புதன், 14 செப்டம்பர், 2011

'கே'யைத் தேடி - புத்தகம்

                   
அப்படி இப்படி என்று ரொம்ப நாட்களாக ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த கதாசிரியர், கடைசி மூன்று அத்தியாயங்களை, புத்தகத்தில் சேர்த்து, (பக்கம் எண் 44, 45 & 46 to 49) கதை - அதை முடித்துவிட்டார். 

அதை நாங்களும் இங்கே வெளியிட்டுவிட்டோம். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும், வாசகர்கள் எழுதிய கருத்துரைகளையும், அந்தந்த அத்தியாயத்திற்கு இறுதியில் அப்படியே வெளியிட்டுள்ளோம். ஏற்கெனவே தொடர் வெளியானபொழுது விடாமல் படித்த விடாக் கண்டர்கள், நேராக பக்கம் எண் 44 சென்று, அத்தியாயம் பதினான்கு முதல் தொடர்ந்து படிக்கலாம். பயப்படாதீர்கள் - பக்கம் எண் நாற்பத்து நான்கு முதல் நாற்பத்தொன்பது வரையிலும்தான் புத்தகத்தில் உள்ளது. 

இந்த ஸ்க்ரிப்ட் (Scribd)  ஜன்னலில் ஒரு சவுகரியம் - அதிக இடம் பிடித்துக்கொள்ளாது; விருப்பப்பட்ட பக்கம் படிக்க, கீழே உள்ள ஜன்னலில், சரியான பக்க எண் கொடுத்து சொடுக்கினால், அந்த பக்கம் ஜன்னலில் வரும். இங்கே படிக்க நேரம் இல்லாதவர்கள், மொத்த புத்தகத்தையும் தரவிறக்கம் செய்து, பென்-டிரைவில் காபி செய்து எடுத்துக்கொண்டு, பிறகு உங்கள் கணினியில் நேரம் கிடைக்கும்பொழுது படித்துக் கொள்ளலாம். 

உங்கள் கருத்துகள் மிகவும் வேண்டி, விரும்பி வரவேற்கப்படுகின்றன. 
நன்றி.
வணக்கம். 


எப்படியாவது தப்பிக்கவேண்டும்

8 கருத்துகள்:

  1. பதிவிறக்கம் செய்து விட்டேன்.. பொறுமையாக படித்துக் கொள்கிறேன்.. நிஜமாகவே தொடர் பதிவு படிக்கும் அளவுக்கு பொறுமை இல்லை..

    பதிலளிநீக்கு
  2. படித்துவிட்டு சொல்கின்றேன். . .நன்றி சகா. . .

    பதிலளிநீக்கு
  3. பென் டிரைவ் ஐடியாவுக்கும் ஸ்க்ரிபிட் ஆப்ஷனுக்கும் நன்றி .... எப்படியோ இறக்கி படிச்சிற்லாம்...

    பதிலளிநீக்கு
  4. நிதானமாக படித்து பின்னுட்டமிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. சுவாரஸ்யமான முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. மெகா சீரியல்களை தீபாவளிக்கு [அல்லது தேர்தலுக்கு] முன் அவசர அவசரமாக முடிப்பது போல் முடித்து விட்டீர்கள். கதாசிரியர் வெளிநாட்டுப் பயணம் எதுவும் செல்கிறாரா என்ன ?

    பதிலளிநீக்கு
  7. டவுன்லோடு செய்தவர்கள், படித்த பிறகு, இந்தப் பதிவில் கருத்துரை சொல்லலாம்.
    ஏற்கெனவே பதின்மூன்று + இரண்டு அத்தியாயங்கள் படித்த நண்பர்கள் யாரும் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை போலிருக்கிறது!
    கதாசிரியர் அடுத்த கதை (எட்டெட்டு) எழுதத் தொடங்கிவிட்டார்.
    முதல் கதையை விட இது improved ஆக இருக்கும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  8. நிதானமாக படித்து விட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!