திங்கள், 3 ஜூன், 2013

சுஜாதாவைப் பிரிய நினைத்த சுஜாதா - படித்ததன் + எண்ணங்களின் பகிர்வு

           
லேசான, மிக லேசான திடுக்கிடலை ஏற்படுத்திய கட்டுரை. 2/6/13 தேதியிட்ட தினகரன் நாளிதழின் இணைப்பான வசந்தத்தில் ப்ரியா என்பவரால், பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் மனைவியை - ஒரிஜினல் சுஜாதாவை - எடுத்த பேட்டி.

                                        
 
'இவருமா' என்று நினைக்க வைத்தது. சொன்னவரையும் சொல்லலாம். சொல்லப் பட்டவரையும் சொல்லலாம்.

குறைகள் பட்டியலால் அல்ல. அவற்றை அம்பலத்தில் விட்டதால்!  யாரிடம் குறையில்லை..  மஹாகவி பற்றிகூட இப்படிச் சில செய்திகள் உண்டு.  குறைகள் வெளியே தெரியாமல் மறைக்கப் படவேண்டும் என்று சொல்லவில்லை. இந்த உணர்வுகள் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் இருக்கும். ஒரு பிரபலத்தின் குறைகளை பொதுவில் பேச இப்போது என்ன தேவை வந்தது என்ற கேள்வி வந்தது.

(ஆனால் ஒன்று. ஒரு செய்தியைத் தரும்போது 'அழுதான்' என்று சொல்லலாம். 'நீண்ட நேரம் அழுத்கொண்டே இருந்தான்' என்று சொல்லலாம். 'கண்ணீர் விட்டுக் கதறி 'கோ' என்று அழுதான்' என்று சொல்லலாம். ப்ரெசென்ட் செய்வதில் இருக்கிறது சூட்சுமம். சில பேட்டிகளில் சில குறிப்பிட்ட வரிகளை பரபரப்புக்காக 'ஹைலைட்' செய்திருப்பார்கள்)


நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சுயத்தை இழக்கும் மனைவிகள், தங்கள் திறமைகளை, தங்கள் சந்தோஷங்களை, கணவர்களுக்காகத் தியாகம் செய்கிறார்கள். எந்த அளவு என்று நம்முடைய பெண் வாசகர்கள் பகிர நினைத்தால், பகிர்ந்து கொள்ளலாம்.


கணவர்கள் இழப்பதில்லையா? விட்டுக் கொடுப்பதில்லையா?


இருபக்கமும்  உண்டு.
  நினைக்கும் எல்லாவற்றையும் பகிரவும் முடியாது!

மனைவியின் திறமைகள் கணவர்களுக்கு லேசான பொறாமையைக் கொடுக்குமோ... மற்றவர்கள் அவர்களைப் பாராட்டினால் தாங்கிக் கொள்ள முடியாமல் போகுமோ..? சமீபத்திய பிரபல பாடகியின் கணவர் தற்கொலை நினைவுக்கு வருகிறது.

சமீபத்தில் என்னுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு உறவினர் தன அம்மா தங்களுக்கெல்லாம் பார்த்துப் பார்த்துப் பரிமாறி, சாப்பாடு போடும் அம்மா, என்ன சாப்பிடுகிறார் என்று தெரியாமல் போனது, பாதிநாள் அவர்கள் சரியாகவே சாப்பிட்டதில்லை போல என்று இன்று தெரிகிறது' என்றார். அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதே அருகிலிருந்த என் மனைவி, 'மனைவிகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று கணவர்கள் பார்க்கிறார்களா' என்று கேட்டார். 'நாமல்லாம் சேர்ந்துதானேப்பா சாப்பிடறோம்?' என்றேன். 'லஞ்ச் சரி, நைட்டு?' என்று யோசிக்க வைத்தார்.

 
பிரபலமானவர்களின் மனைவிகள் இழப்பது சற்று அதிகமோ? அல்லது, பிரபலங்கள் என்பதாலேயே இவை அதிகம் கவனிக்கப் படுகின்றனவோ........

                                                  
 
மனதின் மேல் படியில் இருந்தவர், ஒரு படி கீழே இறங்கி விட்டாரோ என்று தோன்றும்போதே அவர் எழுத்துகளுக்கு என்றும் நான் ரசிகன்தான், சொந்த வாழ்க்கை பலவீனங்களைப் பார்க்கக் கூடாது என்றும் தோன்றுகிறது! எல்லோருக்குமே ஒரு மறுபக்கம் உண்டு என்று இன்னும் நன்றாகத் தெரிகிறது. எல்லார் வாழ்விலும் இது சகஜம். குறைகள் இல்லாத மனிதர் யார்? நாளை இதே கட்டுரைக்கு ஒரு மறுப்பு வந்து விடக்கூடும்... 'நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை' என்று!

எழுத்தாளர்கள் பிரபலமானவர்கள் என்றில்லை, எல்லாக் கணவர்களும் யோசிக்க வேண்டிய நேரம் இது.


அந்தக் கட்டுரையின் முக்கியப் பகுதிகள் இங்கே...(அங்கே படிக்காதவர்களுக்காக - இணையத்திலேயே
தினகரன் நாளேடு, வசந்தம் படிக்க முடிகிறது)


" ............................................... பொதுவா கலை உலகைச் சேர்ந்தவர்கள் வேற உலகத்துல வாழ்வாங்கன்னு சொல்வாங்க. அதை என் கணவர் விஷயத்துல கண்கூடாப் பார்த்தேன். அவரோட மனநிலை எப்ப, எப்படி மாறும்னு யாருக்கும் தெரியாது. தன்னோட அந்தரங்கத்துக்குள்ள அவர் யாரையும் அனுமதிச்சதில்லை. எப்பவும் எழுதறது, படிக்கறது, ஸ்டோரி டிஸ்கஷன் என்று ஒரு வட்டத்துக்குள்ளையே இருப்பார். மனைவி, குழந்தைங்க பத்தின சிந்தனை அவருக்குக் கிடையாது. சுருக்கமாச் சொல்லணும்னா பசங்க என்ன படிச்சாங்க, எப்படிப் படிச்சாங்கன்னு கூட அவருக்குத் தெரியாது. பசங்களாப் படிச்சாங்க....  அவங்களா வேலையைத் தேடிகிட்டாங்க... அவங்களா பிடிச்ச பெண்ணைத் திருமணம் செய்துகிட்டாங்க... மத்தபடி அப்பாவா அவர் எந்த ஸ்டெப்பும் எடுத்ததில்லை.

இந்த மனநிலையை மனைவியான என்னிடமும் செலுத்தினார். நான் சாப்பிட்டனா....தூங்கினனா...
எனக்கு என்ன வேணும்... எதையும் அவர் கேட்டதில்ல...செஞ்சதில்ல..அவர் எழுதினதை நான் படிச்சா அவருக்குப் பிடிக்காது. ........

குடும்பத்தைத் தாண்டிப் பெண்கள் வெளில வரக்கூடாதுனு நினைப்பார். இதுக்குக் காரணம், அவர் வளர்ந்த விதம்.

அவரோட உலகம் ரொம்பச் சின்னது. ஸ்ரீரங்கத்ல பாட்டி வீட்லதான் வளர்ந்தார். அந்த அக்ரஹாரம்தான் அவருக்கு எல்லாம். அதைத் தாண்டி அவர் சின்ன வயசுல வந்ததில்லை. வளர்ந்தபிறகு கூட மனதளவுல அந்த அகரஹாரப் பையனாத்தான் இருந்தார்.


ஆனா எங்க வீட்ல அப்படிக் கிடையாது. பெண்களுக்கு எல்லா உலக விஷயமும் தெரியணும், அவங்களும் படிக்கணும்னு நினைச்சாங்க. அப்படித்தான் என்னை வளர்த்தாங்க. எங்க தாத்தா ஆங்கிலேயர் கிட்ட வேலை பார்த்தவர். அதனால எங்கம்மாவுக்கு ஆங்கிலத்தையும், அறிவியலையும் தாத்தா ஸ்பெஷலா ஒரு ஆங்கிலோ இந்திய டீச்சரைப் பிரைவேட்டா நியமிச்சு படிக்க வச்சார்.

என் தங்கை டாக்டருக்குப் படிச்சுட்டு அமெரிக்காவுல இருக்கா. ஒரு தம்பியும் அமெரிக்கால செட்டிலாயிட்டான். இன்னொரு தம்பி சென்னைல நல்ல வேலைல இருந்து ரிடையர் ஆகியிருக்கான்.


இப்படிப்பட்ட குடும்பத்துலதான் 20 வருஷங்கள் வளர்ந்தேன். திடீர்னு கல்யாணமாகி வேறொரு சூழல் அமைந்சதும் முதல்ல ஒண்ணும் புரியலை. கிட்டத்தட்ட பத்து வருஷங்கள் ரொம்பச் சிரமப் பட்டேன். அப்புறம் என் கணவரோட உலகம் எனக்கு பழகிடுச்சு. அவரோட உலகத்துக்குத் தகுந்த உயிரினமா வாழ ஆரம்பிச்சேன்.

பலநாட்கள் அம்மா மடில படுத்து அழுதிருக்கேன். திரும்பி வந்துடறேன்னு கதறிருக்கேன். ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழ முடியாது அட்ஜஸ்ட் பண்ணிக்கன்னு சொன்னாங்க. அந்த காலகட்டம் அப்படி. அதுவே இன்றைய சூழ்நிலையா இருந்திருந்தா எங்கம்மா கிட்ட யோசனை கேட்டிருக்க மாட்டேன். குழந்தைகளோட தனியா வந்திருப்பேன்...


அவருக்கு மனைவி குழந்தைகள் மேல அன்பு இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா, அதை வெளிப்படுத்தத் தெரியாது. வெளிப்படுத்தாத அன்பால யாருக்கு என்ன பயன்? உறவுன்கர சக்கரம் சுழல அன்புதானே அவசியம்? அவரை முழுசாப் புரிஞ்சிக்க எனக்குப் பத்து வருஷங்களாச்சு. அதுக்குப் பிறகு, என்னோட சுயத்தை விட்டுட்டு, அவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும் வாழ ஆரம்பித்தேன். அவருக்கு ரெண்டு பைபாஸ் சர்ஜரி நடந்தது. அதனால அவரால எங்கயும்  போக முடியாது. துணையா நான் இருந்தேன்.....


எங்களுக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேருமே அமெரிக்காவுல வேலை பார்த்துகிட்டு இருந்தாங்க. அவர் காலமானதும் பெரியவன் சென்னைக்கு வந்துட்டான். சின்னவன் அமெரிக்காவுலதான் இருக்கான். எனக்கு வர்ற மருமகள் தமிழ்ப்பெண்ணா இருக்கணும்னு ஆசைப் பட்டேன். அது நடக்கலை. பெரியவன் பஞ்சாபிப் பெண்ணையும், சின்னவன் ஜப்பானியப் பெண்ணையும் விரும்பிக் கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. ஆனா ரெண்டு மருமகள்களுமே தங்கமானவங்க.. என்னைக் கைல வச்சுத் தாங்கறாங்க.....


இதுவரைக்கும் கணவன், மாமனார், மாமியார், அம்மா, அப்பா, பிள்ளைகள்னு மத்தவங்களுக்காகவே வாழ்ந்துட்டேன். இப்பதான் எனக்காக வாழ ஆரம்பிச்சுருக்கேன். கோயில், யாத்திரைகள்னு பொழுது போகுது. அமெரிக்காவுல இருக்கற சின்னவன் வீட்டுக்கும், தம்பி, தங்கைகள் வீட்டுக்கும் போய் வர்றேன்...விருப்பப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். என்னோட நேரங்கள் எனக்கானதா செலவாகுது. பெரிய எதிர்பார்ப்புகள் எனக்குக் கிடையாது. அதனாலேயே சந்தோஷமா இருக்கேன். ஏன்னா, எதிர்பார்ப்பு இருந்தாதான் ஏமாற்றம் ஏற்படும். என் வாழ்க்கை எனக்குக் கத்துக் குடுத்த பாடம் இது..."


என்று சொல்லும் திருமதி சுஜாதா கடைசிவரை யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம். இவர் விலங்கியல் துறையில் பட்டப் படிப்பு முடித்தவராம்.
   

82 கருத்துகள்:

  1. mmmmmmமுதல்லே இதை ஜீரணம் செய்துக்கறேன். கருத்துக்கு நிதானமா வரேன். ஆனாலும் சுஜாதா என்ற எழுத்தாளரின் கதைகளின் பெண் பாத்திரங்கள் சுதந்திரச் சிந்தனை உள்ளவர்களாகவே படைக்கப்பட்டிருந்தனர் என்பதும் நினைவில் வந்து போனது. முழுப்பேட்டியையும் படிக்க முடியுமானு பார்க்கிறேன். தினகரன் எல்லாம் படிக்கிற வாய்ப்பே இல்லை. :(((( இணையத்தில் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இதை முரளிதரன் பதிவில் படித்தேன்.
    திருமதி. சுஜாதாவின் துணிச்சலைப் பாராட்டுகிறேன், தாமதமானாலும்.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. எல்லோருக்கும் பொதுவான பிரச்சினைதான். அது எழுத்தாளரின் மனைவி என்னும்போது அவர் தனிமனுஷியாகப் பிரபலிக்கச் சந்தர்ப்பம் இல்லை. சுஜாதா என்ற மனிதரின் எழுத்துகள் தான் முதலில் கவர்கிறார்.
    அவரே தெ மனைவியின் சோகத்தை ஒரு சிறு சம்பவத்தில் பதிந்திருந்தார்.தங்கள் முதல் குழந்தை இறந்ததைப் பற்றி.

    வெளிப்படுத்தத் தெரியாத கணவர்களைப் பெற்றவர்கள் எங்கள் தலைமுறை மனைவிகள். இப்பவும் இருக்கலாம்.

    இவர் அதீதமாகப் பாதிக்கப் பட்டிருக்கலாம்.நெருங்கிய வட்டங்களில் தெரிந்த விஷயமாகவும் இருக்கலாம்.

    என்ன பிரயோசனம்?

    பதிலளிநீக்கு
  5. 'கணவர்கள் இழப்பதில்லையா? விட்டுக் கொடுப்பதில்லையா?' என்றக் கேள்வி இங்கே அசிங்கமானது.

    பதிலளிநீக்கு
  6. சுஜாதா பிரபலம் என்பதால் இது கவனம் ஈர்க்கிறது. மற்றபடி நிறையக் கணவர்கள் இதுபோல இருக்கத்தான் செய்கிறார்கள். இப்ப இவங்க இப்படி பேட்டி தர்றதால என்ன பயன்னு தெரியல...? சுஜாதா ஸ்ரீரங்கத்துல பாட்டி வீட்ல வளர்க்கப்பட்ட விதம், அவர் குடும்பச் சூழல் எல்லாம்தான் இதற்குக் காரணமாக அமைந்திருக்கும். வேறென்ன...!

    பதிலளிநீக்கு
  7. பயன் திருமதி சுஜாதாவுக்கு கணேஷ். இப்போதாவது கிடைக்கட்டுமே.

    பதிலளிநீக்கு
  8. பெண்டாட்டி பிள்ளைகளை ஆத்திரத்தில் கத்தி மிரட்டி அடித்து உதைத்துத் துன்புறுத்தினாரா? அதைப் பற்றிப் பேட்டியில் ஏதாவது வந்திருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  9. //பலநாட்கள் அம்மா மடில படுத்து அழுதிருக்கேன். திரும்பி வந்துடறேன்னு கதறிருக்கேன்.

    how sad. how very sad.

    பதிலளிநீக்கு
  10. //குறைகள் இல்லாத மனிதர் யார்?

    இந்தக் கட்டுரையில இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கிறது shocking.

    பதிலளிநீக்கு
  11. இந்த பதிவு திரு அப்பாதுரை அவர்கள் பதிவில் படித்த தினபிராணிகள் கவிதை போல் இருக்கே!
    சில இடங்களில் பெண்ணின் மனதை அவளின் ஆசைகள், அவளின் மனஉணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாமல் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டு இருப்பார்கள்.
    இருவரும் மனம்விட்டு பேசினாலே பாதி பிரச்சனை சரியாகி விடும்.

    பதிலளிநீக்கு
  12. இந்த மனம் விட்டுப் பேசுவதிலும் ஈகோ தலைதூக்குதே! :((((

    வாய் விட்டுச் சண்டையும் போட்டுக்கணும், அடுத்த நிமிடமே சமாதானமும் ஆகணும். அதை விடுத்து நீ ஒரு மூலை, நான் ஒரு மூலைனு இருந்தால்.................. :((((((((

    பதிலளிநீக்கு
  13. அவருக்கு மனைவி குழந்தைகள் மேல அனுப்பு இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா, அதை வெளிப்படுத்தத் தெரியாது. வெளிப்படுத்தாத அன்பால யாருக்கு என்ன பயன்? உறவுன்கர சக்கரம் சுழல அன்புதானே அவசியம்? அவரை முழுசாப் புரிஞ்சிக்க எனக்குப் பத்து வருஷங்களாச்சு. அதுக்குப் பிறகு, என்னோட சுயத்தை விட்டுட்டு, அவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும் வாழ ஆரம்பித்தேன். அவருக்கு ரெண்டு பைபாஸ் சர்ஜரி நடந்தது. அதனால அவரால எங்கயும் போக முடியாது. துணையா நான் இருந்தேன்.....//

    அவர் அழகாய் சொல்லிவிட்டாரே!
    நிறைய பேர் இப்படித்தான் தன் சுயத்தை காட்டாமல் வாழ்ந்து மறைந்து இருக்கிறார்கள்.
    தன் கணவன் , குடும்பம் , குழந்தைகள் என்று தன் சுய விருப்புகளை விட்டுக் கொடுத்து வாழ்ந்து இருக்கிறார்கள்.


    //விருப்பப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். என்னோட நேரங்கள் எனக்கானதா செலவாகுது. பெரிய எதிர்பார்ப்புகள் எனக்குக் கிடையாது. அதனாலேயே சந்தோஷமா இருக்கேன். ஏன்னா, எதிர்பார்ப்பு இருந்தாதான் ஏமாற்றம் ஏற்படும். என் வாழ்க்கை எனக்குக் கத்துக் குடுத்த பாடம் இது..."//

    இன்று அவரின் வாழ்க்கை நன்றாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
    பழைய வாழ்க்கையின் தாக்கம் அவர் வாழ்வை சிதைக்காமல் இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
    எதிர்பார்ப்பு அற்ற வாழ்க்கை பெரிய வரம் அல்லவா!

    பதிலளிநீக்கு
  14. கீதா சொல்வதும் சரிதான் மனம் விட்டு பேசி ,சணடையும் போட்டுக்கலாம், அது நீடிக்காமல் சமாதானம் ஆகவேண்டும் அது மிக முக்கியம்.
    சண்டையில் மற்றவர்கள் நுழையாமல் வேறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. கோமதி அரசு, இப்போ வேணா எதிர்பார்ப்பு என்பது இருக்காது; இருக்கவும் வாய்ப்பில்லை. ஆனால் அவருக்கு எதிர்பார்ப்பு என்பது இருந்ததால் தானே இந்தப் பகிர்வே. இல்லைனால் அவர் தன் கணவன் இறந்து இத்தனை வருடங்களுக்குப் பின்னர் ஏன் சொல்லணும்??? முடிஞ்சுபோன ஒன்றை போஸ்ட் மார்ட்டம் ஏன் செய்யணும்? எதிர்பார்த்து ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு/அல்லது மறந்து வாழ்ந்திருப்பதால் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை.

    பதிலளிநீக்கு
  16. அதோடு இதிலே துணிச்சல் ஏதும் இருப்பதாகவும் எனக்குத் தெரியலை. அவர் இருக்கையிலேயே இந்தப்பேட்டி எடுக்கப்பட்டு அப்போ அவர் சொல்லி இருந்தால்???? இத்தனை காலம் மனைவியைப் புரிஞ்சுக்கலையேனு அவருக்கும் தெரிஞ்சிருக்கும், இவங்களுக்கும் கணவருக்குப் புரிய வைச்சிருக்கோமேனு இருந்திருக்கும். போனப்புறம் முதுகுக்குப் பின்னாடி பேசுவதில் என்ன பயன்? இருக்கும்போதே சொல்லி இருந்தாரெனில் கடைசி சில ஆண்டுகளாவது ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க முயன்றிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  17. எதிர்பார்ப்பு இருந்தாதான் ஏமாற்றம் ஏற்படும். என் வாழ்க்கை எனக்குக் கத்துக் குடுத்த பாடம் இது..."//


    வாழவேண்டிய வயதில் ஏக்கப்பட்டுவிட்டு இப்போது பாடம் கற்று என்ன பயன் ..??!!

    குதிரை தப்பி ஓடியபின் லாயத்தைப் பூட்டி வைத்த கதையாக ..!

    பதிலளிநீக்கு
  18. இத்தனை  நாள் ஏன்  சொல்லவில்லை என்பதன் அசல் காரணம் அவருக்குத்தான் தெரியும். ஆனால் பயம் என்ற வியாதியை பற்றி அதிகம் பேருக்குத் தெரிவதில்லை. மிக மிகக் கொடுமையான வியாதி. ஒருவரின் தன்மானம் சுயமரியாதை எல்லாவற்றையும் அழிக்கக் கூடிய  மிகக் கொடிய வியாதி. அவருக்கு இந்த வியாதி இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்

    இப்ப சொல்லி எண்ணப் பிரயோஜனமென்பது வருந்த வைக்கிற கேள்வி. முன்பே சொல்லியிருந்தால் கணவரின் தரப்பு விளக்கமும் கிடைத்திருக்கும், true. Still, இங்கே சுஜாதா எப்படிப்பட்டவர் என்ற judgmentஐத் தவிர்த்து அவர் மனைவி  இப்போதாவது சொல்லி சுமையிறக்கினாரே என்று நாம் அந்தப் பெண்மணிக்காக மகிழ வேண்டும். 

    தான் பட்ட துயர் பிறர் படக்கூடாதே என்ற எண்ணமும் காரணமாக இருக்கலாம்.

    Of course, நாளைக்கே இந்தப் பேட்டியை மறுத்து  அறிக்கை வெளியிடலாம். அதற்கும் பயம் தான் காரணம் :-).


    பதிலளிநீக்கு
  19. இது குறித்து ஜெயமோகன் எழுதிய பதிவு எனக்கு பிடித்திருந்தது... மகாகவி பாரதி அவரது குடும்பத்திற்கு இல்லை அவரால் அவரது குடும்பத்திற்கு ஏற்படாத இன்னல்களா என்ன?

    சில அசாதாரணர்கள் சில அற்ப விசயங்களில் சாதாரணராய் இருந்தாலும் அசாதாரணங்கள் மூலம் கவனிக்கப்படுகிறார்கள், மற்றவை எல்லாம் சாதாரணம் ஆகிவிடுகிறது...

    எழுத்து என்னும் போதைக்குள் அல்லது ஆழ்மன தியானதிற்குள் சுஜாதா இருந்தார், என்ன ஒன்று அவரால் இறுதி வரை ரங்கராஜனாய் வாழமுடியவில்லை. இதனால் இழப்பு அவரது குடும்பத்திற்கு...

    ஒருவேளை அவர் ரங்கராஜனாய் வாழ்ந்திருந்தால் ஒரு மகாகவி வெறும் கவியாய் அல்லது வெறும் சுப்பிரமனியாய் வாழ்ந்திருந்தால் இழப்பு தமிழுக்கு...

    பலரும் குடும்பம் சார்ந்து தம்முள் இருக்கும் அசாதாரனரை ஒழித்து வாழப் பழகிக்கொண்டார்கள். சிலர் மீறி வெளிப்பட்டு இருக்கிறார்கள். அவ்வகையில் ரங்கராஜன் என்றுமே சுஜாதா தான்...

    சுஜாதாவின் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்கள் சுஜாதாவை பிடிக்காதவர்களுக்கு கிடைத்த அவல்பொரி அவ்வளவே...

    பதிவர்கள் பெரும்பாலனவர்கள் நோக்கி என் ஒரு கேள்வி? பதிவுலகுக்கு முன் பின் என்று உங்கள் வாழ்க்கையை பாருங்கள் , பதிவுலகுக்கு முன் உங்களுக்கு கிடைத்த பதிவுலகில் இல்லாத பொழுது உங்களிடம் இருந்த சுதந்திரம் ஒன்று இப்போது பறிபோய் இருக்கும், இல்லை எனக்கு பறி போய் இருக்கிறது.... இதை சொல்லிக் கொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை.

    ஆனால் பதிவுலகுக்கு பின் என்பதில் என்னுள் இருக்கும் மிக முக்கியமான என்னை அடையாளம் கண்டு கொண்டேன் அல்லது கண்டு கொண்டிருக்றேன்...

    ஒரு மிக சாதாரண பதிவராய் கருதும் எனக்கே சில சுதந்திரங்கள் பறி போனதாய் உணரும் நான், என்னால் சுஜாதா மற்றும் திருமதி சுஜாதா அவர்களின் எல்லைகளை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

    நான் சொல்ல வருவது. ஒரு மனிதரின் அந்தரங்க வாழ்வுக்குள் புகுந்தால் அது நாற்றமாய் இருக்கவே வாய்ப்பு அதிகம், அதை தோண்டி எடுத்து பரபரபாக்கும் அந்த நபர் மற்றொருவரை நிர்வாணப் படுத்துவதன் மூலம் தன்னையும் தன சமுகத்தையும் நிர்வாணப்படுத்துகிறார் என்பதே...

    பதிலளிநீக்கு
  20. மற்ற‌வர்களின் கவிதைகளை ரசிக்கத் தெரியாதவன் நல்ல கவிஞனாக இருக்க முடியாது. அது போலத்தான் மற்ற்வர்களின் அன்பை உணர முடியாதவர்களுக்கு தன் மனதிலுள்ள‌ அன்பை உணர வைக்கவும் முடியாது. திருமதி. சுஜாதா ' வெளிப்படுத்தாத அன்பால யாருக்கு என்ன பயன்? உறவுன்கர சக்கரம் சுழல அன்புதானே அவசியம்? ' என்று சொல்லியிருப்பதை நானும் வழி மொழிகிறேன்.

    எங்கள் குடும்ப நண்பர், 65 வயதைத்தாண்டியவர், இன்னும் தன் மனைவி தன்னைப்புரிந்து கொள்ள‌வேயில்லை என்று எங்களிடம் பல முறை வாய் விட்டு அழுதிருக்கிறார். அன்பும் புரிதலும் மறுக்கப்படுகிற‌ இல்லற வாழ்க்கை, அது ஆணானாலும் பெண்ணானாலும் மிகவும் கொடுமையானது.

    பிரபலமானவர்கள் எப்போதுமே ஒரு clean image உடன் தான் இருக்க வேன்டும் என்று அவரின் ரசிகர்கள் விரும்புவார்கள். தான் தன் கணவரின் clean imageஐ உடைக்கிறோம் என்பது திருமதி.சுஜாதாவிற்கு நிச்சயம் புரியும். அப்படியும் இப்படி வெளிப்படையாக பேட்டி கொடுத்திருப்பது, அவர் மனதின் பாரங்கள், காயங்கள் இன்னும் அப்படியே குறையாமல் இருப்பதை தான் காட்டுகிறது. மனதின் வலி அவருக்கு கடைசி வரையிலும் குறையாது.

    பதிலளிநீக்கு
  21. ஒரு வேளை கமல் தனக்கும் தன் சார்ந்த வேலைக்கும் குடும்பம் பெரிய சிக்கல் என்று உதறிவிட்டுவிடுகிறார்களோ என்னவோ...

    பதிலளிநீக்கு
  22. நான் எழுத்தாளர் சுஜாதாவை மதித்தாலும், திருமதி சுஜாதாவின் கட்சி! பிரபலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் குடும்பத்தோடு கொஞ்சம் நேரமாவது செலவிட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  23. என் ஆதர்ச எழுத்தாளர்கள் பலருக்கும் இது போன்ற பிரச்சனை இருக்கிறது. எழுத்தை அவர்களது சொந்த வாழ்க்கையிலிருந்து பிரித்துப் பார்க்க கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்தது அவ்வளவு தான்.

    பதிலளிநீக்கு
  24. எனக்கே கூட கதை எழுதும் நேரம், குடும்பத்துடன் நேரம் செலவிடுவதில்லையோ என்ற குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. அதனால் நான் எழுதும் நேரத்தை கூடுமானவரை, குடும்பத்தினர் உறங்கும் நேரமான ,வாரயிறுதியின் விடியற்காலைகளாக தேர்ந்தெடுக்கிறேன். அதிகமாய் எழுதும் நாட்களில் கண்டிப்பாய் பிள்ளைகளை பகலில் வெளியே அழைத்துப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  26. facebookல் காயத்ரி கார்த்திக் என்பவர் அளித்த பின்னூட்டத்தின் ஒரு பகுதி இது:

    90 's பாரதிதாசனின் மனைவியின் பேட்டி :

    என் தமிழ் டீச்சர் தான் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்....பாரதி தாசனின் மனைவியை அப்போதைய (தத்தி ) DD எடிட் செய்யாமல் வந்த ஒரு பேட்டி ஒன்று உண்டு....அதில் பல குற்றச்சாட்டுகளை அள்ளி தெளித்த அவர் மனைவி....வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை கவனிக்க ஒரு வேலைக்காரியை போலதான் தான் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்...இரவு பன்னிரண்டு மணி வரை வேலை வாங்கி பிழிந்தெடுத்து விடுவாராம்....என் தமிழ் டீச்சர் அப்போது உள்ளம் கொதித்து சொன்னது.
    ஆனானப்பட்ட காளியின் பிரியன் பாரதியாரையே சகோதரி நிவேதிதா விழாவிற்கு மனைவியை அழைத்து வராத நீங்கள் பெண்ணீயத்தை பற்றி என்ன எழுதி விட போகிறீர் என மூக்குடைத்தார் ....

    பதிலளிநீக்கு
  27. நிறையப் பேசலாம் இதுகுறித்து. அடிப்படையில், இருவர் குடும்பத்தில் இருந்த பழக்கவழக்கங்களால் வந்த வேறுபாடுகள் என்பது முழுபேட்டியையும் படித்தபோது புரிந்தது. இதேபோன்ற சூழ்நிலையில் பல பெண்களைக் கண்டிருக்கிறேன். பரிதாபம்தான்.

    இளவயதில் மனைவியின்மீது செலுத்தப்படும் ஆதிக்கங்கள், கணவரது முதுமையின்போது - மனைவியின் உதவி அதிகமதிகம் தேவைப்படும் அந்த சமயத்தில் - ’முறையாகத்’ திருப்பிக் கொடுக்கப்படுவதையும் பார்த்திருக்கிறேன்.

    எனினும், இப்போது திருமதி. சுஜாதா அவர்கள் வெளிப்படுத்தியிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. மறைந்தபின்னும் மங்காமல் வளர்ந்துவரும் புகழுக்குக் கொடுக்கப்பட்ட விலைகளில் தன் சுதந்திரமும் ஒன்று என்ற உளக்குமுறலின் வெடிப்போ??!! அவரது நியாயம் அவருக்கு!

    அவரது எண்ணங்களை விமர்சிப்பதைவிட, பாடம் கற்றுக்கொள்வது மட்டுமே நல்லது.

    பதிலளிநீக்கு
  28. ஹூசைனம்மா,

    பல சமயங்களிலும் உங்கள் பின்னூட்டம் ஆச்சரியத்தை அளித்திருந்தாலும் இன்று தான் மிக அருமை. அதுவும் அந்தக் கடைசி வரி, மிக மிக அருமை. நீங்க சொல்லி இருப்பது மிகவும் உண்மை. எனக்கும் இந்தப் பதிவைப் படித்ததும் இப்போ ஏன் சொல்றாங்கனு தான் தோன்றியது. ஆனால் இதிலிருந்தும் பாடம் கத்துக்கலாம்னு நீங்க சொன்னதும் தான் புரியுது. ரொம்ப அருமையான பின்னூட்டம். உங்கள் மன முதிர்ச்சிக்கு ஒரு "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ"

    பதிலளிநீக்கு
  29. கீதா மேடம்,

    பல பதிவுகளில் உங்க கருத்தும் என் கருத்தும் ரொம்ப ஒத்துப்போகும். இப்பவும் அப்படியே. உங்களைப் போன்ற பெரியவர்களிடம் (வயசுக்காகச் சொல்லலை, அனுபவத்தில்) பாராட்டு பெறுவது பாக்கியம். மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  30. இதை இப்போது வெளிப்படுத்த என்ன அவசியம் என கேள்வி எழுப்புவதை விட இதற்குப் பின்னான வலிகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதனால் அவரது மனப்பாரம் குறைகிறது என்றால் அவர் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து மேலும் விமர்சிக்காமல் அமைதி காப்பதே சரியானது. இத்தனை படைப்புகளை சமூகத்துக்கு சுஜாதா அளிக்க பக்கபலமாக இருந்த நன்றிக்காகவாவது. அவர் வேதனை அவருக்கு. எதையும் taken for granted ஆக எடுத்தபடி நகருகின்றவர்களை இந்தப் பேட்டி சிந்திக்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
  31. //எதையும் taken for granted ஆக எடுத்தபடி நகருகின்றவர்களை இந்தப் பேட்டி சிந்திக்க வைக்கும்.//

    Nobody took it for granted. அத்தனை வருடம் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போச்சே என்ற வேதனை தான். அவ்வளவு படிச்சவங்களுக்கு இந்த விஷயத்தைக் கணவனிடம் ஒரு கோடியாவது காட்டமுடியாமல் போனதா என்பதை நினைக்கையில் ஆச்சரியமும் கூட. அன்பு இருந்ததை ஒத்துக் கொண்டிருக்கிறாரே. அந்த அன்பின் அடிப்படையில் ஒரு பத்து நிமிஷம் பேசி இருக்கலாமோ!

    பதிலளிநீக்கு
  32. பிரிய விரும்பும் அளவுக்கு சிந்தித்தவர் பேச முயன்றிடாமலா இருந்திருப்பார்? அதற்குள் நாம் அதிகம் செல்ல முடியாதுதான். /taken for granted/ ஆணோ பெண்ணோ குடும்ப வாழ்வில் அடுத்தவர் மன உணர்வுகளை மதிக்காமல், புரிந்திட அக்கறை காட்டாமல் இருப்பதைதான் நானும் சொல்லியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  33. அந்தம்மா பேரில் தான் தப்பு. அவங்க தான் பேசியிருக்கணும். சும்மா பிள்ளைங்களை பெத்து வளக்க உதவி செஞ்சு, புருஷனுக்கு அப்பப்போ உதவி செஞ்சு, அவர் கலைக்கு ஆற்றின தொண்டைப் பத்திப் பெருமைப்பட்டு, அற்ப சாதாரணரா இருக்காம பெருந்தன்மையோட எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இருக்காம, புலம்பறாங்ளே? அதுவும் இப்பே..? சே, என்ன பெண் இவங்க!
    இப்ப எல்லாம் தெளிவாயிடுச்சு. பெண்கள் தினம்னு பேசற பேச்செல்லாம் இப்பல்ல புரியுது! எனக்கு எல்லாம் வெளங்கிடுச்சு!

    பதிலளிநீக்கு
  34. அப்பாதுரை ஃபுல் ஸ்விங்ல இருகாரு!:)))

    பதிலளிநீக்கு
  35. பொதுவா சாதனையாளர்கள் பெண்டாட்டி உணர்வுகளை மதிப்பதில்லை. பாலசந்தர்கூட சமிபத்தில் அவர் மனைவிக்கு நன்றி சொன்னார்- தன் சுதந்திரத்திற்கு தடை இல்லாமமல் வாழ்ந்ததற்காக!

    பதிலளிநீக்கு
  36. had a hearty laugh Appadurai, still laughing. அந்த அம்மா தன் கணவர் கிட்டே தன்னோட குறையைச் சொல்லியும் அவர் இப்படித் தான் நடந்துப்பேன்னு சொல்லிட்டார்னு எங்கேயானும் சொல்லி இருக்காங்களா அந்தப் பேட்டியிலே? இவங்க மனசிலே நினைச்சிருக்கிறதை அவர் எப்படிப் புரிஞ்சுக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க?? இது எதிர்பார்ப்பு இல்லாமல் வேறே என்ன? அவர் நினைச்சிருப்பார், நம்ம மனைவி நமக்கு சேவை செய்யறதிலேயே திருப்தியா இருக்கானு.

    வெளிப்படையாச் சொல்லாமல் எப்படித் தெரியும்? அதுவும் ஆண்களுக்கு?? சான்ஸே இல்லை! பெண் மனம் பெண்ணுக்கே புதிர். ஒரு ஆணுக்கு எப்படிப் புரியும்? என்னதான் மனைவியாகவே இருந்தாலும்??? அதோட நான் பெண்கள் தினம்னு எல்லாம் பேசற டைப் இல்லை! :)))

    பொதுவாகவே ஆண்கள் தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு வெளியே போனால் கூட காஃபி வேணுமா, ஐஸ்க்ரீம் வேண்டுமானு மனைவி கேட்டால் பட்டுனு வேண்டாம்னு சொல்லிடுவாங்க. அதே சமயம் மனைவி கிட்டே நீ வாங்கிக்கோனு சொல்லும் கணவன் குறைவு. ஏன் எங்களுக்குள்ளேயே இது நடந்திருக்கு! ஒரு தரம் நான் தான் உங்களுக்கு வேண்டாம்னா எனக்கு வேணும்னு சொல்லி இருக்கேன்! அவர் உடனே அட, இதை முன்னாடியே சொல்ல மாட்டியா?னு கேட்டார். ஆகக் கூடி இருபக்கமும் தப்பு. இல்லையா, என் மனசில் உள்ளதை நான் முன்னாலே சொல்லி இருக்கணும். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்கள் வாழ்க்கையில் கணவன், மனைவிக்குள்ளே பகிர்வதற்கு எத்தனையோ உண்டு.

    பதிலளிநீக்கு
  37. சுஜாதா நினைச்சிருப்பார், தன் மனைவி சாதாரணமாகத் தான் இருக்கானு. அவங்க உள்ளுக்குள்ளே புழுங்கறதை வெளிக்காட்டிக்காமல் இருந்திருக்காங்க. ஒரு தரமாவது சொன்னதாகச் சொல்லி இருக்காங்களா? குறைந்தது தன் குழந்தைகளிடமாவது பகிர்ந்துட்டு இருக்காங்களானு தெரியலை!

    பதிலளிநீக்கு
  38. சகிப்புத் தன்மை இருப்பது தப்பும் இல்லை. கொடுமையைச் சகிக்க வேண்டாம். அறியாமையைச் சகிக்கலாம். இங்கே சுஜாதாவுக்குத் தன் மனைவி குறித்த அறியாமையே நிறைய இருந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  39. //பெண்டாட்டி பிள்ளைகளை ஆத்திரத்தில் கத்தி மிரட்டி அடித்து உதைத்துத் துன்புறுத்தினாரா? அதைப் பற்றிப் பேட்டியில் ஏதாவது வந்திருக்கிறதா?//

    நிச்சயமா இருக்காது. மனைவியின் தேவை என்னனு வேணாப் புரிஞ்சிருக்காது. அல்லது தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஒரு மத்திய அரசு ஊழியர் மனைவியைக் கொடுமைப் படுத்தி இருந்தால் வெளியே வராமல் இருந்திருக்காது. கொஞ்சமானும் கசிஞ்சிருக்கும். எனக்குத் தெரிந்து அவர் தன் மனைவியைக் குறித்துப் பெருமிதமாகவே சொல்லி இருக்கார்.

    பதிலளிநீக்கு
  40. தினகரன் இணைப்பு வசந்தம் இதழில் திருமதி சுஜாதா பேட்டி பற்றிய பகிர்வைப் படித்தேன். குறிப்பிட்ட அந்தப் பத்திரிக்கை கிடைத்தால் படிக்க வேண்டும். அதற்கு அலைய வேண்டும். அது அவ்வளவு முக்கியமானதல்ல என்று தோன்றுகிறது.

    திரு சுஜாதா மிகப் பிரபலமான படைப்பாளி. அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப்பின் இப்போது போய் இப்படி ஒரு பேட்டியைப் பிரசுரிக்கும் பத்திரிகையின் நோக்கம் என்ன? குறிப்பாக, தமிழகப் பத்திரிகைகள் ஒன்றுமில்லாததை ஊதிப் பெரிதாக்கி பரபரப்பான செய்தியாகத் தந்து தங்கள் விற்பனையைப் பெருக்கிக் கொள்ளும் மலிவான யுக்தியைப் பல வருஷங்களாகக் கடைப்பிடித்து வருகின்றன. இது ஒரு பிழைக்கும் வழி.

    திரு சுஜாதா பல நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகளை எழுதிக்குவித்த அறிவுஜீவி. அவரது கதைகள் எல்லாமே அநேகமாக ஒரே மாதிரிக் கருவுடன்தான் இருக்கின்றன. பெயர்தான் வித்தியாசம்.

    இந்தத் தம்பதியரிடையே மனப்பிறழ்வு இருந்தது, காலம் கடந்து இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. திருமதி சுஜாதா இவ்வளவு நாளாக ஏன் வெளியில் சொல்லவில்லை என்பது பெரிய விஷயமல்ல. ஒரு பிரபலத்துவம் மூர்க்கமாக உடைக்கப்பட்டிருக்கிறது என்பது கூட அசாதாரணமானது அல்ல.

    மகாகவி பாரதி, தன் மனைவி, பெண்கள் உள்ளிட்ட குடும்பத்தை மிக நேசித்தவர்தான். அவரைப்பற்றிக் கூட சில அனாவசியத் தகவல்கள் வதந்திகளாக பரப்பப் பட்டதை அவர் மகளே தன நூலில் விவரித்திருக்கிறார்.

    ஆனாலும் ஒன்று புரிகிறது. அறிவுஜீவிகள் கூட புத்திஜீவிகள் அல்ல. மனசாட்சியையும் தூக்கி எறிந்தவர்கள் பலர். நாடறிந்த உண்மை இது. சுஜாதா அந்த ரகமா? நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.

    இருவரில் ஒருவர் காலமானபின் எஞ்சியிருப்பவர்கள் பெரும்பாலும் தன் கணவர்/மனைவி பற்றிப் புகழ்ந்து பேசி, எழுதியே வந்திருக்கிறார்கள். பலர் இதற்கு சாட்சியாக இருக்கிறார்கள்.

    விரைவில் திருமதி சுஜாதா கூட இந்த பேட்டியை மறுத்து 'நான் இப்படி எல்லாம் சொல்லவே இல்லை' என்றாலும் அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

    ஒரு படிப்பினை கணவன் மனைவியருக்குக் கிடைக்கிறது. சுஜாதா அவர் திருமதி போல இல்லாமல் இருப்பதே அது.

    சாத்தியமானால் நீங்கள் ஜெயித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

    தனிமனித சுபாவங்கள் நபருக்கு நபர் வேறுபடத்தான் செய்யும். இது இயற்கை.

    வசந்தம் வியாபார தந்திரம். நமேக்கேன் வம்பு!

    பதிலளிநீக்கு
  41. மொத்தத்தில் சுஜாதாவின் சில போலி பிம்பங்கள் உடைக்கப்பட்டுள்ளன.நமக்கு சில பாடங்கள் கிடைத்துள்ளன இப்பொழுது .சுஜாதாவின் எழுத்துகள் மட்டுமே மிச்சம்

    பதிலளிநீக்கு
  42. யாராவது சுஜாதாவின் எழுத்தை கவனமாகப்படித்து அவர் சிந்தனைகளை எடை போட்டு இருந்தால், இந்த அதிர்ச்சியெல்லாம் வராது..

    உனக்கு மட்டும் புரிஞ்ச்சிருச்சாக்கும்னு கேக்காதீங்க. You can always "theorize" what the author thinks from his characters and writings. Lots of time an author expresses his believes through the characters he creates. So, if you can read his mind, you will not be disappointed when the real part of him comes out.

    Now, here is something TJR wrote in "thEdal"..

    ///மது காரை ஓரமாக நிறுத்திவிட்டு கண்ணை மூடிக்கொண்டே சொன்னான்: “பொம்மனாட்டிகளுக்கு என்னப்பா வேணும்? அடுத்தாத்துக்காரியைவிட தான் செளக்கியமா இருக்கனும். நல்ல புடவை. சொந்த வீடு. தான் ரொம்ப நல்லவ. பெரியமனசு உள்ளவ. ஊதாரி- அப்படி இப்படினு காமிச்சுக்கணும். ஆமடையான் தன்கிட்ட எல்லாத்தையும் கலந்து ஆலோசிக்கணும். பத்துபேருக்கு நடுவிலே தங்கிட்ட ரொம்பப் பிரியமா இருக்கிறதா அவன் காமிக்கணும். மற்றவர்களைவிட தன்கிட்ட விஷேசமா, பிரியமா இருக்கிறதா அவன் காமிக்கணும். உலகம் வேற, தன் குடும்பம் வேறனு ஆமடையான் உணர்ந்து பிரிச்சு வச்சுண்டு, முக்கால்வாசி நேரமும் சுவருக்கு இந்தப்பக்கமே பொழுதைப்போக்கணும். அந்தப்பக்கத்தைவிட இந்தப்பக்கம்தான் பெரிசென்று தான் நினைச்சுண்டு இருக்கதாக நிரூபிக்கணும். இப்படியெல்லாம் இருந்தா அவ இல்லத்தரசி, கற்புக்கரசின்னு ராஜ்யம் நடத்த முடியும். இந்தப்பேர் எல்லாம் அவளுக்கு வரதுக்கு ஆமடையான் ஓயாம ஒழியாம ஒத்தாசை பண்ணிண்டே இருக்கணும். நான் சரிதாண்டீம்மான்னு என் ஆமயாள்ட்ட சப்ஜாடா ஒத்துக்கிண்டு நடத்திண்டு வரேன். உம்ம (சினேகிதன்) ராமரத்னம் அப்படியில்லே போலயிருக்கு. நான் நிம்மதியா இருக்கேன். அவரு இல்லே- அனாதைப் பள்ளிக்கூடம் விமர்சனம் எல்லாம் எனக்கும் ஜாம்ஜாம்னு நடத்தத்தெரியும். ஆனா நானும் ஷட்டகர் கிட்ட பறிகொடுத்துட்டு உக்கார்ந்து இருக்க முடியுமா நிம்மதியை? சரி... "கூலா" ஏதாவது சாப்பிடுவோம்” காரில் இருந்துகொண்டே கடைக்காரனைக் கூப்பிட்டார் “மது”.///

    He talks about WOMEN and what they want..

    NOw, you must recall, Sujatha was a BIG FAN of TJR and his writings!! May be because he believed what TJR says about women are sensible? It is just a thought!

    :)))

    பதிலளிநீக்கு
  43. இதைபோல திருமதி சுஜாதா பேசுவது இது முதல் தடவை இல்லையே. ஏற்கனவே திரு.சுஜாதா இருக்கும்போதே ஒரு முறை 'எனக்கு இவர் எழுதுவது எதுவுமே பிடிக்காது. எதையும் படிக்க மாட்டேன்' என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். யாருக்கும் இது நினைவில் இல்லாததால்தான் இப்போது அவர் ஏதோ புதிதாகச் சொல்லியிருப்பது போல தெரிகிறது.

    எல்லா ஆண்களுக்குமே தன்னைப் பெற்றவளைப் பிடிக்கும், தான் பெற்ற பெண்ணைப் பிடிக்கும். இந்த இருவருக்காகவும் உணர்ச்சி வசப்படுவார்கள். நடுவில் இருக்கும் மனைவி இரண்டாம் பட்சமே!

    திருமதி சுஜாதா சொல்லியிருப்பது பற்றி திரு வா. மணிகண்டன் சொல்லியிருப்பதை படியுங்கள்:
    http://www.nisaptham.com/2013/06/blog-post_2.html

    பதிலளிநீக்கு
  44. இதைபோல திருமதி சுஜாதா பேசுவது இது முதல் தடவை இல்லையே. ஏற்கனவே திரு.சுஜாதா இருக்கும்போதே ஒரு முறை 'எனக்கு இவர் எழுதுவது எதுவுமே பிடிக்காது. எதையும் படிக்க மாட்டேன்' என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். யாருக்கும் இது நினைவில் இல்லாததால்தான் இப்போது அவர் ஏதோ புதிதாகச் சொல்லியிருப்பது போல தெரிகிறது.

    எல்லா ஆண்களுக்குமே தன்னைப் பெற்றவளைப் பிடிக்கும், தான் பெற்ற பெண்ணைப் பிடிக்கும். இந்த இருவருக்காகவும் உணர்ச்சி வசப்படுவார்கள். நடுவில் இருக்கும் மனைவி இரண்டாம் பட்சமே!

    திருமதி சுஜாதா சொல்லியிருப்பது பற்றி திரு வா. மணிகண்டன் சொல்லியிருப்பதை படியுங்கள்:
    http://www.nisaptham.com/2013/06/blog-post_2.html

    பதிலளிநீக்கு
  45. ****Geetha Sambasivam said...

    சுஜாதா நினைச்சிருப்பார், தன் மனைவி சாதாரணமாகத் தான் இருக்கானு. அவங்க உள்ளுக்குள்ளே புழுங்கறதை வெளிக்காட்டிக்காமல் இருந்திருக்காங்க. ஒரு தரமாவது சொன்னதாகச் சொல்லி இருக்காங்களா? குறைந்தது தன் குழந்தைகளிடமாவது பகிர்ந்துட்டு இருக்காங்களானு தெரியலை!****

    நீங்க சொல்றதைப் பார்த்தால் மனைவியின் புழுக்கம், வருத்தம், வேதனை தெரியாமலே அவர் 50 ஆண்டுகள் மனைவியுடன் வாழ்ந்துவிட்டார். மேலும் மனைவி அவரிடம் ஒரு முறைக்கூட தன் குறைகளை, எதிரப்பார்ப்பை எடுத்துச் சொல்லவில்லை என்று சொல்வது போல இருக்கு..

    ஆக, தன் ரசிகர்களை திருப்திப்படுத்தி, கொடிகட்டி பறந்த ஒரு எழுத்தாளருக்கு தன் அருகில் உள்ள மனைவியின் மனநிலை தெரியவில்லை.மனைவி, அவர் சொல்லாமலே உணர்ந்துகொள்ள முடியாதவர் சுஜாதானு சொல்றாப்பிலே இருக்கு. அவர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத மனைவி அவரிடம் மனம்விட்டு ஒருபோதும் பேசவில்லை என்பது போலும் இருக்கு.

    Suppose, மனம்விட்டு தன் பிரச்சினையை சொல்லி இருந்தால், சுஜாதா மனைவிக்காக மாறியிருப்பாரா? என்பது என் கேள்வி!

    நீங்களேதான் இதுக்கு பதில் சொல்லணும்.

    இதை வேற மாரிச் சொன்னால்..

    ஆக, திருமதி சுஜாதா, தன் கணவரிடம், அவர் எழுத்துக்கள் தனக்கு ருசிக்கவில்லை! அவர் தன்னையும் குடும்பத்தையும் கவனிக்கணும்னு தைரியமாக சொல்லியிருந்தால், எல்லாமே சரியாகியிருக்கு.. இன்னைக்கு இந்த கட்டுரையே வந்திருக்காது? என்கிறீர்களா?


    இல்லைனா, அப்படி அவர் கணவனிடம் சொல்லியிருந்தாலும் சாதாரண ஆண்போலவே அதை கேட்டும், அவர் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கேட்காததுபோல் இருந்திருக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கு?

    ஆண்களைப் பற்றி பெண்கள் புரிந்துகொள்ளணும்!

    புரிஞ்சுக்கிட்டாங்களா? இன்னும் புதிராவே அவர்கள் பெண்களுக்கு இருக்காங்களா?

    என்கிற கேள்வியும் என்னுள் எழுகிறது.

    பதிலளிநீக்கு
  46. இதைப் பற்றி எழுத நினைத்தேன், well said வருண்.

    வாழ்க்கையின் துன்பங்கங்களுக்கேல்லாம் பெண் (மனைவி தான் காரணமென்ற பொருளில் சுஜாதா ஒரு கேள்வி பதிலிலோ கட்டுரையிலோ எழுதியிருக்கிறார். சொன்னால் உடனே ஆதாரங்களைக் கொண்டா என்று கிளம்பிவிடுவார்களே என்று வாளாவிருந்தேன். அதைத் தேடி எடுக்கும் வசதி எனக்கில்லை.

    ranjani narayanan, மனோ சாமிநாதனுக்கு ஒரு ஜே.

    கீதா சாம்பசிவம்: சுஜாதாவின் மனைவி பேசவில்லை/பேச முயற்சிக்கவில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்? அடிதடி கூட அவர் பிள்ளைகள் யாராவது முன்வந்து சொன்னால் தான் தெரியும். சுஜாதா எப்படிப்பட்டவர் என்பதல்ல விவாதம். ஒரு பெண் எத்தனை துன்பப்பட்டிருந்தால் எத்தனை அச்சப்பட்டிருந்தால் இப்படி இந்தக் கட்டத்தில் இதைச் சொல்வார்? - இந்த எண்ணம் தான் முக்கியம். அவருடைய மன நிலையை அவர் ஒருவரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்

    என்னதான் நான் அழுதாலும் சிரித்தாலும் பேசித் தீர்த்தாலும் அவருடைய நிலையில் எப்படி நடந்து கொண்டிருப்பேன் என்று என்னால் சொல்லவே முடியாது. அதனால் எல்லாவற்றையும் நான் செய்வது போல் சுலபமாகவோ கஷ்டப்பட்டோ அவரால் தீர்த்துக் கொண்டிருக்க முடியும் என்று என்னால் சொல்ல முடியவில்லை.

    படித்த பெண்கள் பொதுவாக எதற்கெடுத்தாலும் அழுவதில்லை. அதிலும் வசதியாக அன்பாக வளர்ந்த படித்த பெண்கள் அழுவது இன்னும் அரிது இந்தப் பெண் தாய் மடியில் 'கதறி'யிருக்கிறார் என்பதைப் படிக்கும் பொழுது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது அந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் அம்மாவோ சகோதரரோ யாரோ ஒருவர் 'நீ உன் எண்ணம் போல் பண்ணுமா, நான் துணை இருக்கேன்' என்று ஆதரவாக ஒரு வார்த்தை - எதுவும் செய்ய வேண்டாம் ஒரு வார்த்தை = சொல்லியிருந்தால் இன்றைக்கு இந்த பின்னூட்ட கொந்தளிப்புக்கான அவசியம் ஏற்பட்டிருக்காது. instead, 'குழந்தையை விட்டுறாதே, அவங்க முக்கியம், அனுசரிச்சுட்டுப் போ, அவனை மாதிரி ஒரு புருஷன் கிடைக்க உனக்கு கொடுத்து வச்சிருக்கணும், ஒரு ஹோமம் செய்றேன், அஷ்டோத்ரம் சொல்ரேன்' என்று பலவாறாகப் பேசியிருக்கலாமேன்று நினைக்கிறேன். அவர்கள் பெயரிலும் தப்பில்லை. அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி அந்த டிஎன்ஏவினால் தான் இன்றைக்கும் அப்படி நடந்துகொள்கிறோம். பரஸ்பர மதிப்புணர்வோடு, நம் வாழ்வு நம் கையில் என்று என்றைக்குத் துணிகிறோமோ அன்றைக்குத் தான் மனிதராவோம்.

    எல்லாக் கணவரும் ராமனில்லே.. ஓகே that came out wrong, ஆரம்பமே தப்பு. ராமன் மனுசன்லயே சேத்தியில்லே - i digress. எல்லா கணவரும் 'இப்படி' கிடையாது எல்லா மனைவியும் 'இப்படி' கிடையாது. கணவரை துச்சமாக எண்ணி பொதுவில் அவமதிக்கும் மனைவியரையும் பார்த்திருக்கிறேன். பயந்து தொடை நடுங்கும் கணவர்கள் ஓசைப்படாமல் மனைவியின் மரணத்தை பிரார்த்திப்பதும் அறிவேன். fear and shame are deep rooted diseases.

    நடுப்புற எங்கள் பிலாகுல அவங்களுக்கு பிடிக்காத பின்னூட்டம் வந்தா டக்குனு வெட்டிடறாங்க - 'எதை வேணாலும் எழுதுங்க'னு சொல்லிட்டு. பாருங்க ஒருத்தர் பாப்பானுங்க இப்படித்தான்னு எழுதி இருந்தாரு. அவருக்கு பதில் சொல்லலாம்னு பாத்தா பின்னூட்டத்தையே காணோம். அவரு சொன்னதுல ஒரு பாதி சரியா இருக்குமோனு பல சமயம் எனக்கும் தோணும்.

    பதிலளிநீக்கு
  47. ஒருவரின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறார் என்பது எவ்வளவு உண்மையோ .அது போல் அதே வெற்றியை அதே பெண்ணால் அசிங்கமாக மாற்றமுடியும் என்பதற்கோர் உதாரணம். ஆமாம் பிள்ளைகள் என்ன தறுதலைகளாகி விட்டனரா தாயாருக்கோ தம் மக்களுடன் அரை மணி நேரம் பேசித்தான் அவர்களின் நலம் அறிய முடியும்.ஆனால் தகப்பன் ஒரு "ஹலோ"வில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வான். அதனால், தான் தெரிந்து கொண்டளவில் கணவன் தெரிந்து கொள்ளவில்லை என்ற ஆத்திரம்.தமிழர்கள் போற்றிக் கொண்டாடும் ஒருவர் மீது சேற்றை வாரி இறைக்கிறமே என்கிற குறைந்த பட்ச சமூக அக்கறை இல்லாதவர்.கணவனின் புகழில் கல்லெறிந்து வாழ்க்கையா கிடைக்கப் போகிறது வேண்டுமென்றால் பாப்புலாரிட்டி கிடைக்கும். சொல்லப் படாத அன்பு உணரப் படாத போது கேட்கப் படாத தேவைகள் நிறை வேற்றப் படாமல் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை

    பதிலளிநீக்கு
  48. ***ஆனால் தகப்பன் ஒரு "ஹலோ"வில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வான். ****

    திருத்தம்! எல்லாவற்றையும் தெரிந்துகொண்டதாக நினைத்து முட்டாளாகவே வாழ்ந்து சாவான் என்று வரவேண்டும்!

    சுஜாதா எப்படி இப்படி மனைவி உணர்வுகளை மதிக்காகமல், மிதித்டு, அறியாமையில் வாழ்ந்திருப்பார் என்று இந்த சந்திருவின் இந்த கூமுட்டைத்தனமான வாக்கியத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்!

    பதிலளிநீக்கு
  49. தகப்பன் ஒரு ஹலோவில், ஹலோவுக்கு அர்த்தம் தேடுவான். அதை துரிதமாகத் தன்மைப்படுத்தி, தனக்கு அரை ஹலோவில் விவரம் சொல்லத் தெரியும் என்று பீற்றிக் கொள்வான்.

    சுஜாதாவைத் தமிழர்கள் போற்றிக் கொண்டாடட்டும், யார் தடுத்தது? இங்கே இந்தப் பெண் தன் கணவனின் புகழில் கல்லெறியவில்லை - இது கூடப் புரியவில்லை எனில் ஹலோவின் காரணம் இப்போது புரிகிறது. புரியவில்லையென்றால் சொல்கிறேன். இங்கே கணவனுக்குப் புகழே இல்லை. எழுத்தாளனுக்குத் தான் புகழ் - அதை அந்தப் பெண் எதையுமே செய்யவில்லை. கணவனைப் பற்றி இப்போது தான் அறிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறோம்.

    "புகழின் மேல் கல்லெறிந்து என்ன வாழ்க்கையா கிடைக்கப்போகிறது?" - எத்தனைக் கேவலமானக் கேள்வி! சொல்லப்படாத அன்பு உணரப்படுவது எப்படி சாத்தியம்?

    அந்தப் பெண்ணுக்கு ஒரு பாப்புலாரிடியும் கிடைக்காது. வாழ்க்கை வேண்டுமானால் கிடைக்கலாம் - அதுவும் அவர் சொற்படி பார்த்தால் இது தொடக்கம். இதை வைத்து சுஜாதாவின் புத்தகங்கள் வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் விற்கும். (ஒருவேளை..?)

    பதிலளிநீக்கு
  50. ஒருவரின் வெற்றிக்கு முன்னாலும் பின்னாலும் உடனும் இருப்பது அவர் தான். பெண் என்று சொல்லிச் சொல்லி பெண்ணை வெற்றிக்குப் பின்னாலேயே வைத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  51. விளம்பரம் சர்குலேஷன் ஏபிசி பார்வையில் பரபரப்பையும் மசாலாவையும் அள்ளி வீசும் ஊடகம் எப்போதாவது சமூக அக்கறையோடு செயல்படுகிறது - இந்தப் பேட்டியை வெளியிடத் துணிச்சல் வேண்டும். பத்திரிகையைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  52. இதிலே சமூக அக்கறை எதுவும் இருக்கிறதாத் தெரியலை. அதோடு சுஜாதா தன் மாமியாரை வெளிநாடு அழைத்துச் சென்றபோது, அல்லது வெளிநாட்டில் தங்கி இருந்த மாமியாரைச் சந்தித்தபோது(?) மாமியாரின் ஆங்கிலப் புலமையை மிகவும் சிலாகித்துப் பேசி இருக்கிறார். இத்தனைக்கும் அந்த அம்மா பள்ளிப் படிப்பை முடிக்கலைனு வேறே சொல்லி இருந்தார். இப்படிச் சொன்னவருக்கு மனைவியின் திறமைகள் தெரியாமலா இருந்திருக்கும்? குடும்பம் மனைவியின் மேற்பார்வையில் திறம்பட நடப்பதையே அவர் தனக்குக் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டமாக எண்ணித் தன் எழுத்துத் தொழிலைத் தடங்கலின்றி நிறைவேற்றி இருக்கலாமே.

    பதிலளிநீக்கு
  53. பொதுவாக நம் குடும்பங்களில் மனைவியிடம் ஐ லவ் யூ சொல்லும் வழக்கம் மிகக் குறைவு. இந்தக் கால கட்டத்தில் ஐடி மனிதர்கள் பெருகிவிட்ட காலத்தில் வேண்டுமானால் இருக்கலாம். அன்பை வெளிப்படுத்த, சொல்லத் தெரியாத மனைவியையும், கணவனையுமே அதிகம் பார்க்க முடியும்.

    பதிலளிநீக்கு
  54. பாஹே அவர்களின் கூற்றை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்.சந்துரு சொல்லி இருப்பதையும் ஆமோதிக்கிறேன்.

    //எல்லாக் கணவரும் ராமனில்லே.. ஓகே that came out wrong, ஆரம்பமே தப்பு. ராமன் மனுசன்லயே சேத்தியில்லே - i digress. //

    உண்மைதான் அப்பாதுரை. தான், தன் மனைவி,தன் குடும்பம் என நினைக்காமல் நாடு, நாட்டு மக்கள், நீதி நேர்மையுடன் கூடிய ஆட்சி என நினைத்ததாலேயே ராமன் மனைவியைத் துறக்க நேரிட்டது என்பதை எத்தனை பேர் புரிந்து வைத்திருக்கிறார்கள்? எல்லாரும் பார்ப்பது இப்போதைய காலகட்டத்தின்ன் சூழ்நிலையை ஒட்டியே தானே! அது எப்படி சாத்தியமாகும்?? சீசருக்கு என்றால் "சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்." என்போம். சீசருக்கு ஒரு மனைவியா? அல்லது இந்த வழக்குச் சொல் வந்ததற்குக் காரணம் எது? ஆனால் மனைவியைத் துறந்த பின்னரும் ராமர் வேறு கல்யாணம் செய்துக்கலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    அவரின் வாழ்நாள் முடியும் கடைசி நேரத்தில் கூடக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக லக்ஷ்மணனையும் துறக்க நேரிட்டது. காலதேவனுக்கு வாக்குக் கொடுத்த ராமர், துர்வாசரின் கோபத்துக்குப் பயந்து அவரை உள்ளே விட்ட லக்ஷ்மணனைத் துறந்தார். இப்படித் தன் சொல், செயல்,வாக்கு எல்லாத்திலேயும் நேர்மையையும், தர்மத்தையும் கடைப்பிடித்த ராமர் ஒரு மனிதரே இல்லை தான். தெய்வம் னு அதுக்குத் தான் சொல்றோம். :))))))

    இன்னிக்கு எங்க வீட்டு ராமருக்கு ஸ்பெஷலா இரண்டு முறை நிவேதனம் இதுக்காக! :)))))))

    பதிலளிநீக்கு
  55. வா. மணிகண்டன் எழுதி இருப்பதையும் ரஞ்சனியின் சுட்டியில் இருந்து படிச்சேன். அருமையாக, உண்மையாகச் சொல்லி இருக்கார். அவர் கூற்றை முழுதும் ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  56. வா மணிகண்டன் எழுதிய "சக்கிலிப் பையன்" மற்றும் "கவுண்ட பையன் வண்ணா பொண்ணு" போன்ற சாதீத்துவ "உயர்தர" நாவல்களுக்காக அவருக்கு "சுஜாதா விருது" வழங்கப்பட்டு உள்ளது. Now he is being "loyal" to Sujatha and justifies Sujatha no matter what he did, by doing some sort of "bribery" for the award he has been "GIVEN".

    Why can't women appreciate outbursts of another woman and her courage in revealing the other side of a man which has not been seen by the "blind world"???

    As you can see, Women are always the enemy of another woman even TODAY. They never able to appreciate the true feelings of another woman. When they dug their own grave, why do women blame men I always wonder..

    பதிலளிநீக்கு
  57. ****Geetha Sambasivam said...

    பொதுவாக நம் குடும்பங்களில் மனைவியிடம் ஐ லவ் யூ சொல்லும் வழக்கம் மிகக் குறைவு. இந்தக் கால கட்டத்தில் ஐடி மனிதர்கள் பெருகிவிட்ட காலத்தில் வேண்டுமானால் இருக்கலாம். அன்பை வெளிப்படுத்த, சொல்லத் தெரியாத மனைவியையும், கணவனையுமே அதிகம் பார்க்க முடியும்.****

    அன்பை வெளிப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஐ லவ் யு சொன்னால்தான் அன்பு பரிமாற்றம் நடக்குமா என்ன? In reality, long-lasting relationships are not bound by "how many I love you"s were shared between the couple! LOL

    பதிலளிநீக்கு
  58. //தகப்பன் ஒரு "ஹலோ"வில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வான்.// நல்ல ஜோக்!

    'என் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியாது' என்பது தான் பெரும்பாலான ஆண்கள் சொல்லிப் பெருமைப்படும் விஷயம். எத்தனை அசிங்கம் இது!

    பதிலளிநீக்கு
  59. //Why can't women appreciate outbursts of another woman and her courage in revealing the other side of a man which has not been seen by the "blind world"??? //

    சுஜாதா உயிருடன் இருக்கையிலேயே அவர் முகத்துக்கு நேரே சொல்லி இருந்தால் நிச்சயமாப் பாராட்டி இருப்பேன். இப்படி முதுகுக்குப் பின்னால், அதுவும் செத்து இத்தனை வருஷங்கள் கழிச்சுச் சொன்னது தான் எனக்குப் பிடிக்கலை. ஆரம்பத்திலே இருந்து இது தான் என் கருத்து. மற்றபடி இதிலே அவருக்கு தைரியம் இருப்பதாகப் பாராட்ட எதுவும் இல்லை! கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்! :(((((

    பி.கு. நான் சுஜாதா என்னும் எழுத்தாளரின் பரம ரசிகை எல்லாம் இல்லை. அவரின் எழுத்துக்களைக் கிடைத்தால் படிக்கும் ரகமே தவிர, தேடிப் பிடித்துப் படித்து, அவரைக் குறித்த தகவல்கள் தப்பாய் வரக் கூடாதேனு கவலைப்படும் ரகமும் இல்லை.

    முரளிதரனின் பதிவில் படிச்சேன்; இந்தப் பேட்டியைக் குறித்து வெளிநாட்டு நண்பர்/அல்லது நெருங்கிய உறவினர் அந்த அம்மாவை விசாரிச்சப்போ, பேட்டின்னு எதுவோ கேட்டாங்க, என்னமோ உளறினேன்னு சொன்னதாகப் படிச்சேன். இதை வைச்சு நாமெல்லாம் விவாதம் செய்யணுமானு வெட்கமாப் போச்சு! :))))))

    பதிலளிநீக்கு
  60. திருமதி ஸுஜாதாவின் இன்டர்வியூ படித்தேன். வாழ்க்கை வாழ்ந்தாயிற்று. இப்பேோது தனி மனுஷியாய் சிந்திக்கும் போது எத்தனையோ விதமான எண்ணங்கள் ஏற்படும். தன்னை, ஒரு மனுஷியாய் வெளிப்படுத்த இயலாது இருந்து விட்டோமே என்று நினைக்கத் தோன்றும்.
    ஒரு ப்ரஷர் குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே அளவு நீராவி உள்ளிருக்கும் போது.வெயிட் தூக்கியடிப்பதில்லை.
    அதே நீராவி வெகுநேரம் இருந்து விட்டால், காஸ்கட் ரிலீஸ் திட்டம் மூலமாவது, நீராவியை வெளியேற்றி விடுகிரது. அவ்வளவுதான்.
    திரும்ப காஸ்கட் பொருத்தினால் ஒழுங்காக வேலை செய்கிறது.
    அதைப்போலத்தான் இதுவும்.
    வாழ்க்கைப் பட்டவரின் போக்கில் போய்தான் குடும்பத்தை நிர்வகிக்க முடிந்தது. முடியும். இப்படிதான் போதிக்கப் பட்டது.
    அடுத்து, குந்தைகளின் வளர்ப்பு, அவர்களின் எதிர் காலம்,பழகிப்போன வாழ்வு,கவுரவம், இந்த நோக்கில் வாழ்க்கை வாழ்ந்தாகிரது.
    பிள்ளைகள் சுதந்திரப் பரவையாக வாழ்க்கை அமைத்துக் கொள்கிரார்கள்
    அவர்களாலும் ஒரு அம்மாவின் சின்ன ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. அதிலும்---
    பொல்லாத கணவரில்லை. மனைவியின் பெயரையே தனக்கு சூட்டிக்கொண்டு எழுதின எழுத்தாளர்.
    பொருமையாக, பணி செய்து கொண்டு வாழ்ந்தாலும், கணவரின் இழப்பு,
    எப்படியெல்லாம் அமைதியாக வாழ்ந்துவிட்டு,தன்னைப் பற்றியே யோசிக்காமல் வாழ்ந்து விட்டு , யோசனைகளே செய்யும் படியான ஒரு தருணத்தில், நீராவி அதிகமாகி, வெயிட்வால்வ் பறந்துபோய், உள்ளிருக்கும் பருப்பு உச்சத்தில் சிதருகிரது. ஒட்டிக் கொள்கிறது.
    அவ்வளவுதான். குக்கர் யதாஸ்தானம் .
    பழைய அனுபவமுள்ள குக்கர். வெளியில் வந்ததை சுத்தமாக்க வேண்டியதுதான்.
    அக்ரஹாரம் ஒன்றும் தப்பான இடமில்லை. எல்லாம் கலந்த இடம்தான்.
    வாழ்க்கை பலவிதம். ஏதோ ஒருநாள் மனது வெளிப்பட்டது. தன் மனதை வெளிப்படுத்தியதே தவிர குறை சொன்னதாகக் கொள்ளக் கூடாது.

    பெண்களுக்கும் தனக்கென ஒரு வாழ்வு வாழவில்லையே என்ற ஆதங்கம் உண்டு.
    ஒவ்வொருவர் மனதிலும் ஒரு கதை இருக்கிறது.
    பேர்பெற்றவர். அச்சேறுகிரது.
    எதுவும் தப்பில்லை. ஐயோ பாவம் என்று மனதில் எண்ணி மறந்து விடவேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  61. இங்கயும் இதுதான் ஒடிக்கிட்டிருக்கா? இதைப் பதிவா எழுதிட்டு நான் படாத பாடு பட்டுக்கிடிருக்கேன்.
    எஸ்கேப்..

    பதிலளிநீக்கு
  62. **** Geetha Sambasivam said...

    //Why can't women appreciate outbursts of another woman and her courage in revealing the other side of a man which has not been seen by the "blind world"??? //

    சுஜாதா உயிருடன் இருக்கையிலேயே அவர் முகத்துக்கு நேரே சொல்லி இருந்தால் நிச்சயமாப் பாராட்டி இருப்பேன். முரளிதரனின் பதிவில் படிச்சேன்; இந்தப் பேட்டியைக் குறித்து வெளிநாட்டு நண்பர்/அல்லது நெருங்கிய உறவினர் அந்த அம்மாவை விசாரிச்சப்போ, பேட்டின்னு எதுவோ கேட்டாங்க, என்னமோ உளறினேன்னு சொன்னதாகப் படிச்சேன். இதை வைச்சு நாமெல்லாம் விவாதம் செய்யணுமானு வெட்கமாப் போச்சு! :))))))

    June 4, 2013 at 11:58 AM*******

    அவங்க யாருக்கும் தெரியாமல் ஒரு "ப்ளாக்" ஆரம்பிச்சு தன் கருத்தை சொல்லியிருந்தாலொழிய அது நடந்து இருக்காது.:)

    எனக்கென்ன புரியலைனா, அவர் கணவர் மேல் அவருக்கு இல்லாத அக்கறை, உங்களுக்கும் இந்த "பெண்ணியவாதி" போர்வையில் வாழும் உண்மை விளம்பி எல் எ ராமுக்கும் எங்கே இருந்து வந்தது???

    You know who your believing? YOU DONT KNOW!!!

    A guy who has been accused of behaving like a MCP to another girl, not too long ago. Do you know that story?? And he threatened her mother that I will file a law suit if you make such "baseless" accusations and got away with it. I am talking about another woman issue here namely Chimanyi issue.

    You just TRUST every word said by a MAN over a conversation between two woman??

    Why??

    After the interview, she has been told that you should not have done this BY MEN who rule you all these years!

    Now, she that feels guilty and scared for speaking her mind and truth to another woman!

    See how you have been manipulated and RULED by MEN all these years!

    I really feel sorry for WOMEN! :)

    You also, dont let MEN to learn what women want either! :)))



    ***இப்படி முதுகுக்குப் பின்னால், அதுவும் செத்து இத்தனை வருஷங்கள் கழிச்சுச் சொன்னது தான் எனக்குப் பிடிக்கலை. ஆரம்பத்திலே இருந்து இது தான் என் கருத்து. மற்றபடி இதிலே அவருக்கு தைரியம் இருப்பதாகப் பாராட்ட எதுவும் இல்லை! கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்! :(((((***

    I dont think so! this helps other women to speak out loudly EARLIER. But women like you dont let it happen by taking sides with manipulative men who can easily fool you as we have been doing for thousands of years! :)))

    பதிலளிநீக்கு
  63. ***T.N.MURALIDHARAN said...

    இங்கயும் இதுதான் ஒடிக்கிட்டிருக்கா? இதைப் பதிவா எழுதிட்டு நான் படாத பாடு பட்டுக்கிடிருக்கேன்.
    எஸ்கேப்..

    June 4, 2013 at 2:09 PM***

    என்ன முரளி, இதுக்கே பயந்தா எப்படி? எதிர்காலத்தில் நீங்க நெறைய சந்திக்கணும். மனச தேத்திக்கோங்க! :))))

    பதிலளிநீக்கு
  64. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  65. Finally, thanks to Sriram (the blog owner) for letting me get involved in this debate by NOT DOING COMMENT MODERATION! If he enabled that that would have SHUT down my thoughts and I would not have shared what I shared here! :)

    பதிலளிநீக்கு
  66. வருண் சொல்கிறார்
    திருத்தம்! எல்லாவற்றையும் தெரிந்துகொண்டதாக நினைத்து முட்டாளாகவே வாழ்ந்து சாவான் என்று வரவேண்டும்!
    சுஜாதா எப்படி இப்படி மனைவி உணர்வுகளை மதிக்காகமல், மிதித்டு, அறியாமையில் வாழ்ந்திருப்பார் என்று இந்த சந்திருவின் இந்த கூமுட்டைத்தனமான வாக்கியத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்!
    பதில்: (ஆனா பெண்ணா என்று புரியவில்லை )வருண், அவர் ஒன்றும் முட்டாளாக இருந்து சாகவில்லை . அறிவுசார் தமிழ் உலகம் போற்றும் தலை சிறந்த எழுத்தாளனாக இருந்துதான் இறந்தார். அறிவுள்ளவனுக்குத தெரியும் பிள்ளைகளைப் பற்றி ஆனால் உலகில் எவனுக்கும் மணைவியைப் பற்றி தெரிந்து கொள்ளமுடியாது என்பது காலங்காலமாக உள்ள உண்மை. அதற்கும் கூறு கெட்டதனமா எதையாவது பதிலாகப் போடுவீர்கள்.பொது இடத்தில் ஒழுக்கமாக கருத்துச் சொல்ல வக்கில்லாமல் கூமுட்டைத்தனம் என்று கூறுவீர்கள் ஏனென்றால் அதற்கும் கீழ்கண்டவாறு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள். "Finally, thanks to Sriram (the blog owner) for letting me get involved in this debate by NOT DOING COMMENT MODERATION! If he enabled that that would have SHUT down my thoughts and I would not have shared what I shared here! :) ""
    வருண்: Why can't women appreciate outbursts of another woman and her courage in revealing the other side of a man which has not been seen by the "blind world"???
    பதில்:கணவன் இறந்த பின் அவரது மறுபக்கத்தைப் பற்றி அதுவும் ஐந்து வருடங்கள் கழித்து ஆயிரம் பேசலாம் ஏனென்றால் மறுப்பதற்கு சம்பந்தப் பட்ட ஆளில்லை. கணவருக்கு ஆண்மை இல்லை என்று கூட சொல்லலாம் வேறு எவரும் அது பற்றி ஒன்றும் சொல்லமுடியாது என்பதுதான் உண்மை ஆனால் இவ்வளவு உறுதியாக குருட்டு உலகம் என்று சொல்வதற்கு உமக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதுதான் எனக்குப் புரியவில்லை !!!!!!உமக்கு புரிகிறதா?
    வருண் : "As you can see, Women are always the enemy of another woman even TODAY. They never able to appreciate the true feelings of another woman. When they dug their own grave, why do women blame men I always wonder.. ..."
    As you can see, Women are always the enemy of another woman even TODAY. They never able to appreciate the true feelings of another woman. When they dug their own grave, why do women blame men I always wonder..
    பதில் ;என்ன மாதிரியான வக்காலத்து பெண்ணுக்குத்தெரியாதாம் பெண்ணைப் பற்றி
    கேள்வி:. அன்பை வெளிப்படுத்த, சொல்லத் தெரியாத மனைவியையும், கணவனையுமே அதிகம் பார்க்க முடியும்.****
    பதில்:சொல்லும் போது, கூடக் குறைய போனால் அது நடிப்பாகதான் தெரியும் என்பதால் அறிவு ஜீவிகள் இயல்பாக நடந்து கொள்வார்கள். தனது மனைவியை தன்னளவிற்கு அறிவுள்ளவராக நினைத்து இருக்கலாம்.
    வருண்.:அன்பை வெளிப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஐ லவ் யு சொன்னால்தான் அன்பு பரிமாற்றம் நடக்குமா என்ன? In reality, long-lasting relationships are not bound by "how many I love you"s were shared between the couple! LOL
    பதில்: அட அறிவு ... அதைதானே நான் என் பதிவில் சொல்லியுள்ளேன்

    பதிலளிநீக்கு
  67. கீதா: சுஜாதா உயிருடன் இருக்கையிலேயே அவர் முகத்துக்கு நேரே சொல்லி இருந்தால் நிச்சயமாப் பாராட்டி இருப்பேன். முரளிதரனின் பதிவில் படிச்சேன்; இந்தப் பேட்டியைக் குறித்து வெளிநாட்டு நண்பர்/அல்லது நெருங்கிய உறவினர் அந்த அம்மாவை விசாரிச்சப்போ, பேட்டின்னு எதுவோ கேட்டாங்க, என்னமோ உளறினேன்னு சொன்னதாகப் படிச்சேன். இதை வைச்சு நாமெல்லாம் விவாதம் செய்யணுமானு வெட்கமாப் போச்சு! :
    பதில்: உயிருடன் இருக்கும் போது சொன்னால் வருமானம் போய்விடும். அல்லது பெண் புத்தி..................அவரின் புகழால் வருமானம் வந்த பொழுது, ஏதாவது சொல்லி வருமானத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம். ஆனால் கடநத 5 வருடங்களாக வருமானம் ஏதுமில்லை என்பதால் அவரது கொடுமை தெரிகிறது.
    வருண்:அவங்க யாருக்கும் தெரியாமல் ஒரு "ப்ளாக்" ஆரம்பிச்சு தன் கருத்தை சொல்லியிருந்தாலொழிய அது நடந்து இருக்காது.:
    பதில்; இவ்வளவு அதாவது ரங்கராஜனை விட கல்வியில் முன்னேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் பிளாக் ஆரம்பிக்கறது ஒன்றும் பெரிய விஷயமில்லை ஆனால் வருமானத்திற்கு இடையூறு ஏற்பட்டால் என்ன செய்வது. எனக்கென்ன புரியலைனா, அவர் கணவர் மேல் அவருக்கு இல்லாத கோபம், உங்களுக்கு எங்கே இருந்து வந்தது???
    வருண்:I dont think so! this helps other women to speak out loudly EARLIER. But women like you dont let it happen by taking sides with manipulative men who can easily fool you as we have been doing for thousands of years! :)))
    பதில் : ஒரு ஆண்மகனால் இந்தக் கேள்வியை கேட்டிருக்க முடியாது.முடிவில் 2000 வருடங்களாகப் கடைப் பிடிக்கப் படும் உண்மையை சொல்லியாக வேண்டும். -
    புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
    ஏறுபோல் பீடு நடை.
    புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.
    புகழ் புரிந்த இல், இறந்த பொழுது அதாவது அறுபது வயதுக்கு மேல் இல்லாது போய்விட்டது ஆனாலும் அதானால் ரங்கராஜனுக்கோ( சுஜாதா என்று சொல்ல அருவருப்பாக இருக்கிறது ,ஏனென்றால் தனது புகழ் அனைத்தும் மனைவிக்கே சேரவேண்டும் என்ற அவரது முன்யோசனை இல்லாத புத்தியினால் .) அவரது புகழுக்கோ ஓன்றும் இழப்பில்லை சூரியனைப் பார்த்து குலைக்கும் நாயாகி விட்டார் சுஜாதா
    தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
    கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.
    இந்த வலைத்தள உரிமையாளர்க்கு ,"இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க! "என்று சொல்லிவிட்டு எழுதுகிறவனை "கூமுட்டை "என்று கேவலப்படுத்துவதுதான் உங்கள் எழுத்து தரும்மா?

    பதிலளிநீக்கு
  68. சந்துரு அவர்களே!

    உங்க கோபம், எரிச்சல் எல்லாம் புரிகிறது. ஆனால் ஒரு ஹலோ வில் எல்லாவற்றையும் குடும்பத்தலைவன் புரிந்துகொள்வான் என்பதில் "ஆணின செருக்கு" "அறியாமை" "முட்டாள்த்தனம்" தான் தலை தூக்கித் தெரிகிறது.


    "குருட்டு உலகம்"னு சொல்ல எனக்கு தகுதியில்லை என்று வாதிடும் நீங்கள், உலகத்தில் உள்ள அப்பாமார்கள் எல்லாம் "ஹலோ"வில் எல்லாத்தையும் அலசிவிடுவார்கள் என்பது எந்த வகையச்சாரும்??? I am sorry, it only shows your ignorance if you meant it! Did you meet all the fathers in the world? There is a spectrum of fathers! From most ignorant to highly intelligent! Do you have any idea??

    Because men think they understood everything but THEY DONT! They dont understand what their wives want! They dont understand what their daughter wants! GET THAT before it is getting too late! NOW!

    Let me tell you this. Men like you and Sujatha think that THEY KNOW everything and that they understood all about human beings and women. That's how you underestimate women and ignore their real feelings and live in your own world.

    When women speak out. You think whatever issues they bring up are UNIMPORTANT. That is the kind of attitude you have. That's why Sujatha ignorantly said, love is all about hormones! Now his wife does not seem to agree with such things. That's why he is in trouble now!

    பதிலளிநீக்கு
  69. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  70. ****பதில்: உயிருடன் இருக்கும் போது சொன்னால் வருமானம் போய்விடும். அல்லது பெண் புத்தி..................அவரின் புகழால் வருமானம் வந்த பொழுது, ஏதாவது சொல்லி வருமானத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம். ஆனால் கடநத 5 வருடங்களாக வருமானம் ஏதுமில்லை என்பதால் அவரது கொடுமை தெரிகிறது.***

    Are you SERIOUS here??!! Who worries about MONEY and INCOME? ரங்கராஜன் அல்லது அவர் wife?? Men or Women?

    நீங்க சீரியஸா பேசுறேளா இல்லைனா காமெடி பண்ணுறேளா? இல்லைனா சீரியஸா காமெடி பண்ணுறேளா?னு தெரியலை சந்துரு.

    எதுவாயிருந்தாலும் சகிக்கலை, போங்கோ!

    பதிலளிநீக்கு
  71. ***பதில் : ஒரு ஆண்மகனால் இந்தக் கேள்வியை கேட்டிருக்க முடியாது.***

    அட அட அட அடா என்னா ஒரு தர்க்க வாதம்! தர்க்க சாஸ்திரத்தை கரைச்சு குடிச்சு இருக்கேள், போங்கோ!

    You have not seen such men in your life because you don't open your eyes and see the world.

    This is a very big world Chandru. You have not seen enough of it. Open your eyes and mind and see before it is getting too late! OK?

    பதிலளிநீக்கு
  72. ***இந்த வலைத்தள உரிமையாளர்க்கு ,"இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க! "என்று சொல்லிவிட்டு எழுதுகிறவனை "கூமுட்டை "என்று கேவலப்படுத்துவதுதான் உங்கள் எழுத்து தரும்மா?***

    Why are you blaming him? You may be knowing him better than I am. I am here because the comment moderation was not enabled. And I am responsible for any comments I write, NOT HIM! You could always ask him to clean up! Then that would make your statement as a the "CORRECT ONE". But it is NOT.

    பதிலளிநீக்கு
  73. Somebody please tell me..is chandru an idiot or is he just being idiotic?

    பதிலளிநீக்கு
  74. வருண்:உங்க கோபம், எரிச்சல் எல்லாம் புரிகிறது. ஆனால் ஒரு ஹலோ வில் எல்லாவற்றையும் குடும்பத்தலைவன் புரிந்துகொள்வான் என்பதில் "ஆணின செருக்கு" "அறியாமை" "முட்டாள்த்தனம்" தான் தலை தூக்கித் தெரிகிறது.
    "குருட்டு உலகம்"னு சொல்ல எனக்கு தகுதியில்லை என்று வாதிடும் நீங்கள், உலகத்தில் உள்ள அப்பாமார்கள் எல்லாம் "ஹலோ"வில் எல்லாத்தையும் அலசிவிடுவார்கள் என்பது எந்த வகையச்சாரும்??? I am sorry, it only shows your ignorance if you meant it! Did you meet all the fathers in the world? There is a spectrum of fathers! From most ignorant to highly intelligent! Do you have any idea??
    நான்:"ஆணின செருக்கு" என்பதில் தெளிவாகத் தெரிகிறது உயர்திரு நங்கையின் பண்பு. பத்துப் பிள்ளைகளில் ஒருவனாக வளர்ந்து தந்தையைக் கண்டவன், மூன்று பிள்ளைகளுக்கு தந்தையாக இருப்பவன் . பல தந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் நண்பனாக இருப்பவன், இதை விட என்ன தகுதி வேண்டும். ஒரு பாணைச் சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம் சொல்லும். இப்பொழுதாவது யார் முட்டாள் என்று தெரியட்டும்..
    வருண்: ***பதில் : ஒரு ஆண்மகனால் இந்தக் கேள்வியை கேட்டிருக்க முடியாது.*** அட அட அட அடா என்னா ஒரு தர்க்க வாதம்! தர்க்க சாஸ்திரத்தை கரைச்சு குடிச்சு இருக்கேள், போங்கோ!
    You have not seen such men in your life because you don't open your eyes and see the world. This is a very big world Chandru. You have not seen enough of it. Open your eyes and mind and see before it is getting too late! OK?
    நான்:சாஸ்திரத்தில் இன்னொன்றும் சொல்கிறேன். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கதையாக ரங்கராஜனின் மனைவி சுஜாதாவை ஆதரிப்பதில் , ரங்கராஜன் என்ற பார்ப்பானுக்கும் அல்லது அவனது புகழுக்கும் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற குள்ள நரித்தனமும் தெரிகிறது.
    அப்பாத்துரை: Somebody please tell me..is chandru an idiot or is he just being idiotic?

    நான் : உனது புரபைல் போட்டோவைப் பார்த்தேன். அதில் இரு நாய்களைக் கண்டேன். சரி கண்ட நாய்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவு பன்னிவிட்டேன்.முடித்துக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  75. ***நான்:"ஆணின செருக்கு" என்பதில் தெளிவாகத் தெரிகிறது உயர்திரு நங்கையின் பண்பு. பத்துப் பிள்ளைகளில் ஒருவனாக வளர்ந்து தந்தையைக் கண்டவன், மூன்று பிள்ளைகளுக்கு தந்தையாக இருப்பவன் . பல தந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் நண்பனாக இருப்பவன், இதை விட என்ன தகுதி வேண்டும். ஒரு பாணைச் சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம் சொல்லும். இப்பொழுதாவது யார் முட்டாள் என்று தெரியட்டும்..****

    உங்க அனுபவத்தை வைத்து உங்களைப்பற்றி, உங்க குடும்பத்தினரைப்பற்றி விமர்சிக்க மட்டுமே உங்களுக்குத் தகுதி இருக்கு. உலகம் மிக மிகப் பெரியது. அதில் பலவிதமான தந்தைகள் இருக்காங்க.அதைத் தெரிந்து கொள்ளவும்.
    உங்க பழமொழி, ஒரு சோறு பதம் என்பதெல்லாம் வெறும் ஏட்டுசுரைக்காய், கறிக்கு உதவாது.

    சுஜாதாவும் நீங்களும் கோடியில் இருவர். உலகில் உள்ள பழமொழிகளெல்லாம் 99% சரியாக வந்தாலும் அதில் விழும் 1% இல் நீங்களும் சுஜாதாவும் விழலாம். There are exceptions for any damn thing!

    I am not trying to convince you but I am justifying why I thought what you said as "dads can figure out anything from a "hello" " is an ABSURD statement!

    Nice knowing you Chandru. All kinds of people to make the world. Of course, you are also part of the world. I am learning how could one live ignorantly all their whole life from YOU. You have taught me something being a "great example" and THANK YOU for that! Take care! :)

    பதிலளிநீக்கு
  76. Mr. Appadurai: Please let Chandru go and forgive him as he is helpless. He does not seem to understand. We need to forgive ignorant people bcos it is not their fault for being what they are now. It is "Bhagavan's! :-)

    பதிலளிநீக்கு
  77. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  78. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  79. நண்பர்களே! வணக்கம்.
    எல்லோருக்கும் அவரவர்களின் கருத்துகளை நாகரீகமான முறையில் பதிய உரிமை இருக்கின்றது. ஒருவருடைய கருத்து மற்றவருக்கு ஏற்புடையது இல்லை என்றால், அதையும் நாகரீகமான வார்த்தைகளில் பதியலாம். அதை விடுத்து, கருத்து உரைப்பவர்களின் மனம் புண்படும் வகையில், தனிப்பட்ட முறையில் மற்றவர்களை தாக்கி, தாழ்த்தி பதிய வேண்டாம் என்று இரு கரம் கூப்பி உங்கள் எல்லோரையும் வேண்டிக் கொள்கின்றேன். சில கருத்துகளை வேறு வழியில்லாமல் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவர்கள் என்னை மன்னிக்க வேண்டுமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
    ஆசிரியர் குழு சார்பாக :
    கௌதமன்.

    பதிலளிநீக்கு
  80. This blog is run by bunch of people? I am learning that!

    I care less when administrator removes my "politically incorrect" response, which happens to me all the time after an argument.

    Let me suggest you something which is good for your blog. You could remove the "politically incorrect" post COMPLETELY or you can direct that to your "spam" box and enable comment moderation. No one is perfect! We all get carried away now and then unless we come in an "anonymous id" for doing "the dirty job". People generally get offended when their response is removed by the administrator and that is "revealed" to the world like you did. They will go away from your blog for EVER! Thats not good for any blog.

    I am not here to advise you what you should do and how you should do and all but.. if you want more readers and responses to run your blog successfully, try not to do what you have just done! I mean remove the comment completely or direct them to spam box! That's my two cents! :)

    Take care, guys!

    பதிலளிநீக்கு
  81. சில கருத்துக்களை? ஹிஹிஹி.. நல்ல ஜோக் கௌதமன்.
    நீக்காத கருத்துக்கள் அப்படியே நாகரீகத் தோரணமா மணக்குதே? பலே.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!