த வலைத்தள திங்கட்கிழமைகளை நினைத்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன். இன்னும் நான் இருக்கப்போவதோ சில மணி நேரங்கள் மட்டுமே .... என்பதால்.

    பதிலளிநீக்கு
  21. @அதிரா - பூசார் படங்களும் ஒரு சேதியைச் சொல்கிறது. முதலில், 'எப்படா கூழ் வரும்'னு, காத்திருந்து காத்திருந்து தூங்கிவழியுது. அப்புறம் கூழைச் சாப்பிட்டபின் அதுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை, அந்தப் பூசாரோட ரிலேஷன் பூசார், கோபத்தோடு, துப்பாக்கியோடு ரெடியா இருக்கு. அது கண்ணுல அகப்பட்டீங்க.... அவ்வளவுதான்.

    @கோபு சார் - எனக்கும் கூழ் பிடிக்காது. அதுக்குப் பதிலா, கேப்பை மாவில், நல்லா ஜீனி போட்டு கஞ்சி செய்து கொடுத்தாலோ அல்லது பாசிப்பருப்பு பாயசம் செய்துகொடுத்தாலோ சாப்பிடுவேன். வேற வழியில்லை, வெயில் வாட்டி எடுக்குது என்றால், கரைச்ச மோர் சாதத்தில் புது மாங்காய் ஊறுகாய் (உங்களுக்கு உப்பு நாரத்தை) கலந்து சாப்பிடலாம். அது சரி... ஒன்று ரெண்டு செய்முறை நான் அனுப்பினது உங்களுக்குப் பிடிக்கவில்லையா. ரொம்ப கலாய்க்கிறீங்களே என்னை. உங்களால்தான்,என் வெறும் படத்தையும் செய்முறையையும் நம்பாமல், ஸ்ரீராம் (அதான்.. ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்தான்) இனிமேல் Sample அனுப்பினால்தான் பிரசுரம் செய்வேன் என்று கன்டிஷன் போடுகிறார்.

    பதிலளிநீக்கு
  22. http://commentphotos.com/gallery/CommentPhotos.com_1418155017.jpg

    பதிலளிநீக்கு
  23. ஆஆஆஆஅ!!!!! எனக்கு தலை சுத்துது கண்ணு இருட்டுது யாராவது இருக்கீங்களா ப்ளீஸ் கால் தி போலீஸ் ...ஆம்புலன்ஸ் வந்தா என்னை காப்பாத்திடுவாங்க போலீஸ் ப்ளீஸ் காட்ச் தட் cat

    பதிலளிநீக்கு
  24. முதல் வந்த அவர்கள் ட்ரூத் கோபு அண்ணா நெல்லை தமிழன்எல்லாருக்கும் ஆழ்ந்த வாழ்த்துக்கள் ...நல்ல வேளை என் கண்ணில் லேட்டா தான் பட்டது ரெஜிப்பி :)

    பதிலளிநீக்கு
  25. @கோபு அண்ணா ஹாஆஆ ஹா ..இப்போ தைரியமா சொல்லுங்க போனவாரம் அந்த போலி இந்த பூனைதானே :)

    பதிலளிநீக்கு
  26. அதிரா :) இன்னிக்கு தான் உங்க க்ராண்ட் டாட்டர் பேத்தி படத்தை பார்க்கிறோம் மிக்க நன்றி குட்டி அவங்க பாட்டி அம்மம்மா கிராண்ட்மா அம்மாச்சி தாத்தி அதிரா சின்ன வயசில் இருந்த மாதிரியே இருக்கா :)

    பதிலளிநீக்கு
  27. அம்மாடி படிச்சி முடிச்சிட்டேன் ..அதிரா இந்த ரெசிப்பி முந்தி உங்ககிட்ட பிளாக்கில் கேட்டு நீங்க படம் போடாம சொன்னிங்க ஆனா இப்படி படத்தோட பார்க்கும்போது நல்லா விளங்குது ..எனக்கு இப்போ எந்த கிழங்கை வாயில் வச்சாலும் கசக்குற மாதிரி இருக்கு கொஞ்சம் உடம்பு சரியானதும் இன்சூரன்ஸ் எடுத்து வச்சிட்டு உயில் எழுதி வச்சிட்டு செய்றேன்

    பதிலளிநீக்கு
  28. நான் கொஞ்சம் பதிவை கண்ட அதிர்ச்சியில் இருப்பதால் சற்று ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வருவேன் அதுவரை நெல்லைத்தமிழன் ,ட்ரூத் கோபு அண்ணா அனைவரும் கலாய்ப்பார்கள் என நம்புகிறேன் :)

    பதிலளிநீக்கு
  29. நான் சொல்ல நினைக்கும் ஒரு சிறுகதை இதோ:
    ====================================================

    ஒரு போர் வீரன் காட்டுப்பாதையில் நெடுந்தூரம் தன் குதிரையில் தனியாகப் பயணம் செய்கிறான். இரவு கும்மிருட்டாக உள்ளது. அங்கு எங்காவது தங்கிவிட்டு மறுநாள் ஊருக்குத் திரும்ப நினைக்கிறான். அவனுக்கு வயிறும் பசிக்கிறது.

    அங்கு தூரத்தில் ஓர் குடிசை வீட்டில் மங்கலாக ஓர் விளக்கு எரிவது தெரிகிறது. அந்த வீட்டு வாசலில் நிறைய கூழாங்கற்கள் குவிந்துள்ளன. அந்த வீட்டை நோக்கிக் குதிரையில் மெதுவாகச் செல்கிறான்.

    அந்த வீட்டில் ஒரு வயதான கிழவி மட்டுமே இருக்கிறாள். அவள் மஹா கஞ்சமானவள். தவித்த வாய்க்கு தண்ணீர் கூடக் கொடுக்க விரும்பாதவள். அவளிடம் தன் பசிக்கு ஏதேனும் கிடைக்குமா எனக் கேட்டுப் பார்க்கிறான். அவள் பஞ்சப்பாட்டு பாடியவாறு தன்னிடம் ஒன்றும் இல்லை எனச் சொல்லி விடுகிறாள்.

    அந்த வீட்டுத் திண்ணையில் இரவு மட்டும் படுத்துக்கொள்வதாகச் சொல்கிறான் அந்த வீரன். வேறு வழியில்லாமல் அந்தக்கிழவியும் இதற்கு ஒத்துக்கொள்ள நேரிடுகிறது.

    சற்று நேரம் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது, வந்தவன் சொல்கிறான்: “இங்கு இவ்வளவு கூழாங்கற்கள் குவிந்து இருக்கின்றனவே. இவற்றை உபயோகித்து மிகவும் ருசியான பாயஸம் செய்யலாமே பாட்டி” என்கிறான்.

    “அப்படியா! கூழாங்கற்களில் பாயஸம் செய்ய உனக்குத் தெரியுமா? என வியப்புடன் வினவுகிறாள், அந்தப் பாட்டி.

    “நீங்கள் அனுமதித்தால் இப்போதே உங்கள் எதிரிலேயே செய்ய ஆரம்பித்து விடுவேன்” என்கிறான் வந்தவன்.

    பாட்டியும் அவனை உள்ளே சமையல் அறைக்குள் அனுமதித்து கூழாங்கல் பாயஸம் செய்யச் சொல்கிறாள்.

    பாட்டியைவிட்டு ஒரு ஐம்பது கூழாங்கற்களைப் பொறுக்கி நன்கு சுத்தமாக அலம்பிக்கொண்டு வரச் சொல்கிறான். பாட்டியும் அது போல செய்து கொண்டு வந்து தருகிறாள்.

    அடுப்பைப் பற்ற வைக்கிறான். மிகப்பெரிய பாத்திரத்தை அதில் ஏற்றுகிறான். சுத்தப்படுத்திய கூழாங்கற்களை அதில் போடுகிறான். கொஞ்சம் நீர் ஊற்றிக் கொதிக்க விடுகிறான். ஒரு கிலோ ஜீனி கேட்கிறான். ஒரு கிலோ வறுத்த சேமியா கேட்கிறான். ஒரு லிட்டர் பால் கேட்கிறான். ஒரு ஐம்பது முந்திரிப்பருப்புக்களை உடைத்து நெய்யில் வறுத்துத் தரச் சொல்கிறான். அத்துடன் கொஞ்சம் திராக்ஷைப்பழமும் சேர்த்து வறுக்கச் சொல்கிறான். ஏலக்காயை கொஞ்சம் பொடி செய்து தரச் சொல்கிறான். எல்லாவற்றையும் அந்தப் பாத்திரத்தில் போட்டு நன்கு கிளறிக்கொண்டே இருக்கிறான்.

    “பாட்டி .... இந்த கூழாங்கல் பாயஸத்தை உடனே சாப்பிடக்கூடாது. கூழாங்கற்கள் வேக நிறைய நேரமாகும். நீங்கள் போய் படுத்துத் தூங்குங்கோ. நானும் நள்ளிரவு வரை நன்கு கிளறிவிட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, போய் திண்ணையில் படுத்துக்கொள்கிறேன். நன்கு ஆறிய பிறகு நாளை காலையில் குடித்தால் இது பிரமாதமாக இருக்கும்” எனச் சொல்கிறான்.

    அந்தப் பாட்டியும் எப்படியோ காசு செலவில்லாமல் கூழாங்கற்களில் பாயஸம் கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியில் நிம்மதியாகச் தூங்கச் செல்கிறாள்.

    விடியற்காலம் எழுந்த அவன் கூழாங்கற்களை மட்டும் அந்தப் பாத்திரத்தில் தங்கிவிடுமாறு வடிகட்டி விட்டு, பாயஸம் முழுவதையும் தானே குடித்து விட்டு, அதில் கொஞ்சம் தன் குதிரைக்கும் குடிக்கக் கொடுத்து விட்டு, பாத்திரத்தை மூடிவைத்து விட்டு, குதிரையில் ஏறி சிட்டாகப் பறந்து சென்று விடுகிறான்.

    காலையில் தாமதமாக எழுந்த பாட்டி, திண்ணையில் படுத்துள்ளவன் எழுந்து வருவதற்குள் பாயஸம் முழுவதையும் தானே குடித்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் பாத்திரத்தைத் திறக்கிறாள். உள்ளே வெறும் கூழாங்கற்கள் மட்டுமே உள்ளதைக் கண்டு கோபத்துடன், பொங்கி எழுந்து வெளியே வந்து பார்க்கிறாள். அங்கு ஒருத்தரையும் காணாமல் ஏமாந்து போகிறாள் ...... அந்த கஞ்ச மஹாப் பிரபுவான கிழவி.

    இந்தக்கதை இத்துடன் சுருக்கமாக முடிவடைகிறது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  30. இந்த மேற்படி கதையை ஏன் இங்கு நான் சொல்லியுள்ளேன் என்றால் ........

    நாங்களெல்லாம் .........

    பனை மரத்திலிருந்து கிடைக்கும் நொங்கினை விரும்பிச் சாப்பிடுவோம்.

    சுவையான பதநீர் கூட சில சமயம் நானே சாப்பிட்டுள்ளேன்.

    பனை மரத்திலிருந்து இறக்கப்படும் ’கள்’ ஜோராக ‘கிக்’ கொடுக்கும் என, கள் குடித்த சிலர் ஸ்டெடியாக நின்று என்னிடம் சொல்லியுள்ளதையும் ஒருவித போதையுடன் நானும் கேள்விப்பட்டுள்ளேன்.

    பனங்கிழங்கினை சில ஜனங்கள் விரும்பிச்சாப்பிடுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

    பன ஓலையில் விசிறி செய்வார்கள். கோடைக்கு அவை நமக்குக் காற்று அளிக்கும்.

    பனை ஓலைகளால் முறங்கள் கூடைகள் போன்ற எவ்வளவோ கைவினைப் பொருட்களும் செய்வார்கள்.

    இவ்வாறு பனைமரம் எவ்வளவோ பலனளிக்கும் தான்.


    >>>>>

    பதிலளிநீக்கு
  31. ஆனால் இந்தப்பதிவினில் கூழாங்கல் பாயஸத்துக்குக் கூழாங்கல்லுடன் போடப்பட்ட ஜீனி, வறுத்த சேமியா, பால், நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி, திராக்ஷைப்பழம் போல கீழ்க்கண்ட ஏராளமான சமாச்சாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதுவும் கேவலம் ஒரு கூழ் செய்ய ......

    //ஒடியல் மா -7, 8 மேசைக்கரண்டிகள்.
    பயத்தங்காய் - 200 கிராம்
    பலாக்கொட்டை - 200 கிராம்
    மரவள்ளிக்கிழங்கு - 200 கிராம்
    முருங்கி:) இலை..- இரு கைப்பிடி.
    வெங்காயம்,
    செத்தல் மிளகாய் தேவைக்கு [இதுபற்றி விளக்கமா கீழே சொல்கிறேன்],
    மிளகு ஒரு பத்து.
    புளி - கொஞ்சம் பெரிய தேசிக்காய் அளவு உருண்டை தேவைப்படும்[விதை நீக்கியது],
    மற்றும் உப்பு.
    பொதுவாக இதுக்கு குத்தரிதான் பாவிப்போம், வெள்ளை அரிசி பாவிப்பதில்லை, ஒரு உள்ளங்கை அளவு அரிசி போதும்.
    [இங்கு நான் சொன்ன அளவை, கூழ் க்கு வைத்துக் கொண்டு, மேலதிகமாக உங்கள் விருப்பத்துக்கு, பலாக்கொட்டை + மரவள்ளிக் கிழங்கு எடுத்து வையுங்கோ பொரிக்க] //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !

    பதிலளிநீக்கு
  32. @கோபு அண்ணா இது ரஷ்ய நாட்டு கதை ஒன்றில் இதே கான்செப்ட் ஆனா கூழாங்கல்லுக்கு பதில் கோடாரி வரும் ..கோடாரி கேப்பை கூழ் ..நான் படித்த கதையில் வழிப்போக்கன் அந்த மகா கஞ்சா மூதாட்டியிடம் ஒரு கோடாரியும்கூழுக்கான பொருட்களையம் கேட்டு வாங்கி கூழ் காய்ச்சுவார் :)

    பதிலளிநீக்கு
  33. ஜிலேபி,குலோப்ஜாமூன்,பாயாசம் என்ன இருந்தாலும் இந்த பனக்கிழங்கு கூழுக்கு ஈடாகாது அதிரா. முதலில் கை கொடுங்க.. கை குலுக்கதான்.. உங்கட முறையில்தான் எங்கட வீட்டில செய்வா அம்மா. நல்ல டேஸ்ட்.. என்னிடம் மா இல்லை.மற்ற பொருட்கள் இருக்கு.செய்யவேணும். பனக்கிழங்கு துவையல் ம் சூப்பரா இருக்கும்.
    குட்டி அதிரா,வால் ஆட்டும் பூசார் அழகு. எங்க ஊர் குறிப்பை தந்தமைக்கு நன்றி அதிரா.
    /இன்சூரன்ஸ் எடுத்து வச்சிட்டு உயில் எழுதி வச்சிட்டு செய்றேன்// ஹா..ஹா.. அஞ்சு. அந்தளவுக்கு பயப்பிடத்தேவையில்லை அஞ்சு..

    பதிலளிநீக்கு
  34. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹையோ இன்று பார்த்து மீ ரொம்ப லேட்டாயிட்டனேஏஏ... அஞ்சூஊஊஊ கிடைச்சிடுச்சா.. கிடைச்சிடுச்சா... ஹையோ பகவான் ஜீ ஓடுறாரே எதுக்கூஊஊஊஊ... வைரம் பதிச்சதுதானே?:)..

    பதிலளிநீக்கு
  35. //தமிழ்மணம் மகுடம்
    கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
    திங்கக்கிழமை 170529 :: ஒடியல் கூழ் - அதிரா ரெஸிப்பி - 12/12 //

    apart from jokes :)
    எப்பவும் நீங்கதான் காமெடி ராணி athiraa

    பதிலளிநீக்கு
  36. //
    [ அதிரா. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் பனங்கிழங்கு பக்கமே போகமாட்டேன். நீங்கள் சொல்லியிருப்பதைப் படத்தில் பார்த்து ரசிக்கிறேன்! ஹேமா ரெஸிப்பி போடுகிறேனே... எனக்கு ஒருசிறு பகுதி சுவைக்க வந்துவிடும்! இனி நெல்லை, உங்களிடம், அஞ்சுவிடம் எல்லாமும் மாதிரிக்குக் கேட்கப்போகிறேன். :)) புத்தக விமர்சனத்துக்கு புத்தகக் காபி அனுப்புவது போல!! - ஸ்ரீராம் ]///

    மிக்க நன்றி ஸ்ரீராம். ஹா ஹா ஹா நீங்க ஒரு ரிக்கெட் போட்டு வந்து ஒரு மாதம் தேம்ஸ்க்கு வாங்கோவன்.

    என்னோடைய ரெசிப்பிகள் எப்பவும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.. என் தமிழைப்போல:) நீங்கதான் பழகோணும் அஜீஸ் பண்ண:)..புதுசு புதுசா ட்ரை பண்ணோனும்.... இன்று கலவரம் வரலாம் போலிருக்குதே:)... நான் புள்ளெட் புரூவ் காரில்தான் வந்து கொண்டிருக்கிறேன்ன் ஹா ஹா..:)

    பதிலளிநீக்கு
  37. வாங்கோ கீதாக்கா முதலாவதா வந்திருக்கிறீங்க... இந்தாங்கோ ரோஸ்... https://i.ytimg.com/vi/L9byeiD1k_o/maxresdefault.jpg.

    இது எங்கள் மாமி எப்பவும் ஒடியல்மாவுக்குப் பதிலாக மரவள்ளிக்கிழங்கை அரைத்து செய்வா. ஆனா ஒடியல் மாத்தான் உடம்புக்கு மிக நல்லது. நீங்க சொல்வதுபோலவும் செய்யலாம் என நினைக்கிறேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  38. Avargal Unmaigal said...
    மனுசாள் சாப்பிடுறா மாதிரி இது நாள் வரை இங்கே ரிசிப்பி போட்டாங்கோ இப்ப என்னாடான்னா மாட்டுக்கு சாப்பிடுறா மாதிரி ரிசிப்பி சொல்லுறாங்கோ ஹீஹீ///

    வாங்கோ ட்றுத்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சகோ ஸ்ரீராம்ம்ம்ம் கவனியுங்கோ இங்கின வந்துபோகும் “தங்கங்களை” எல்லாம் ஏதோ மாஆ.......:) எனச் சொல்றார் ட்றுத்:).. ட்றுத் எதுக்கும் இண்டைக்கு கட்டிலுக்குக் கீழயே இருங்கோ சன்னியை வசலிலேயே இருக்கச் சொல்லுங்கோ:).

    பதிலளிநீக்கு
  39. ஆவ்வ்வ்வ்வ்வ் மகுடம் கிடைச்சிட்டுதூஊஊஊஊஊஊஊஉ:)வோட் போட்ட, போடப்போகும் அனைவருக்கும் நன்றிகள்... இங்கின வந்த சிலர் வோட் போடவில்லை:(..

    சந்தோசம் பொயிங்குதே.. சந்தோசம் பொயிங்குதே.... சந்தோசம்... இவ்ளோ ஸ்பீட்டா மகுடம் கிடைச்சு நான் எங்கும் பார்த்ததில்லை.... வந்த வேகத்திலயே வோட் போட்ட அனைவருக்கும் நன்றி..., எங்குமே போடாமல் இங்கு வந்து எனக்காக வோட் போட்ட கோபு அண்ணனுக்கு நன்றி.. தன்பக்க ஸ்பீட்டைக் குறைச்சு வழிவிட்ட பகவான் ஜீக்கு நன்றி...

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ் ஏன்ன்ன்ன் சில இடங்களிலிருந்து புகைவருதூஊஊஊஊஉ ஹா ஹா ஹா

    http://i.myniceprofile.com/1274/127478.gif

    பதிலளிநீக்கு
  40. ///புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது மாதிரி இந்த மதுரைத்தமிழன் பட்டினி கிடந்து சாவானே தவிர இந்த கூழ் மட்டுமல்ல எந்த கூழையும் சாப்பிடமாட்டான்///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இருங்க உங்களை அந்தக் க்ராஜ் ல பூட்டி வைக்கச் சொல்றேன் மாமியிடம்:).. தொடர்ந்து ஒரு கிழமைக்கு ஒடியல் கூழ்தான்:)..

    எங்கள் வீட்டிலும் எந்த இனிப்புக் கூழும் பிடிக்காது ட்றுத்... இது மட்டுமே பிடிக்கும்...[அசைவம் சேர்ப்போம்] மிக்க நன்றி ட்றுத்... கையைக் காட்டுங்கோ:) ஆஆ இருக்கட்டும்.. இருக்கட்டும்:).

    பதிலளிநீக்கு
  41. //நெல்லைத் தமிழன் said...
    கூழ் செய்முறையைப் படிச்சாச்சு. த ம 2. சின்ன வயதில் வீட்டுக்குத் தெரியாமல் பனங்கிழங்கு, பனம்பழம் சாப்பிட்டிருக்கிறேன். சமீபத்தில் பனங்கிழங்கு சாப்பிட்டபோது சின்னவயது ருசி இல்லை. பனங்கிழங்குக்குப் பதில், அரிசி அல்லது கேப்பை மாவும் சரியா வரும்.//

    வாங்கோ நெல்லைத்தமிழன்.. அரிசிமாவில் நல்ல சுவை வருமா எனத் தெரியல்ல... மரவள்ளிக்கிழங்கு.. நீங்க சொல்லும் கேப்பை சரியாக இருக்கும்.

    //குத்தரி (சுந்தரி எங்க இங்க வந்தான்னு பார்த்தேன். கைக்குத்தல் அரிசி) . பிளி- புளி, துவக்கு- துப்பாக்கி, ஹன்-Gun, தங்கூ- Thank You. அவ்வளவுதானா இல்லை விட்டுப்போச்சா?///

    ஹா ஹா ஹா அது குத்தரிசி.. சி விட்டுப் போச்ச்ச்ச்:) ஸ்ரீராமுக்கு அனுப்பிய பின் கவனிச்சேன்... ஆனா திருப்பி திருத்த சொன்னால் அவருக்கு கஸ்டமாகிடுமோ என நினைச்சு பேசாமல் விட்டு விட்டேன்ன்:)

    ஏனையவற்றுக்கு கரெக்ட்டா சொல்லிட்டீங்க ஹா ஹா ஹா நல்லவேளை இம்முறை ழ/ள தப்பிக்கொண்டது போலும்:).

    //அதுக்குப் பதிலா இதைச் சேர்த்தேன்லாம் எழுதியிருக்கீங்களே.//
    என் எழுத்துப் புரியவில்லைப்போலும்... அது முருங்கி இலை இல்லை, அதுக்குப் பதில் கீரை:)..

    மியாவும் நன்றி நெல்லைத் தமிழன்.

    பதிலளிநீக்கு
  42. //திண்டுக்கல் தனபாலன் said...
    விளக்கம் பலே ஜோர்...//

    வாங்கோ டிடி மியாவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  43. ///கரந்தை ஜெயக்குமார் said...
    அருமை
    நன்றி நண்பரே
    தம +1//

    வாங்கோ.. உங்கள் கவலைக்கு மத்தியிலும் வந்து வோட்டும் போட்டிட்டீங்க மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. //ஒடியல்மா இலங்கைத் தமிழ்க் கடைகள் எங்கும் கிடைக்கும். புது மாவாகப் பார்த்து வாங்க வேணும், பழைய மாவெனில், கூழ் தடிப்பிருக்காது, நிறமும் ஒருவிதக் கறுப்பாகிடும் (நம்மட அஞ்சுவைப்போல).//

    தங்க நிற மீன் போல சும்மா தகதகன்னு ஜோராக மின்னுவாளாக்கும் என நீங்களே உங்க ஃப்ரண்டைப்பற்றி பொறாமைப்பட்டு ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறீர்கள். நினைவிருக்கட்டும்.

    இங்கு கருப்பாக மாற்றிக் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். :( கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

    பதிலளிநீக்கு
  45. //Bagawanjee KA said...
    அதிரா,கூழைக் குடிங்க கூலா இருங்க ,இன்னைக்கு மகுடம் உங்களுக்கே :)//
    ஹா ஹா ஹா சொன்ன வாக்கைக் காப்பாற்றிட்டீங்க.. மிக்க நன்றி.. பின்ன இந்த மகுடம் என் ரெண்டு கிழமை உழைப்பெல்லோ:) கூக்குரல்போட்டு துவக்கு காட்டி, கத்தி காட்டி மிரட்டி உங்கள் பக்கம் கொன்றோல் பண்ணி இப்பூடி, நித்திரையால எழுந்து பார்க்க மகுடம் தலையில் இருக்கு.. எனக்கு லெக்ஸும் ஓடல்ல காண்ட்ஸும் ஆடல்ல:)..

    காதைக்கொண்டுவாங்கோ.. ஆஆஆ போதும் போதும் நில்லுங்கோ சொல்றன்:- உங்களுக்கு நேற்று தேம்ஸ்கரை வோட்டு நாம் இருவருமே போடவில்லை தெரியுமோ?:) ஹா ஹா ஹா... அதிராவோ கொக்கோ:) எப்பூடியெல்லாம் பாடுபடவேண்டிக்கிடக்கு ஒரு மகுடத்துக்கு.. இப்படி ஹேம் ஆடுவதிலும் ஒரு பயங்கர சந்தோசமே.. மிக்க நன்றி பகவான் ஜீ..

    பதிலளிநீக்கு
  46. //KILLERGEE Devakottai said...
    பனங்கிழங்கும், தேங்காய்சில்லும் இணைத்து விரும்பி சாப்பிட்டு இருக்கிறேன்

    இது புதுமையாக இருக்கிறதே....//

    வாங்கோ கில்லர்ஜீ.... நெடுகவும் ஒரே சமையலையே சாப்பிடாதீங்க.. இப்படி புதுமையா ட்ரை பண்ணுங்கோ.. கல்லெறி பட்டாலும் பறவாயில்லை.. இனி இப்படிப் புதுமைகளை இங்கின நீங்க அடிக்கடி காணலாம் ஹா ஹா ஹா அதாரது கொலை வெறியோடு துரத்துவது:)..

    மிக்க நன்றி கில்லர்ஜீ.

    பதிலளிநீக்கு
  47. ’கூழுக்கும் ஆசை .... மீசைக்கும் ஆசை’ என்று சொல்லுவினம்.

    இங்கு இந்த மீசைக்காரப் பூனைக்கு கூழைப்பற்றியே ஒரு ரெஸிப்பி கொடுத்து வெளியிடவும் ஆசை.

    கும்மி அடிச்சு கோலாட்டம் போட்டு நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் பெறவும் ஆசை.

    தமிழ்மணத்தில் நம்பர் ஒன்னாக மணக்கவும் ஆசை.

    ஆசையோ ..... ஆசை ..... பேராசை என நான் சொல்லவே மாட்டேன்.

    எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். வாழ்த்துகள்.

    ’கூழானாலும் குளித்துக் குடி’ என்று சொல்லிவினம்.

    இங்கு வந்து இதனைப் படித்துள்ள எத்தனை பேர் குளித்தார்களோ தெரியவில்லை.

    நான் இப்போ மீண்டும் குளிக்கப்போகிறேன் .... அதாவது தலை முழுகப் போகிறேன்.

    ஏதோ எங்கட நெல்லைத் தமிழன் ஸ்வாமீக்காக திங்கட்கிழமைகளிலும் + சிறுகதைகளுக்காக செவ்வாய்க்கிழமைகளிலும் மட்டும் இங்கு வந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்.

    அதற்கும் ஆபத்து வரப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் இன்றே தோன்றிவிட்டன. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    பதிலளிநீக்கு
  48. //கோமதி அரசு said...
    நெல்லைப் பக்கம் பனங்கிழங்கு கிடைக்கும் காலத்தில் நிறைய வாங்கி மஞ்ச்ள் பொடி சேர்த்து வேக வைத்து காயபோட்டு காய்ந்தவுடன் பொடி செய்வார்கள் . (இட்லி பொடி)
    கூழ் கேள்வி பட்டதில்லை. படங்களுடன் செய்முறை அருமை. ரமாலான் நோன்பு ஆரம்பித்து விட்டது இனி நோன்பு கஞ்சி, நோன்பு கூழ் சமையல் குறிப்புகள் வரும்.
    ///

    வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. ஆஹா நோன்பு சைவக் கஞ்சி எனக்கும் பிடிக்கும்.. குறிப்புக்கள் வந்தால் பார்ப்போம்...

    ///ஓட்டு போட்டு விட்டேன் அதிரா.///// இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே:)..

    ///எப்படி அனுப்ப போகிறீர்கள் கூழ் அதிரா?//
    கோமதி அக்கா.. அது ஒரு பேரீய கதை ஓடிட்டிருக்கு எங்களைவருக்குள்ளும்... அதாவது ட்றுத் கீதா அஞ்சு நான் .. நால்வரும் சகோ ஸ்ரீராம் வீட்டுக்குப் போக இருக்கிறோம்.. ஒரு மரத்தின் சுயசரிதைக்காக:).. இப்போ ஸ்ரீராம் செய்வதில் சாம்பிள் தரச் சொல்றார்... அப்போ இந்த லிஸ்ட்டில் சகோ நெ.தமிழனையும் இணைச்சு அஞ்சு ரிக்கெட் போட்டு ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடியிலேயே சமைச்சூஊஊஊஊ சமைச்சூஊஊஉக் குடுத்திட்டு வரலாம் என ஓசிக்கிறேன்ன்:) ஹா ஹா ஹ எப்பூடி என் ஐடியா?:).

    மியாவும் நன்றி கோமதி அக்கா.

    பதிலளிநீக்கு
  49. ///வை.கோபாலகிருஷ்ணன் said...///

    ஹா ஹா ஹா அதாரது குறுக்கும் நெடுக்குமா குண்டு குண்டா ஓடித்திரிவது எனப் பார்த்தேன்ன்ன் கோபு அண்ணனா... ஹா ஹா ஹா நில்லுங்கோ.. வெரி சோரி ஓடுங்கோ துரத்திப் பிடிக்கிறேன்ன்.. இன்று வீட்டில்தான் நிற்கிறேன்ன்:).

    பதிலளிநீக்கு
  50. ///middleclassmadhavi said...
    இன்ட்ரஸ்டிங்! கேழ்வரகு மாவில் செய்து பார்க்கிறேன்... தாங்க்ஸ்!//

    வாங்கோ மிடில்கிளாஸ் மாதவி... மிக்க நன்றி, உறைப்பை விரும்புவோருக்கு ரொம்பப் பிடிக்கும்... எல்லோரும் சொல்வதனால் எனக்கும் கேள்வரகில் செய்ய ஆசையாக இருக்கு.

    ஆராவது கேள்வரகில் கூழ் செய்தால் இங்கு அனுப்புங்கோவன்.. எப்படி இருக்குமெனப் பார்ப்போம்.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  51. @ gundu miyaav haahaa hoo //ஆராவது கேள்வரகில்// கேழ் வரகு :) கேள் இல்லை

    பதிலளிநீக்கு
  52. @ கோபு அண்ணா //ஏதோ எங்கட நெல்லைத் தமிழன் ஸ்வாமீக்காக திங்கட்கிழமைகளிலும் + சிறுகதைகளுக்காக செவ்வாய்க்கிழமைகளிலும் மட்டும் இங்கு வந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்.

    அதற்கும் ஆபத்து வரப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் //

    நோ அப்படி ஓட விட மாட்டேன் அடுத்த திங்கள் இங்கே ஆஜராகணும் சொல்லிட்டேன்

    பதிலளிநீக்கு
  53. //Thulasidharan V Thillaiakathu said...
    ஆஆ ஓடியல் கூழ்... பனங்கிழங்கு கூழ்...அதிரா...//
    ஆஆஆவ்வ்வ் கீதாவின் கூக்குரலை இன்னும் காணல்லியே என ஓசிச்சேன்ன்ன்... ஓ நீங்க குடிச்சிருக்கிறீங்க... இலங்கையில் வடபகுதியில் பிறந்த யாருமே இதனைக் குடிக்காமல்... அல்லது ஒடியல்கூழ் என உச்சரிக்கும்போதே வாயூறாமல் இருக்க மாட்டினம் அவ்ளோ பேமஸ் அங்கு இது.

    ஏன் இந்தியாவில் இதெல்லாம் வாங்க முடியாதோ?

    அம்மா இப்போதானே சென்னை வந்திருந்தா... காரில் போகப்போக ரோட்டோரமெல்லாம் குவியல் குவியலாக நொங்கு கொட்டிக் கொட்டி விக்கிறார்கள்.. அப்படி இலங்கையில் எங்கும் காண முடியாது என்றா.

    இலங்கையில் பெரும்பாலும் பனம்பழத்துக்கே விடுவார்கள். தம் சொந்த காணியில் நின்றால் மட்டுமே நொங்கு குடிக்க முடியும் என நினைக்கிறேன். எங்கள் மற்ற வீட்டில் முன்பு பனை இருந்தது... நொங்கு குடித்தோம்.. பின்பு ஆமிக்காரர் அனைத்தையும் தறித்து அவர்கள் சென்றிப்பொயிண்ட்டுக்கு மண்மூட்டை அடுக்கப் பாவித்தார்களாம் எனக் கேள்வி.

    //ஒட்டு போட்டாச்//
    ஆங்ங்ங்ங்ங் மியாவும் நன்றி கீதா:).

    பதிலளிநீக்கு
  54. அபூர்வ,
    அதிசய,
    அட்டகாஸ,
    அந்தர்பல்டி,
    அதிரஸ,
    அழும்பு,
    அதிரடி
    அதிரா .....

    உங்களுக்கு உடம்பில் எங்கெல்லாமோ அதிர்ஷ்ட மச்சங்கள் இருக்கும் போலிருக்குது.

    நீங்கள் எது எழுதினாலும் படிக்கவும், ரஸிக்கவும், வரவேற்கவும் பின்னூட்டங்கள் போடவும், வோட் போடவும் ஏராளமான ரஸிகர்கள், கூட்டம் கூட்டமாக வந்து குவிந்து விடுகிறார்கள். :)

    உங்கள் எழுத்துக்களெல்லாம் நகைச்சுவையாகவும் உள்ளது.

    தங்களின் கொச்சைத்தமிழ் உலகளவில் பரவி, தூய்மையான உண்மைத்தமிழ் பலருக்கும் இன்று மறந்தே போய் விட்டது.

    என்னைப்போலவே ஒவ்வொருவருக்கும் கர்ம சிரத்தையாக பதிலும் எழுதி அசத்துகிறீர்கள் என்பது கூடுதல் ப்ளஸ் பாயிண்ட் ஆகவும் உங்களிடம் உள்ளது.

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    வாழ்க உங்கள் தமிழ்த்தொண்டு!

    வளர்க உங்கள் வலையுலகப் புகழ்!!

    பதிலளிநீக்கு
  55. //இங்கு கருப்பாக மாற்றிக் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். :( கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(//

    ஹாஹா அண்ணா தாங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  56. //Angelin said...
    @ gundu miyaav haahaa hoo //ஆராவது கேள்வரகில்// கேழ் வரகு :) கேள் இல்லை///

    ஹா ஹா ஹா ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரைக்கும் காத்திருக்குமாம் கொக்கூஊஊஊஉ:) அப்பூடித்தான்ன்.. குளத்தில அதிராவை நீந்த விட்டிட்டு:) கரையிலயே முட்டைக்கண்ணால பார்த்திட்டே இருந்து லபக்கெனக் கொத்துதே இந்த ஃபிஸ்ஸூஊ கர்ர்ர்ர்:) .. நான் கேட்கிற வரகாக்கும் என நினைச்சேன்ன்ன் அது டப்பா?:) ஆவ்வ்வ் நல்லவேளை நெல்லைத்தமிழனுக்கு இன்று வேர்க்ல பயங்கர பிஸியாம்:).. என் நல்ல நேரம் அவர் இங்கின இல்லை இப்போ:).

    பதிலளிநீக்கு
  57. ///Angelin said...
    //இங்கு கருப்பாக மாற்றிக் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். :( கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(//

    ஹாஹா அண்ணா தாங்க்ஸ்///

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ் கொஞ்சநாளாக முறைச்சிட்டே திரிகினமே .. அப்படியே மெயிண்டைன் பண்ணட்டும் அதுதான் எனக்கு சேவ்ட்டி என நினைச்சிருந்தெனே:) .. கூட்டுச் சேர்ந்திட்டாங்கையா.. கூட்டுச் செர்ந்திட்டாங்க.. என் கூழ் ரெசிப்பி கூட்டுச் சேர வச்சிட்டுதே அண்ணாவையும் அஞ்சுவையும்:) ஹா ஹா ஹா விடமாட்டேன்ன்.. இதுக்கு ஏதும் பண்ணியே தீருவேன்ன்:).

    பதிலளிநீக்கு
  58. ///Thulasidharan V Thillaiakathu said...
    அது சரி அதிரா நீங்கதான் இங்க சின்ன பிள்ளையா....இல்லை இல்லை.....அனு இருக்காங்க.....கீதா இருக்காங்க...ஏஞ்சல் இருக்காங்க....மதுரை இருக்காங்க...கீதாக்கா இருக்காக....ஹிஹிஹி

    கீதா///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதாவுக்கு வாழ்க்கையில இப்பூடி டவுட்டூ வரலாமோ?:) அதுவும் ஒரு சுவிட் 16 அதிராவைப் பார்த்து:).. இங்கின எல்லோரும் சுவீட் 16 ஐ தாண்டிட்டினம்:) கீதா.. இன்னும் 10 வருசம் போனாலும் மீதேன்ன் தங்கை ஆக்கும்.. க்கும்.. க்கும்..:)

    பதிலளிநீக்கு
  59. //Thulasidharan V Thillaiakathu said...
    பூசார்.... அழகு....பாப்பா அழகு....//

    பூஸார் எப்போதும் அழகுதேன்ன்ன்.. பாப்பா.. ஓ அது பேபிஅதிரா வின் ஃபோட்டோ கீதா:) பார்த்தால் தெரியல்ல?:) அஞ்சுவைக் கேளுங்கோ சொல்லுவா(கரெக்ட் ளி):).

    //Thulasidharan V Thillaiakathu said...
    பனங்கிழங்கு ..இங்கு எப்போதேனும் கிடைக்கிறது....கிடைக்கும் போது.. வாங்கிவிடுவேன்...//

    ஓமோம் பனங்கிழங்கு பெப்ரவரி மார்ஜ் இல் தான் சீஸன்,, இங்கும் கிடைச்சுதே வாங்கி அவிச்சேன்ன்

    மியாவும் நன்றி கீதா அனைத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  60. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    போனால் போகிறது என்று மிகவும் கஷ்டப்பட்டு, பல்லைக்கடித்துக்கொண்டு, வோட் போட்டு விட்டேன். அதற்கான அத்தாட்சியையும் இதோ இங்கு இணைத்துவிட்டேன்.//

    வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பல்லைக் கடிக்காதீங்க:) பிறகு பல்செட் போடுவதெனில் ரொம்ப கோஸ்ட்லியாம்ம்ம்.. எப்பூடித் தெரியும் எனத்தானே கேட்கிறீங்க? .. இதென்ன புறுணம்?:) அஞ்சுதான் சொன்னா:).. ஹா ஹா ஹா படிச்சதும் கிழிச்சு உச்சிப்பிள்ளையாருக்குப் பின்னால ஒளிச்சு வச்சிடுங்கோ பிளீஸ்:).

    நீங்க வோட் போடட்டும் என்றுதானே மேலே ஆயுதத்தோடு பூஸார் வெயிட்டிங்...:)

    மிக்க நன்றி கோபு அண்ணன்... நான் கேட்காமலேயே ஓடிவந்து, எப்பவுமே யாருக்குமே போடாத வோட்டை எனக்காகப் போட்டமைக்கு...ம்.... ஆதாரத்தோடு நிரூபிச்சமைக்கும்.. சொல்லாட்டிலும் தமிழ்மணத்தில் செக் பண்ணிக் கண்டு பிடிச்சிடுவனே:).

    பதிலளிநீக்கு
  61. /////பூஸார் எப்போதும் அழகுதேன்ன்ன்.. பாப்பா.. ஓ அது பேபிஅதிரா வின் ஃபோட்டோ கீதா:) பார்த்தால் தெரியல்ல?:) அஞ்சுவைக் கேளுங்கோ சொல்லுவா(கரெக்ட் ளி):).//

    ஓ சொல்லிட்டேனே அது அதிராவின் பேத்தி என்று haaaahaaa

    பதிலளிநீக்கு
  62. ///வை.கோபாலகிருஷ்ணன் said...
    மற்றபடி தலையோடு கால் இங்கு சொல்லியுள்ளது ஏதும் எனக்கு வெளங்கிக்கிட ஏலலை. (இது எங்கட முருகு பாஷையாக்கும்)//

    ஹா ஹா ஹா திரும்படியும்:) படிங்கோ:).. ஆன்ரியிடம் சொல்லுங்கோ செய்து தரச்சொல்லி.. ஒடியல் மா உடம்புக்கு நல்லது, உடம்பிலுள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடம்பை இலேசாக்கும்.

    பதிலளிநீக்கு
  63. ///Angelin said...
    /////பூஸார் எப்போதும் அழகுதேன்ன்ன்.. பாப்பா.. ஓ அது பேபிஅதிரா வின் ஃபோட்டோ கீதா:) பார்த்தால் தெரியல்ல?:) அஞ்சுவைக் கேளுங்கோ சொல்லுவா(கரெக்ட் ளி):).//

    ஓ சொல்லிட்டேனே அது அதிராவின் பேத்தி என்று haaaahaaa///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) நான் சொன்னனே நேக்கு எடிரி:) வீட்டுக்குள்ளயேதேன்ன்ன்ன்:)..

    https://s-media-cache-ak0.pinimg.com/736x/b9/fb/e4/b9fbe48dc91dfb10ae026e5571404459.jpg

    பதிலளிநீக்கு
  64. ///வை.கோபாலகிருஷ்ணன் said...
    காட்டியுள்ள பத்து படங்களும் அருமை. ’டாப்’பில் காட்டியுள்ள முதல் படம் மிகவும் ’டாப்’பாக உள்ளது. அஞ்சாவது படத்தில் வாலை ஆட்டும் பூனையின் வாலைப் பிடித்து நறுக்கிவிடலாமா எனத் தோன்றுகிறது.///

    அது முதல்படம்.. பேபி அதிரா எப்பவும் `டாப்` தேன்:) ஸ்ரீராமிடம், படத்தின் கீழே பேபிஅதிரா எனப் போடுங்கோ எனச் சொல்ல மறந்தது என் டப்புத்தேன்ன்:).

    ஹா ஹா ஹா எதுக்கு வாலில் இவ்ளோ கோபம் உங்களுக்கு ஹா ஹா ஹா.. அவர் கூழ் க்கு வெயிட்டிங்:).. இந்தக் கூழ் குடிச்ச பின்பும் இப்பூடி மயக்கமா வரும்:) அதனால்தான் அப்படித் தேடிப் போட்டேன்:)..

    விடுமுறை நாட்களில், இப்படிக் கூழ் செய்து குடித்து விட்டு ரெஸ்ட் எடுக்கோணும்.

    பதிலளிநீக்கு
  65. ///May 29, 2017 at 10:34 AM
    வை.கோபாலகிருஷ்ணன் said...
    அஞ்சாவது பத்தியின் கடைசியில் உள்ள கருப்படித்த எழுத்துக்கள் மட்டும் என் கண்களுக்குப் பளிச்சென்று தெரிகின்றன. பூனைக்கு மொத்தத்தில் இன்று போதாத காலம்தான். பிஷ்ஷின் கைகளால் மோட்சம் கிடைக்க உள்ளது என நினைக்கிறேன்.///

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மெதுவாப் பேசுங்கோ.. பிஸ்ஸுக்கு கண்ணு கொஞ்சம் டிம்மூஊஊ:) ஆனா பா......புக்காதூஊஊஊஉ:).. ஹையோ ஹையோ.. நான் புள்ளெட் புரீஃப் காருக்குள்தானே இருக்கிறேன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
  66. வை.கோபாலகிருஷ்ணன் said...//
    மொத்தத்தில் எல்லோருக்கும் உள்ளூர ஒரு பயம் உள்ளது. அதுவே இந்த ரெஸிப்பி கொடுத்துள்ளவரின் வெற்றியாகும்.///

    ஹா ஹா ஹா கரீட்டாச் சொல்லிட்டீங்க.. பின்ன மிரட்டி மிரட்டியே எங்கேயும் என் சாதனைகளை நிலை நாட்ட வேண்டி இருக்கே:) இல்லையெனில் ஆரும் பயப்பூட மாட்டினமாம்:).. அதுக்காகத்தானே பெயரையும் மாத்தினேன்:).. பாருங்கோ.. என்னைப்போல துவக்கு,கத்தி காட்டி கூக்குரல் போட்டு இங்கின ஆராலும் மகுடம் சூட்டிட முடியுமோ?:) ஹா ஹா ஹா.. அத்தோடு அதிரா எது செஞ்சாலும் எல்லாம் பப்புளிக்குலதேன்ன்:) ஒளிவு மறைவா மிரட்டவில்லை:)

    பதிலளிநீக்கு
  67. அதிரா - என் ஹஸ்பண்டுக்கு இந்த செய்முறை நல்லா இருக்கு. Soup மாதிரி என்று சொல்லிவிட்டார். ஆனால், நாங்கள் பனங்கிழங்கு உபயோகப்படுத்துவதில்லை என்பதால், கேழ்வரகோ மற்றதோ போட்டுச் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். (கடைசியில் பலாக்கொட்டை வறுத்துச் சேர்ப்பதையும் அவர் விரும்பவில்லை). வாழ்த்துக்கள்.. உங்கள் புது டிஷ்ஷுக்கு.

    பதிலளிநீக்கு
  68. வை.கோபாலகிருஷ்ணன் said...

    //ஆறிலும் சாவு .... நூறிலும் சாவு’ எனச் சொல்லுவார்கள்.

    அதனால் என் மனதில் பட்ட நிறை குறை எல்லாவற்றையும் வெள்ளந்தியாக இங்கு சொல்லிவிட்டேன்.///
    ஹா ஹா ஹா பில்டிங் ஸ்ரோங்கூஊஊ பேஸ்மண்ட் வீக்காஆ?:) ஹா ஹா ஹா எவ்ளோ அடிச்சாலும் மீ தாங்குவேன் பயப்பூடாதீங்கோ:).. நான் நல்லா ஓடுவேனெல்லோ:) 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்:) அதனாலதான் மீயும் துணிஞ்சு கூக்குரல் போடுவேன்ன்.. எக்கச்சக்கமா அகப்பட்டால்ல் ஓடியே தப்பி.. திரும்ப வருவேன்ன்.. அதிராவோ கொக்கோ:).

    ///நெல்லைத்தமிழன் அவர்களால் மட்டுமே பேரும் புகழும் பெற்ற இந்த வலைத்தள திங்கட்கிழமைகளை நினைத்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன். இன்னும் நான் இருக்கப்போவதோ சில மணி நேரங்கள் மட்டுமே .... என்பதால்///

    ஹா ஹா ஹா வெயிட் வெயிட்.. அடுத்த திங்கக்கிழமை.. நீங்கள் ஆவலோடு காத்திருக்கும்.... வருதூஊஊஊஊஊஊஊஊஉ:).. மீ அந்தாட்டிக்கா பயணமாகிறேன்ன்ன்ன்:)..

    ஹா ஹா ஹா சிரிச்சு முடியுதில்லை எனக்கு... மியாவும் நன்றி கோபு அண்ணன்.

    பதிலளிநீக்கு
  69. கெள அண்ணன் உடனடியாக மேடைக்கு வந்து வோட் பண்ணவும்:).. ஒவ்வொரு நாளும் இங்கு ஒழுங்கா வோட் பண்ணுவீங்க இன்று என்னாச்சூஉ:).. நாங்க அனைத்தையும் வோச்சிங்ங்ங்ங்ங்ங் ஆக்கும்ம்ம்..:).. இல்லாட்டில் வச்சிடுவேஏஏஏஏஏன்ன்ன் ஹையோ இது நேக்கு வச்சிடுவேன் எனச் சொன்னேன்:)..[ சகோ ஸ்ரீராம் கொஞ்சம் கோச்சுக்காம இந்த நியூஸை அவர் படிக்காட்டில் பாஸ் பண்ணிடுங்கோ பிளீஸ்ஸ்}

    http://media.moddb.com/images/groups/1/3/2392/glamorous-funny-cat-with-guns.jpg

    பதிலளிநீக்கு
  70. ///நெல்லைத் தமிழன் said...
    @அதிரா - பூசார் படங்களும் ஒரு சேதியைச் சொல்கிறது. முதலில், 'எப்படா கூழ் வரும்'னு, காத்திருந்து காத்திருந்து தூங்கிவழியுது. அப்புறம் கூழைச் சாப்பிட்டபின் அதுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை, அந்தப் பூசாரோட ரிலேஷன் பூசார், கோபத்தோடு, துப்பாக்கியோடு ரெடியா இருக்கு. அது கண்ணுல அகப்பட்டீங்க.... அவ்வளவுதான்.///

    ஹா ஹா ஹா நெல்லைத் தமிழன் துப்பாக்கியைப் பார்த்துப் பயப்புடுவீங்க எனப் பார்த்தால் இப்பூடிக் கோத்து விடுறீங்களே?:).. இப்பூடி எல்லாம் கிட்னியை:) ஊஸ் பண்ணி எழுதுவீங்க அதிராவை மடக்கிடுவீங்க எனத் தெரியாமல் போச்சே:).

    /// வேற வழியில்லை, வெயில் வாட்டி எடுக்குது என்றால், கரைச்ச மோர் சாதத்தில் புது மாங்காய் ஊறுகாய் (உங்களுக்கு உப்பு நாரத்தை) கலந்து சாப்பிடலாம்//

    உறைப்பு + புளிப்பு எனக்கு ரொம்பப் புய்க்கும்:).. உண்மையைச் சொன்னால், நான் கறிக்குப் போடும் பழப்புளியை விட, என் வாயில் போடும் பழப்புளிதான் அதிகம்:)..

    //// @கோபு சார் ...ரொம்ப கலாய்க்கிறீங்களே என்னை. உங்களால்தான்,என் வெறும் படத்தையும் செய்முறையையும் நம்பாமல், ஸ்ரீராம் (அதான்.. ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்தான்) இனிமேல் Sample அனுப்பினால்தான் பிரசுரம் செய்வேன் என்று கன்டிஷன் போடுகிறார்.////

    ஹா ஹா ஹா கரீக்க்ட்டாக் கண்டு பிடிச்சிட்டீங்க நெல்லைத் தமிழன்:).. இதுக்கெல்லாம் காரணம் கோபு அண்ணனோ ஸ்ரீராமோ அல்ல:)... அஞ்சுவும் அதிராவும் புற்றீசல்கள்போல ரெசிப்பி அனுப்பப் புறப்பட்டதே காரணம்:).. நல்லாத்தானே போய்க்கொண்டிருந்துது திங்கட்கிழமை ரெசிப்பி:).. இப்போ இப்பூடி ஆச்சே:) ஹா ஹா ஹா... நான் இலேசில கால் வைக்க மாட்டேன்ன்:) ஆனா வச்சிட்டால்ல் ஓய மாட்டேன்ன்ன்:)... ஹா ஹா நீங்க எல்லோரும்தான் மனதை தேற்றப் பழகிடுங்கோ:)

    பதிலளிநீக்கு
  71. Angelin said...
    //http://commentphotos.com/gallery/CommentPhotos.com_1418155017.jpg
    ///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) வாங்கோ அஞ்சு வாங்கோ... கார்ட் அட்டாக்குடன் நிக்காது, தொடர்ந்து ரெசிப்பிகள் போட்டூஊஊஊ... எல்லோரையும் பை பாஸ் செர்ஜரி செய்து காப்பாற்றுவேன் டோண்ட் வொரி:)..

    பதிலளிநீக்கு
  72. ///Angelin said...
    ஆஆஆஆஅ!!!!! எனக்கு தலை சுத்துது கண்ணு இருட்டுது யாராவது இருக்கீங்களா ப்ளீஸ் கால் தி போலீஸ் ...ஆம்புலன்ஸ் வந்தா என்னை காப்பாத்திடுவாங்க போலீஸ் ப்ளீஸ் காட்ச் தட் cat///

    ஹா ஹா ஹா இது என்ன புயு:) வம்பாக்கிடக்கூஊஊஊஊஊ வைரவா என்னைக் காப்பாத்த்த்துங்ங்ங்ங்ங்.. மீ ஒரு அப்பாஆஆஆஆஆஆஅ ஆவீஈஈஈஈஈ:))... திருப்பரங்குன்றத்து முருகா .. வள்ளிக்கு இம்முறை ஏமாத்திடாமல் வைரம் பதிச்ச வளையல் போடுவேன்ன்ன் பீஸ்ஸ்ஸ்ஸ் சேவ் மீ முருகா...

    http://www.iizcat.com/uploads/2016/10/5oa40-poo2.jpg

    பதிலளிநீக்கு
  73. ///Angelin said...
    முதல் வந்த அவர்கள் ட்ரூத் கோபு அண்ணா நெல்லை தமிழன்எல்லாருக்கும் ஆழ்ந்த வாழ்த்துக்கள் ...நல்ல வேளை என் கண்ணில் லேட்டா தான் பட்டது ரெஜிப்பி :///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவர்கள் அதிராவின் ரெசிப்பீஈஈஈஈஈஈஈஈ என்பதைப் பார்த்துத்தான் அவ்ளோ ஆசையா ஸ்பீட்டாஆஆஆஆ ஓடிப் பெஸ்ட்டா வந்திச்சினமாக்கும்:)... இப்போ என் கூழ் குடிச்சு மயங்கியிருப்பினம்:) ஹா ஹா ஹா ட்றுத்துக்கு இன்று ஹொலிடே என எப்பவோ சொன்னதா நினைவு:), ஆனா ஆளைத் திரும்பக் காணவில்லை அதனால கராஜ் க்குள் மயங்கிட்டார் போலும்:) ஆனா சத்தியமா அதுக்கு மீ பொறுப்பல்ல:).. இது அந்த அஞ்சுட வாழைப்பு ரசம் ரெசிப்பி மேல் சத்தியம்:) ஹா ஹா ஹா:). எதுக்கும் அவரை ஒருக்கால் “அந்த”:) ஃபோனில கூப்பிட்டுக் கொன்ஃபோம் பண்ணிடுங்கோ அஞ்சூ:)

    பதிலளிநீக்கு
  74. ///Angelin said...
    @கோபு அண்ணா ஹாஆஆ ஹா ..இப்போ தைரியமா சொல்லுங்க போனவாரம் அந்த போலி இந்த பூனைதானே :)///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சந்தடி சாக்கில மாட்டி விடப்பார்க்கிறா:) கோபு அண்ணன் போலிக்குறிப்பு எனச் சொன்னது உங்கட அந்த வாழைப்பு ரசம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா இல்லாட்டில் நெல்லைத்தமிழனில் கரட்ட்டூஊஊட் அல்வா ஆக இருக்குமோ?:) ஹையோ நேக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊ:)..

    பதிலளிநீக்கு
  75. ///Angelin said...
    அதிரா :) இன்னிக்கு தான் உங்க க்ராண்ட் டாட்டர் பேத்தி படத்தை பார்க்கிறோம் மிக்க நன்றி குட்டி அவங்க பாட்டி அம்மம்மா கிராண்ட்மா அம்மாச்சி தாத்தி அதிரா சின்ன வயசில் இருந்த மாதிரியே இருக்கா :) //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்களுக்கு வயசாகிட்டே போகுதா.. அதனால வரவர மறதி அதிகம்:).. அது பேபி அதிராவாக்கும்:))).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எல்லோர் நம்பிட்டாங்க இந்த பிஸ் ஐ மட்டும் எப்பூடி மிரட்டினாலும் நம்புதில்லையே:) இனி சுடு ஆத்திலதான் தள்ளிடுவேன் என மிரட்டோணும்:)..

    பதிலளிநீக்கு
  76. ///Angelin said...
    அம்மாடி படிச்சி முடிச்சிட்டேன் ..அதிரா இந்த ரெசிப்பி முந்தி உங்ககிட்ட பிளாக்கில் கேட்டு நீங்க படம் போடாம சொன்னிங்க ஆனா இப்படி படத்தோட பார்க்கும்போது நல்லா விளங்குது ..எனக்கு இப்போ எந்த கிழங்கை வாயில் வச்சாலும் கசக்குற மாதிரி இருக்கு கொஞ்சம் உடம்பு சரியானதும் ///

    ஆவ்வ்வ்வ் அஞ்சு இப்போதான் கரீட்டான றக் ல வந்திருக்கிறா.. இது உங்களை நினைச்சுத்தான் படம் படமா எடுத்துச் செய்து போட்டேன்ன்ன்.... இனி அடிக்கடி எப்பூடி ஒடியல்கூழ் செய்வது எனச் சொல்லுங்கோ என்று கேட்கமாட்டீங்க இல்ல.. லிங்கை கொப்பி பண்ணி வையுங்கோ.


    ///இன்சூரன்ஸ் எடுத்து வச்சிட்டு உயில் எழுதி வச்சிட்டு செய்றேன்//////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மறந்திடாதீங்க.. உயில் எழுதும்போது ஸ்பெல்லிங்கூ மிசுரேக்கு விட்டிடாமல் அடிரா:) பெயருக்கு எழுதிடுங்கோ:)

    பதிலளிநீக்கு
  77. ஒடியல் கூழ் உண்டவர்
    இருநூறு ஆண்டுகள் வாழலாமாம்...
    ஒடியல், புழுக்கொடியல், பனாட்டு என
    பனம் பண்டங்கள் உண்டால்
    நம்மாளுங்க
    இரும்பு மாதிரி இருப்பாங்களாம்...

    என்றாலும்
    யாழ்ப்பாணம் வாங்கோ
    எல்லாம் வேண்டித் தருகிறேன்

    இவ்வண்ணம்
    யாழ்பாவாணன்

    பதிலளிநீக்கு
  78. பெயரில்லா29 மே, 2017 அன்று PM 5:06

    டோஃபு மாதிரி இருக்கு பார்க்க!

    பதிலளிநீக்கு
  79. ///Angelin said...
    நான் கொஞ்சம் பதிவை கண்ட அதிர்ச்சியில் இருப்பதால் சற்று ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வருவேன் அதுவரை நெல்லைத்தமிழன் ,ட்ரூத் கோபு அண்ணா அனைவரும் கலாய்ப்பார்கள் என நம்புகிறேன் :)///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னாதூஊஊஊஊஊஊ கலாய்க்கிறதோ?:) அவங்க எல்லோரும் படு பிஸியாக என் ரெசிப்பியைப் பார்த்து எழுதிக்கொண்டிருக்கினம், விரைவில் செய்யப்போகினமாம்... அதைப்போய் கலாய்க்கிறாங்க என புரளியை வேறு கிளப்புறா கர்:)... உங்களுக்கு ஓய்வு தேவைதான்.. எலாம் வச்சு எழும்பி ஓடிவாங்கோ டொல்லிட்டேன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
  80. ///வை.கோபாலகிருஷ்ணன் said...
    நான் சொல்ல நினைக்கும் ஒரு சிறுகதை இதோ:///

    ம்ம்ம்ம்ம்ம்ம் எதுக்கு இவ்ளோ கஸ்டப்பட்டு இக்கதையைச் சொல்றார் கோபு அண்ணன்.. இதில் வரும் பாட்டி ஆரூஊஊஉ?:) அஞ்சுவா இருக்குமோ?:) போர் வீரர் ஆரூஊஊஊ ட்றுத்தாக இருக்குமோ?:)).. ஹா ஹா ஹா..

    சே..சே.. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).. எதுவாயினும் கதை நல்ல புத்தி விவேகமான கதை:).. பாவம் பாட்டி ஏமாந்திட்டா:)..

    பதிலளிநீக்கு
  81. ///வை.கோபாலகிருஷ்ணன் said...இவ்வாறு பனைமரம் எவ்வளவோ பலனளிக்கும் தான்//

    இன்னும் இருக்குது கோபு அண்ணன், பனை ஓலை வேலிக்குப் பயன்படுத்துவார்கள், கூரைக்கும் பாவிப்பார்கள். பனை ஓலையில் பெட்டி, கடகம் எனப் பின்னுவார்கள்.. பனங்கட்டி எனும் வெல்லம் செய்வினம், இப்போ எனக்கு வந்த பார்சலிலும் அம்மா அனுப்பியிருக்கிறா. இந்தப் பனங்கட்டி போட்டுத்தான் இனிப்புக் கூழ் செய்து ஆடிப்பிறப்புக்கு சுவாமிக்கு வைப்போம்.. அதுக்காகத்தான் அம்மா அனுப்பினா..

    மற்றும் பனை ஓலை ஈக்கு எடுத்து விளக்குமாறு செய்வார்கள்.பனை மரத்தை, வீட்டில் கூரைக்கு, வளைக்கு எல்லாம் பயன்படுத்துவார்கள்... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.. பனம் பழத்தில் பனங்காய்ப் பணியாரம் செய்வோம்.

    பனாட்டு சாப்பிட்டதுண்டோ? எங்கள் வீட்டில் எனக்கும் அப்பாவுக்கும் இது ரொம்பவும் பிடிக்கும்..

    பதிலளிநீக்கு
  82. ///வை.கோபாலகிருஷ்ணன் said...
    . அதுவும் கேவலம் ஒரு கூழ் செய்ய ......///

    கோபு அண்ணன் ஓடுங்கோ ஓடுங்கோ.. ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழே ஒளிச்சிருங்கோ கல்லெறிகள் படப்போகுதூஊஊஊ:) பழகின பாவத்துக்காக:) நான் பேசாமல் போவேன்ன்:) ஆனா நீங்க எங்கள் மிகத் தரம் வாய்ந்த கூழை இப்பூடிச் சொன்னமைக்கு என் வன்மையான கண்டனங்கள் கர்ர்ர்ர்ர்:).. பாருங்கோ யாழ்பாவாணன் அவர்கள் சொல்லியிருக்கிறார்ர்.. ஒடியல்கூழ் குடிச்சதன் பலன்களை... அம்முலுவைப் பாருங்கோ அவக்கு வாய் ஊறுதாம் ஹா ஹா ஹா இனிமேல் குடிச்சுப் பாருங்கோ நீங்களும் என்னைப்போல மிக உசாராக ஓடித்திரிவீங்க:) டெய்லி 10000 ஸ்ரெப்ஸ் ஈசியா நடப்பீங்க:) ஹா ஹா ஹா .. பீ கெயார்ஃபுல்ல்ல்ல்ல்[இது நேக்குச் சொன்னேன்னாக்கும்]..

    https://media.giphy.com/media/XIgyRDGHDajNm/200.gif

    பதிலளிநீக்கு
  83. ///priyasaki said...
    ஜிலேபி,குலோப்ஜாமூன்,பாயாசம் என்ன இருந்தாலும் இந்த பனக்கிழங்கு கூழுக்கு ஈடாகாது அதிரா.//

    ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ அம்முலு.. நான் நீங்க வருவீங்க என எதிர்பார்க்கவே இல்லை.. வந்த வேகத்தில் வோட்டும் போட்டுவிட்டீங்க மியாவும் நன்றி.

    அதேதானே உரக்கச் சொல்லுங்கோ அம்முலு.. கோபு அண்ணனின் காதில ஒலிக்கட்டும்:)

    //முதலில் கை கொடுங்க.. கை குலுக்கதான்.. ///

    ஓ நான் பயந்திட்டேன்ன்ன்:) கன நாளைக்குப் பிறகு நேற்றுத்தான் என் வைர மோதிரத்தை எடுத்துப் போட்டிருக்கிறேன்ன்ன்:)

    /// பனக்கிழங்கு துவையல் ம் சூப்பரா இருக்கும்//

    யேஸ்ஸ்ஸ் அறிஞ்சிருக்கிறேன் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து இடித்துச் செய்வதென, ஆனா சாப்பிட்டதில்லை. மரவள்ளிக்கிழங்கு அவிச்ச துவையல் சாப்பிட்டிருக்கிறேன்.

    ///குட்டி அதிரா,/// ஆஆஆஆஆங்ங்ங்ங்ங் நீங்க ஒருவர்தான் இங்கின கரீட்டாக் கண்டுபிடிச்சிருக்கிறீங்க:).. இப்போ சேக் காண்ட்ஸ் பண்ணலாம் வாங்கோ.. அஞ்சுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    /// ஹா..ஹா.. அஞ்சு. அந்தளவுக்கு பயப்பிடத்தேவையில்லை அஞ்சு../// நோ நோ நோஒ தப்பா புரிஞ்சிட்டீங்க அம்முலு.. அஞ்சு சொன்னது அடுத்த திங்களுக்கான இன்ஸ்சூரன்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா.. மியாவும் நன்றிகள் அம்முலு.

    பதிலளிநீக்கு
  84. ///Angelin said...
    //தமிழ்மணம் மகுடம்
    கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
    திங்கக்கிழமை 170529 :: ஒடியல் கூழ் - அதிரா ரெஸிப்பி - 12/12 //

    apart from jokes :)
    எப்பவும் நீங்கதான் காமெடி ராணி athiraa///

    ஹா ஹா ஹா அஞ்சூஊஊஊஊஉ இப்போ 14, உங்கள் தமிழில் ஒரு பொருட்பிழை இருக்கிறது:) அது காமெடி ராணி அல்ல .. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) “மகுட ராணி”... ஹா ஹா ஹா ஹையோ இதைப் பார்த்தால் இப்பவே பறிச்சிடப்போறார் பகவான் ஜீ:)..

    நோ நான் குடுக்கமாட்டேன்ன்:).. தருவேன் திருப்பி எனப் பொய்ச் சத்தியம் பண்ணித்தான் வாங்கினேன்ன்ன்:) ஹா ஹா ஹா ஆனா இப்போ குடுக்க மனமில்லை என்ன பண்ணட்டும் அஞ்சூ?:)) ஹா ஹா ஹா படிச்சதும் கிழிச்சிடுங்கோ:).

    பதிலளிநீக்கு
  85. ///வை.கோபாலகிருஷ்ணன் said...
    //ஒடியல்மா இலங்கைத் தமிழ்க் கடைகள் எங்கும் கிடைக்கும். புது மாவாகப் பார்த்து வாங்க வேணும், பழைய மாவெனில், கூழ் தடிப்பிருக்காது, நிறமும் ஒருவிதக் கறுப்பாகிடும் (நம்மட அஞ்சுவைப்போல).//

    தங்க நிற மீன் போல சும்மா தகதகன்னு ஜோராக மின்னுவாளாக்கும் என நீங்களே உங்க ஃப்ரண்டைப்பற்றி பொறாமைப்பட்டு ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறீர்கள். நினைவிருக்கட்டும்.

    இங்கு கருப்பாக மாற்றிக் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். :( கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :( ////

    ஹா ஹா ஹா ஹையோ இது என்ன எப்ப பார்த்தாலும் துரத்தீத் துரத்தி அடிக்கினமே:) என் வாய்தேன் நேக்கு எடிரி:) சரி சரி சமாளிச்சிடலாம்ம்ம்ம்:)..

    அய்ய்ய்ய்ய் கோபு அண்ணன் நீங்க வேற:) அது அத்தனையும் சுத்த மேக்கப்ப்ப்ப்:)... ஒரு மழை நாளில்.. மழையில நிக்க வச்சுப் பாருங்கோ.. மேக்கப் கலைஞ்சதும்... அப்போ தெரியும் கலர்.. ஹா ஹா ஹா...

    haiyoo meeeee escapeeeeeeeeeeeeeeeeeee

    https://media.giphy.com/media/xFOc3rYIGE3aE/giphy.gif

    பதிலளிநீக்கு
  86. ///வை.கோபாலகிருஷ்ணன் said ///நான் இப்போ மீண்டும் குளிக்கப்போகிறேன் .... அதாவது தலை முழுகப் போகிறேன்.

    ....ஏதோ எங்கட நெல்லைத் தமிழன் ஸ்வாமீக்காக திங்கட்கிழமைகளிலும் + சிறுகதைகளுக்காக செவ்வாய்க்கிழமைகளிலும் மட்டும் இங்கு வந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்.

    அதற்கும் ஆபத்து வரப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் இன்றே தோன்றிவிட்டன. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ///

    ஹா ஹா ஹா எங்க ஓடுறீங்க கோபு அண்ணன்.. அப்பூடி எல்லாம் ஈசியா தலைமுழுகேலாது:)..

    “உரலுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு, இடிக்குப் பயந்தால் முடியுமோ?”:).. இனி ஒண்ணும் பண்ணேலாது இடியைத்தாங்கித்தான் ஆகோணும்:)... நெல்லைத்தமிழன் ஸ்வாமிக்கே(கோபு அண்ணனின் முறையில் சொன்னேன்:)) இப்போ தலை சுத்தும் என நினைக்கிறேன்ன்:) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  87. //Angelin said...
    @ கோபு அண்ணா //

    நோ அப்படி ஓட விட மாட்டேன் அடுத்த திங்கள் இங்கே ஆஜராகணும் சொல்லிட்டேன்///

    ஹா ஹா ஹா பார்த்தீங்களோ கோபு அண்ணன்.. இடிவிழத் தொடங்கிட்டுது:) ஹா ஹா ஹா ஓடி ஒளிக்கவும் இடமில்லை:) கூட்டாகச் சேர்ந்து டோச் லைட் அடிச்சே தேடிக் கண்டுபிடிப்போம்ம்:) அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கூஊஊ:).

    [ஹையோ ரோபோ வெளியே வந்துவிட்டதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ]

    பதிலளிநீக்கு
  88. Athira. ஆவி மை வச்சாரா பாருங்க. ஹா ஹா

    பதிலளிநீக்கு
  89. ///Angelin said...
    Athira. ஆவி மை வச்சாரா பாருங்க. ஹா ஹா///

    நில்லுங்க செக் பண்ணிட்டு வாறேன்ன்ன்:)...

    ஆங்ங்ங்ங்ங் இல்ல அஞ்சு அப்பூடிப் பெயரேதும் இல்லயே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  90. கட்டோ கடேசியா புதுசா ஒரு படம் இணைச்சிருக்கேன்!

    பதிலளிநீக்கு
  91. ///வை.கோபாலகிருஷ்ணன் said ///நீங்கள் எது எழுதினாலும் படிக்கவும், ரஸிக்கவும், வரவேற்கவும் பின்னூட்டங்கள் போடவும், வோட் போடவும் ஏராளமான ரஸிகர்கள், கூட்டம் கூட்டமாக வந்து குவிந்து விடுகிறார்கள். :)

    உங்கள் எழுத்துக்களெல்லாம் நகைச்சுவையாகவும் உள்ளது.

    . //
    ஹா ஹா ஹா கோபு அண்ணன்... “அணையப்போகிற விளக்கு சுடர் விட்டு எரியுமாமே?:))” அந்தப் பயம் வருது எனக்கூஊஊஊ:)

    ///தங்களின் கொச்சைத்தமிழ் உலகளவில் பரவி, தூய்மையான உண்மைத்தமிழ் பலருக்கும் இன்று மறந்தே போய் விட்டது///
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) என்னோடதுதானே டூய.. சே..சே.. டங்கு ஸ்லிப்ட்.. தூய தமிழ்:))..

    அனைத்துக்கும் மிக்க மிக்க நன்றிகள் கோபு அண்ணன்.. தேடி வந்து இவ்ளோ தூரம் பேசிச்சிரித்து மகிழ்ந்து.. நம்மையும் மகிழ்விச்சமைக்கு.

    பதிலளிநீக்கு
  92. இந்த நிமிடம்வரை அரண்டு மிரண்டு போனவர்கள் மொத்தம் 14 பேர்கள் மட்டுமே போலிருக்குது. :)) )) )) )) )) )) ))

    பதிலளிநீக்கு
  93. ///ஸ்ரீராம். said...
    கட்டோ கடேசியா புதுசா ஒரு படம் இணைச்சிருக்கேன்!///

    ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் தங்கூஊஉ தங்கூஊஊஊஊ....

    https://media.giphy.com/media/UQx1YFSYxCNEI/giphy.gif

    பதிலளிநீக்கு
  94. ///வை.கோபாலகிருஷ்ணன் said...
    இந்த நிமிடம்வரை அரண்டு மிரண்டு போனவர்கள் மொத்தம் 14 பேர்கள் மட்டுமே போலிருக்குது. :)) )) )) )) )) )) ))///

    இங்கு வந்தோரில் சிலர் போடவில்லை கோபு அண்ணன்:(

    பதிலளிநீக்கு
  95. @ஆனந்தா எங்கிருந்தாலும் சபைக்கு வந்து 5 வது வாக்கை அளிக்கவும் ..இல்லன்னா இல்லன்னா இல்லன்னா அதிரா உங்களை முட்டையில் அடைச்சு உருட்டிடுவாங்க :)

    பதிலளிநீக்கு
  96. ///நெல்லைத் தமிழன் said...
    அதிரா - என் ஹஸ்பண்டுக்கு இந்த செய்முறை நல்லா இருக்கு. Soup மாதிரி என்று சொல்லிவிட்டார். ஆனால், நாங்கள் பனங்கிழங்கு உபயோகப்படுத்துவதில்லை என்பதால், கேழ்வரகோ மற்றதோ போட்டுச் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். (கடைசியில் பலாக்கொட்டை வறுத்துச் சேர்ப்பதையும் அவர் விரும்பவில்லை). வாழ்த்துக்கள்.. உங்கள் புது டிஷ்ஷுக்கு.////


    ஆஆஆஆவ்வ்வ்வ் பார்த்தீங்களோ என் ரெசிப்பியின் புகழ் நெல்லைத்தமிழனின் கஸ்பண்ட்டுக்கும் பிடிச்சுப் போச்சாஆஆஆஆம்ம்ம்ம்ம்ம்.. நான் இதைப் போஸ்ட்டர் அடிச்சு ஒட்டப்போறேஏஏஏன்ன்ன்ன்ன்:) இதைப் படிச்சதும் எல்லோரும் உதட்டில விரல் வச்சு திகைச்சுப்போய் நிக்கப்போகினம்:)...

    வாவ்வ்வ் பலாக்கொட்டை விரும்பாட்டில் விடலாம் , நானும் சேர்க்கவில்லைத்தானே, நிறைய மரவள்ளிக்கிழங்கு பொரிச்சுப் போடாலே போதும் நல்ல சுவையாக இருக்கும்... புளிப்பு உறைப்பு கரெக்ட்டா இருக்கோணும்.. புளியும் கசப்பில்லாத நல்ல இனிப்புச் சுவையில் இருப்பின் கூழ் இன்னும் சுவையாக இருக்கும்.

    கொமெண்ட்ஸ் போடவே விடுகுதில்லை இப்போ.. நீ ஒரு ரோபோ இல்லை என்பதை நிரூபி எனக் குறுக்கே குறுக்கே நிக்குது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    பதிலளிநீக்கு
  97. ///Angelin said...
    @ஆனந்தா எங்கிருந்தாலும் சபைக்கு வந்து 5 வது வாக்கை அளிக்கவும் ..இல்லன்னா இல்லன்னா இல்லன்னா அதிரா உங்களை முட்டையில் அடைச்சு உருட்டிடுவாங்க :)///

    ஹா ஹா ஹா அதாரது அஞ்சு...?.. இன்னும் கெளதமன்(முழுப்பெயரையும் போட்டாலாவது வாறாரா பார்ப்போம்) அண்ணன் வோட் போடவில்லை என்பதனை மிகவும் சோகத்தோடு சொல்லிக்கொள்கிறேன்ன்..:).. இனியும் போடாது விட்டால்ல்.. கொடுத்த ரோசாப்பூவைப் பறிச்சிடுவோம்ம் ஹா ஹா ஹா எப்பூடியெல்லாம் மிரட்ட வேண்டிக்கிடக்கூஊஊஊஊ:)

    பதிலளிநீக்கு
  98. ஸ்வீட் சிக்ஸ்டீன் உள்பட இங்கு ஸ்வீட் சிக்ஸ்டீனுக்கு பின்னூட்டமிட்டுள்ளவர்கள் மொத்தம்: 18 நபர்கள்

    அதாவது 11 ஆண்களும் + 7 பெண்களும் மட்டுமே.

    வோட் அளித்துள்ளவர்கள்: 14 பேர்கள் மட்டுமே.

    வோட் அளிக்காத அந்த நால்வர் யார்? எனக் கண்டுபிடித்தீர்களா??????

    பதிலளிநீக்கு
  99. //Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...
    ஒடியல் கூழ் உண்டவர்
    இருநூறு ஆண்டுகள் வாழலாமாம்...
    ஒடியல், புழுக்கொடியல், பனாட்டு என
    பனம் பண்டங்கள் உண்டால்
    நம்மாளுங்க
    இரும்பு மாதிரி இருப்பாங்களாம்...
    //
    வாங்கோ வாங்கோ கரீட்டாச் சொல்லிட்டீங்க..:)200 எல்லாம் வாணாம்ம்.. ஹெல்த்தியாக இருந்தாலேபோதும்.

    ///என்றாலும்
    யாழ்ப்பாணம் வாங்கோ
    எல்லாம் வேண்டித் தருகிறேன்//

    ஹா ஹா ஹா இங்கு இப்போ எல்லா இடத்திலும் கிடைக்குதே... நாம் உறவுகள் ஒன்றுகூடினால் எப்படியும் இது செய்வதுண்டு. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  100. கோவை ஆவி said...
    டோஃபு மாதிரி இருக்கு பார்க்க!//

    வாங்கோ வாங்கோ... எதைச் சொல்றீங்க? Tofu எனச் சொல்றீங்களோ.. புரியவில்லை.. மிக்க நன்றி வரவுக்கு.

    பதிலளிநீக்கு
  101. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....... அதிகம் படிக்கப் பட்ட இடுகைகளில் 'நந்தா என் தம்பி'யை முந்தி மேலே சென்று விட்டது ஒடியல் கூழ்.

    பதிலளிநீக்கு
  102. ///வோட் அளிக்காத அந்த நால்வர் யார்? எனக் கண்டுபிடித்தீர்களா??????//

    ஹா ஹா ஹா கோபு அண்ணன் சொல்லட்டோ? என்னால் கண்டுபிடிக்க முடிஞ்சது... Avarkal truth, Raji, yalpavanan, kovai aavi...:)... ஹா ஹா ஹா இத்தனை பேரும் வோட் போடவில்லை:) ஹா ஹா ஹா சரிசரி அவர்களுக்கு என்னென்ன பிரச்சனையோ.. இங்கு வந்து பின்னூட்டம் போட்டதே சந்தோசம்தான். படிச்சதும் கிழிச்சிடுங்கோ:).

    பதிலளிநீக்கு
  103. @athira tofu is made from soy milk curd ..

    சோயா பன்னீர் நும் சொல்லலாம்

    பதிலளிநீக்கு
  104. ////ஸ்ரீராம். said...
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....... அதிகம் படிக்கப் பட்ட இடுகைகளில் 'நந்தா என் தம்பி'யை முந்தி மேலே சென்று விட்டது ஒடியல் கூழ்.///

    ஹா ஹா ஹா மொட்டை மாடியில் இருந்தும் புகைப் புகையா வருதேஏஏஏஏஏ:)... பின்ன ச்ச்சும்மாவோ.. ரெசிப்பியை விட.. என் கூக்குரல்தானே அதிகமா இருந்தது... புதுப்படம் வரமுன் வெளியாகும் போஸ்ட்டர்கள்.. அட் ..களைப்போல:)..

    http://4.bp.blogspot.com/-s3sIvuCfg4o/VP-82RkCOGI/AAAAAAAALSY/509obByLvNw/s1600/baby-cat-wallpaper.jpg

    பதிலளிநீக்கு
  105. ///Angelin said...
    @athira tofu is made from soy milk curd ..

    சோயா பன்னீர் நும் சொல்லலாம்//

    அது தெரியும் அஞ்சு... ஆனா இது தண்ணியாக இருக்கு இதைப்பார்த்து அப்படிச் சொன்னமையால் வேறு ஏதும் கூழ் வகையோ என யோசிச்சேன்.

    பதிலளிநீக்கு
  106. அந்த யாம் tofu மாதிரி இருக்கு ஒரு ஜாப்பனீஸ் ரெசிபி இப்படி செய்வாங .சூப்ல மிதக்க மாதிரி

    பதிலளிநீக்கு
  107. உங்களது ரெஸிப்பி கிராமத்து நினைவுகளைக் கிளப்பிவிட்டுவிட்டது. சின்ன வயதில் சாப்பிட்ட நுங்கு, பதனீர், பனம்பழம் என்றெல்லாம் ஞாபகம் வருதே! ஆனாலும் இந்தக் கூழ் சமாசாரம் ஆச்சரியப்படவைத்தது. கேட்டதில்லை இதற்குமுன்பு.

    கூழ் கிடக்கட்டும். அதிராஜி, நீங்கள் அதை விளக்கிய விதமிருக்கிறதே.. ஆஹா! என்ன விளக்கம்..என்ன விளக்கம்.. உங்கள் மெட்டீரியலை எடிட்டிங் செய்யாமல் அப்படியே விட்டு வாசகர்களைத் திக்குமுக்காடவைத்த ஸ்ரீராமுக்கு ஒரு மகுடம் சூட்டிவிடலாம்!

    பதிலளிநீக்கு
  108. வாழ்த்துக்கள் அதிரா.

    பதிலளிநீக்கு
  109. ///ஏகாந்தன் Aekaanthan ! said...
    கூழ் கிடக்கட்டும். அதிராஜி, நீங்கள் அதை விளக்கிய விதமிருக்கிறதே.. ஆஹா! என்ன விளக்கம்..என்ன விளக்கம்.. உங்கள் மெட்டீரியலை எடிட்டிங் செய்யாமல் அப்படியே விட்டு வாசகர்களைத் திக்குமுக்காடவைத்த ஸ்ரீராமுக்கு ஒரு மகுடம் சூட்டிவிடலாம்!///

    வாங்கோ சகோ ஏகாந்தன் வாங்கோ..

    ஓம் கூழ் கிடக்கட்டும்.. அந்த “ஜி” உம் கிடக்கட்டும்:)..
    ஹா ஹா ஹா அதுதான் ஸ்ரீராமிடம் உள்ள ஸ்பெஷாலிட்டியே:)... உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி:).. அதனால் தான் அவருக்கு மகுடம் :).

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  110. //priyasaki said...
    வாழ்த்துக்கள் அதிரா//

    மியாவும் நன்றி அம்முலு.

    பதிலளிநீக்கு
  111. வோட் பண்ணிய, கொமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் மிக்க மிக்க நன்றிகள். இன்று ஏனோ தெரியவில்லை என் போஸ்ட்டுக்கு மகுடம் கிடைக்கோணும் என ஒரு தவிப்போடும் மிகுந்த ஆவலோடும் இருந்தேன்.. அதன்படி கிடைத்து விட்டது.. மிக்க மகிழ்ச்சி... இனிமேல் வாழ்க்கையில் மகுடம் கிடைக்காவிட்டாலும்கூட, நான் கவலைப்பட மாட்டேன்ன்..:)


    https://cdn.meme.am/instances/500x/65336825.jpg

    பதிலளிநீக்கு
  112. படிக்கவே இத்தனை சுவையா இருக்குதே...

    பதிலளிநீக்கு
  113. //புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது மாதிரி இந்த மதுரைத்தமிழன் பட்டினி கிடந்து சாவானே தவிர இந்த கூழ் மட்டுமல்ல எந்த கூழையும் சாப்பிடமாட்டான்

    ஏன்? வீட்டுல குளிக்கச் சொல்வாங்கன்னு தயக்கமா? (கூழானாலும்... ஹிஹி)

    பதிலளிநீக்கு
  114. pramadham ! pramadham ! Athira kalakiteengka.. koola sonnen.. cool.. :)

    பதிலளிநீக்கு
  115. //அப்பாதுரை said...
    படிக்கவே இத்தனை சுவையா இருக்குதே...//

    வாங்கோ வாங்கோ மிக்க நன்றி. கையைக் காட்டுங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கையில மை இல்ல:).

    பதிலளிநீக்கு
  116. //Thenammai Lakshmanan said...
    pramadham ! pramadham ! Athira kalakiteengka.. koola sonnen.. cool.. :)//
    வாங்கோ தேனம்மை வாங்கோ... ஓ கூழையா சொன்னீங்க.. மீ அவசரப்பட்டு பேபி அதிராவுக்குச் சொன்னீங்களோ என நினைச்சுட்டேன்ன்:).. கையில மை இருக்கோ?:).. சரி சரி வாணாம்ம் விட்டிடுங்கோ:) ஹா ஹாஅ ஹாஅ மிக்க நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  117. அதிராவிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  118. ஹா ஹா ஹா மகுடத்துக்குதானே கோமதி அக்கா வாழ்த்துச் சொன்னீங்க.. மியாவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  119. இத்தனை வயதானாலும் சின்ன வயதில்தான் பனங்கிழங்கைப் பார்த்திருக்கிறேன் இந்த ஊரில் என்ன பெயர் சொல்லிக் கேட்டு வாங் கு வது. எனக்கு இந்தக் கூழ் சமாச்சாரம் என்றாலேயே அலெர்ஜி

    பதிலளிநீக்கு
  120. மொத்தத்தில் இகத ஒடியல் கூழ் காரமாக ருசியாக இருக்கும் போலிருக்கு. மற்றவர்கள் பின்னூட்டம் கொடுக்க முடியாமல் அதிராவே அதிர்ந்து கொண்டு இருக்கிறார்.
    இந்த ஒடியல் பேரே புதிது எனக்கு. அந்தந்த பிராந்தியங்களில் அவ்வப்போது கிடைக்கும் பொருள்களைச் சேர்த்து உணவுகள். அப்படி கூழில் பலாக்கொட்டையும் வருகிறது. சின்ன வயதில் இதெல்லாம் நாம் சாப்பிடுவதில்லை என்று சொல்லியே சில ஸாமான்கள் அறிமுகமே ஆவதில்லை. அந்த வகையில் பனங்கிழங்கும். நுங்கு சாப்பிடுவோம்.
    சத்தி முற்றப் புலவரின் நாராய்,நாராய் செங்கால் நாராய், பனம்படுபனையின் கிழங்கு பிளந்தன்னப் பவளக்கூர்வாய் செங்கால் நாராய், நாரைவிடுதூது ஞாபகம் வந்தது. சிறுதானிய மாவைக்கொண்டும் இந்த வகையில் கூழ் செய்யலாம். புதியதொரு குறிப்பு. அதிரவைக்கும் பின்னூட்டங்களுடன். நன்றி அதிரா. அன்புடன்

    பதிலளிநீக்கு
  121. இந்த என்று திருத்தி வாசிக்கவும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  122. பதிவில் இருக்கும் படத்தில் நீங்களா சும்மா சொல்லக் கூடாது அழகாகவே இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  123. வாங்கோ ஜி எம் பி ஐயா மிக்க நன்றி.

    ///பதிவில் இருக்கும் படத்தில் நீங்களா சும்மா சொல்லக் கூடாது அழகாகவே இருக்கிறீர்கள்//
    நீங்களாவது நம்பினீங்களே:) மிக்க சந்தோசம்.. இது நமக்குள் இருக்கட்டும்:).

    பதிலளிநீக்கு
  124. வாங்கோ காமாட்சி அம்மா வாங்கோ.. இதுவரை உங்களோடு நான் பேசியது கிடையாது, ஆனா நன்கு பேசிப்பழகியவர்போல உங்கள் எழுத்து மிக்க மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!